என் மகள் பாலர் வகுப்பில்(kindergarten)படித்தபோது அவளுக்கு தினமும் வீட்டுப்பாடங்கள் தரப்பட்டன. வியாழன்தோறும் ஒரு புத்தகத்தைப் படித்து அதில் முதலில், நடுவில் இறுதியில் என்ன நடந்தது என்று எழுதிக்கொண்டு போகவேண்டும். கதையிலிருந்து ஒரு படமும் வரையவேண்டும்.
இதற்கு நூலகத்தில் புத்தகங்களைத்தேடுவது பெரிய வேலையாக இருந்தது. புத்தகங்கள் ஐந்து வயதினர் படிக்கும்படி இருக்கவேண்டும், கைச்சித்திரங்கள் இருக்கவேண்டும், புகைப்படங்கள் உதவாது. பத்துப்பதினைந்து புத்தகங்களில் ஒன்றுதான் வேண்டியபடி அமையும். சிலமாதங்களிலேயே நூலகத்தில் தேடுவது வீண் என்றாகிவிட்டது.
நான் தமிழ்ப்பாடநூல்களில் படித்த கதைகளை இணையதளங்களில் தேடியபோதுதான், ஈசாப் நீதிக்கதைகளப் பற்றி தெரிந்துகொண்டேன் (Aesop's Fables). எனக்குத்தெரிந்த அத்தனை குட்டிக்கதைகளும் கி.மு 700ம் நூற்றாண்டு காலத்தைய இப்புத்தகத்தில் இருக்கின்றன. பொன் முட்டையிடும் வாத்து, காக்கையை ஏமாற்றும் நரி, குடுவை நீர் அருந்தும் காக்கை என்று பல கதைகள் படங்களுடன் ஒரே புத்தகத்திலிருந்து கிடைத்தன. காலம், இடம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட என்ன அருமையான கதைகள். வீட்டுப்பாடத்தில் உதவியதற்கு நன்றி ஈசாப்.
Comments
1. ்ஜ்ஜ்Jeeva - June 4, 2006
ரொம்ப நல்லா இருக்கு எல்லா படங்களும், உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் பலப்பல.
2. padhu - June 4, 2006
//ரொம்ப நல்லா இருக்கு எல்லா படங்களும், உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் பலப்பல.//
மிக்க நன்றி ஜீவா,
மகளுடன் அடுத்து பேசும்போதுதான் இந்த புதிய பதிவுகளைப்பற்றி சொல்ல வேண்டும். சந்தோசப்படுவாள்.
3. ஜீவ்ஸ் - June 5, 2006
படங்கள் நன்று
உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் வெண்பாவிற்கான பதில் என் பதிவில் இடுகிறேன்.
அன்புடன்
ஜீவ்ஸ்
4. padhu - June 5, 2006
வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்,
அடுத்த முறை உங்கள் பதிவில் பின்னூட்டம் இடும்போது நீங்கள் PG Woodhouse பிரியரா? என்று கேட்க்கவெண்டும்.
5. மதி கந்தசாமி - June 9, 2006
அழகான படங்கள்! உங்கள் மகளிடம் சொல்லுங்கள்.
6. padhu - June 9, 2006
பாராட்டுக்களுக்கு நன்றி மதி கந்தசாமி.