tag:blogger.com,1999:blog-291457292024-03-13T18:43:35.852-04:00தென்பாண்டி நாட்டான்விழித்திரு தனித்திரு பசித்திரு.குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-29145729.post-7228882348694851562015-03-18T00:45:00.001-04:002015-03-18T00:48:54.043-04:00ஆதலினால் ரோபாட் செய்வீர் 2கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரோபாட் போட்டியில் கலந்துகொள்ள புதிய குழு அமைக்கும் முயற்சியில் இருப்பதாக எழுதியிருந்தேன். அந்த எண்ணம் கைகூடி, சென்ற வாரம் எங்கள் குழு மாணவர்கள் ஃப்ளோரிடா மாநிலம், ஒர்லான்டோவில் நடந்த போட்டியில் வெற்றிகரமாக கலந்துகொண்டார்கள்.<br />
<br />
அறுபத்து நான்கு குழுக்கள் பங்கேற்றதில் வெளி மாநிலத்தவரும், துருக்கி, பிரேசில் முதலான வேறு நாட்டவர்களும் அடக்கம். எங்களையும் சேர்த்து ஐந்து குழுக்கள் முதன்முறையாகப் போட்டியிட்டன. குழுக்கள் பலவும் வேடிக்கையான பெயர்களை வைத்துக்கொள்கின்றன. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எண்ணும் முக்கியமானதுதான். அவர்களின் தரவரிசை, பெற்ற புள்ளிகள் போன்றவை குழுவின் எண்களை வைத்துத்தான் பட்டியலிடப்படுகின்றன. எங்கள் எண் 5628, பெயர் சைபோர்க்-சக்கரா (ம்).<br />
<br />
போட்டிக்கான விதிமுறைகளை, ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடுகிறார்கள். அன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் ரோபாட்டை செய்து முடித்து சீல் வைத்துவிடவேண்டும். இவ்வாண்டில் போட்டி 'ரீசைக்கிள் ரஷ்' என்ற பெயரில் மறுசுழற்சி சம்பந்தப்பட்டது. ரோபாட்கள் மறுசுழற்சிக்கு பொருள்களை சேகரிக்க பயன்படுத்தும் பெட்டிகளையும், தொட்டிகளையும் மேடையில் அடுக்கிவைக்க வேண்டும். ரோபாட்டுகள் எத்தனை பெட்டிகள், எத்தனை அடுக்குகள் மேடை ஏற்றுகின்றன என்பதைப் பொருத்து அவற்றுக்கு புள்ளிகள் தரப்படும்.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/mAN1B7oKDXE" width="480"></iframe><br />
<br />
கூடைப்பந்து மைதானம் அளவுள்ள திடலில் இருபுறமும், பக்கத்திற்கு மூன்றாக ஒரே சமயத்தில் ஆறு குழுக்கள் விளையாடுகின்றன. ஒவ்வொரு ரோபாட்டையும் ரிமோட் மூலம் இயக்க இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு உதவ மற்றொரு நபரும் களம் இறங்குகிறார்கள். ஒவ்வொரு குழுவும் அவர்கள் திறமைக்கும் வசதிக்கும் தகுந்தவாறு ரோபாட்டை வடிவமைக்கிறார்கள். பல ரோபாட்டுகளின் செயற்பாடுகள் பிரமிப்பு ஊட்டுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே இப்படிபட்ட நுணுக்கமான மேம்பட்ட ரோபாட்டுகளை தயாரிக்க கற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.<br />
<br />
முன் அனுபவம் இல்லாத நாங்கள், எங்கள் ரோபாட்டை புதிய மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மட்டும் வடிவமைத்தோம். டிரைவ்-டிரெய்ன் (drive-train) என்னும் ஓடுதளத்திற்கு ஆயத்த வடிவமைப்பை பயன்படுத்திக்கொண்டோம். சுமையை மேலும் கீழும் கொண்டுசெல்ல மோட்டோர் பொருத்திய திருகாணி அமைப்பு, பெட்டிகளைப்பிடித்துக்கொள்ள ஒரு மோட்டாரில் இயக்கும் நான்கு பல் சக்கரங்கள், கடைசி இரண்டில் கைகள்போன்ற இணைப்பு அவ்வளவே. இதற்கே சுமார் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வெள்ளிகள் செலவாயிற்று. முன்னணியில் உள்ள குழுக்கள் ஆண்டிற்கு நாற்பதாயிரம் வரைகூட செலவழிக்கின்றன. இதற்கான நிதி வசதி, சமூக அக்கறை உடைய தொழில் நிறுவனங்களிடமிருந்துதான் பெறவேண்டும்.<br />
<br />
பணத்தை போலவே அனுபவமிக்க எந்திரவியல், மின்னியல், கணினி நுட்பியல் நிபுணர்களின் உதவியும் மிகவும் இன்றியமையாததாகும். பின் இரண்டை நான் கவனித்துக்கொள்ள, எனது நண்பர் எந்திரவியல் தேவைகளை அவருடைய சொந்தத் தொழிற்கூடத்தில் கவனித்துக்கொண்டார்.<br />
