பெற்றபாசமும் ஆட்டுக்கறிக்குழம்பும்

Friday, June 09, 2006

அம்மா சமைப்பது எல்லாமே அலாதி ருசிதான். அதில் இட்லிக்கு ஆட்டுக்கறிக்குழம்புதான் பிரமாதம். தூத்துக்குடியில் மின்சார வாரியக் குடியிருப்பில் நாங்கள் இருந்த அடுக்கு வீடுகளில் எல்லோரும் சாப்பிட்டிருக்கிறார்கள். மேல் வீட்டிலிருந்த அரவர் கூட சாப்பிட்டு இருக்கிறார். சமீபத்தில் அப்பாவை சந்தித்தபோது நாவை சப்புக்கொட்டியபடி நினைவுகூர்ந்தாராம்.

எப்போதும் சுடச்சுடத்தான் பரிமாறுவார்கள். அடுத்த தட்டு வேகவைத்து எடுக்கும்முன், எங்கள் தட்டுகள் காலியாக இருக்கும். தண்ணீர் எடுத்துக்கொடுத்து "இந்தா கைக்கழுவிக்கொள்" என்று நானும், குளியலறை இந்தப்பக்கம் என்று என் தம்பியும் வம்பு செய்வோம். என் தங்கையும் இதைத்தான் விரும்பி சாப்பிடுவாள் அனால் இந்த வம்பிற்கெல்லாம் வரமாட்டாள்.

தானுண்டு தன்புத்தகம் உண்டு என்று இருப்பாள். என் அம்மாவும் அவளை ஒருவேலையும் செய்யவிட்டது இல்லை. தங்கைக்கு செல்லம் கொடுக்கிறார்கள் என்று என் தம்பி அவளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். கோபம் வந்தால் படார் என்று பிடரியில் அறைவான். அம்மா, என் கண் முன்னாடியே இப்படி நடத்துகிறாயே, நாங்கள் இல்லையென்றால் எப்படி நடத்துவாய் என்று கண்கலங்குவார்கள்.

என் தங்கையை அவர்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை. அப்பா முன்பு வேலை செய்த மலைக்காடுகளில் பள்ளிக்கூடம் சரியில்லாததால், நானும் என் தம்பியும் இரண்டாவதிலிருந்து பாட்டி வீட்டிலிருந்து படித்தோம். ஆனால் அவள் படிப்பிற்காக பணிமாற்றம் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். அவள் கல்லூரிக்குப் போகும் வரையிலும் வீட்டோடுதான் இருந்தாள்.

என்தங்கைக்கு தஞ்சாவூரில் பெண்கள் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து போனாள். நான் பத்தாவது முடித்ததுமே வீட்டைவிட்டு போய்விட்டேன். அப்போது தம்பியும் மேற்படிப்புக்கு அமெரிக்கா போயிருந்தான். வீட்டில் அவர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அந்தவாரமும் வளக்கம் போல இட்லிக்கு கறி சமைத்து இருந்தார்கள். ஆனால் சாப்பிடாமல் அன்று முழுவதும் பட்டினியிருந்தார்கள். எதேச்சையாக என் மாமா பத்திரிக்கை குடுக்க ஊரிலிருந்து போனவர் பார்த்து சமாதானம் சொல்லியிருக்கிறார்.

இந்த சம்பவத்திலிருந்து வீட்டில் சமைத்து எடுத்துக்கொண்டுபோய் கொடுக்க ஆரம்பித்தார்கள். தூத்துக்குடியிலிருந்து போக தஞ்சாவூருக்கு பத்துமணி நேரமாவது ஆகும். தங்கையின் கல்லூரித் தோழிகளிடமும் என் அம்மாவின் புகழ் பரவியது. இங்கே உங்களிடமும் அறிமுகம் செய்திருக்கிறேன்.



Comments



It is great. I didn’t realise you have been practicing and writing so well in Tamil.

It took a while for me to read this article. For some reason Firefox browser doesn’t display well, I had to switch to IE to read it.


2. padhu - June 10, 2006

முரளி மச்சி,

எனக்கு தமிழ்தான் ஏதோ கொஞ்சம் எழுத வருது. முடிந்தால் நம்ம எல்லாரும் மைசூர்ல எடுத்த ஃபோட்டோக்களை இங்க போடலாம்னு இருக்கேன்.

Commentக்கு நன்றி.


0 மறுமொழிகள்:

Post a Comment