<br />
மாணவர்களுக்கு அவர்களுடைய அன்றாட பாடங்களைப்படிப்பதற்கே நேரம் போதாமல், ரோபாட் சம்பந்தப்பட்ட வேலைகள் சுமையாக தெரிந்தன. ஆனால் போட்டியில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களின் திறமையை கண்கூடாகப்பார்த்ததாலும், எங்கள் எளிய ரோபாட்டைக்கொண்டே அவர்களின் மதியூகத்தால் நல்ல முறையில் விளையாடி முப்பத்தி எட்டாம் தரவரிசையைப்பிடித்ததாலும், நல்ல ஊக்கம் பெற்று அடுத்தமுறை இன்னமும் சிறப்பாக செயல்படவேண்டும் என்று உறுதிபூண்டு இருக்கிறார்கள். எங்கள் நோக்கம் நிரைவேறியதில் இந்த குழுவை அமைக்க நாங்கள் பட்ட கட்டமெல்லாம் மறந்து பெற்றோர்களாகிய எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிதான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvbBzbZxf0mJ19s5LweoD4bWMapAE7i1LMQQQKxqQmCg1SeRZ-M-tvCXgFQgN9b5ouFWSj8SKl-x_4SmBChkoRoxvRUUJJJdEslAoIPtYD7yL-ybUDpSCxwDpmoi2nuw-eCule/s1600/5628-barney.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvbBzbZxf0mJ19s5LweoD4bWMapAE7i1LMQQQKxqQmCg1SeRZ-M-tvCXgFQgN9b5ouFWSj8SKl-x_4SmBChkoRoxvRUUJJJdEslAoIPtYD7yL-ybUDpSCxwDpmoi2nuw-eCule/s1600/5628-barney.jpg" height="240" width="320" /></a></div>
<br />
மேல் <a href="http://www.usfirst.org/roboticsprograms/frc">விவரங்களுக்கு</a>
<br />
மேலும் படங்கள் இந்த <a href="http://www.chiefdelphi.com/media/photos/tags/2015">மடல் குழுவில்</a>
<br />குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29145729.post-75399171831840114602014-11-09T15:42:00.000-05:002014-11-09T16:25:02.689-05:00யாகல்லாராயினும் கற்க லீனியர் அல்ஜிப்ரா<iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="https://www.youtube.com/embed/ZK3O402wf1c" width="459"></iframe><br />
<br />
அறிவியல், நுட்பியல், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் சுருக்கமாக ஸ்டெம் (Science, Technology, Engineering, Math - STEM) என்கிறார்கள். இந்தப்பாடங்களைப் படிக்க கணினியின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கு ஒரு காரணம் கல்லூரிப்புத்தகங்களின் புதிய பதிப்புகளில் பாடங்களை விளக்க லீனியர் அல்ஜிப்ரா (நேரியல் இயற்கணிதம்)பயன்படுத்துவதும், அந்தக்கணக்குகளை "மாட்லாப்" (MatLab) என்னும் கணினி மென்பொருளின் நிரல்மொழியில் எழுதுவதும் ஆகும்.<br />
<br />
அதற்காக லீனியர் அல்ஜிப்ரா கடினம் என்று அருத்தம் இல்லை. கணினியின் அடிப்படை எளிய கணக்குகள் அல்லவா? லீனியர் என்பதற்கு நேர்கோடு என்று பொருளாகும். அதாவது, x<sup>2</sup>, x<sup>3</sup><br />
போன்று மதிப்புகள் வளையப்பெரும் வர்கமுறை இல்லாத 1x, 2x போன்று மதிப்புகள் நேர்கோடாய்ச் செல்லும் எளிய மடங்கு முறைகளைக் குறிக்கும். லீனியர் அல்ஜிப்ரா என்பது பல பரிமாணங்களில் மடங்கு எண்களின் கூட்டு சமன்பாடுகளைப்பற்றியதாகும்.<br />
உ.ம்: 2x + y + z = 5 என்பது ஒரு லீனியர் அல்ஜிப்ரா முப்பரிமாண சமன்பாடாகும்.<br />
<br />
இத்தகைய சமன்பாடுகள் அனைத்து அறிவியல் துறைகளிலும் காணப்பெறுகின்றன. இவைகளைக் கணக்கிட, திசையன் (வெக்டர் vector), அணி (மாட்ரிக்ஸ் matrix) முதலான கணிதமுறைகள் பயன்படுகின்றன. அடிப்படையில் இவை எளிய கூட்டல் பெருக்கல் கணக்குகளாவதால், கணினி நிரல்கள் மூலம் விடைகளைப்பெறுவதும் எளிதாகிறது. எனவே, வேறு குறியீட்டு முறை கணிதங்களும் கூட, லீனியர் அல்ஜிப்ராவிற்கு மாற்றப்பட்டு கணினிகளின் துணையால் சடுதியில் விடை காண்கிறார்கள்.<br />
<br />
அமெரிக்காவில் மாணவர்களைக் கல்லூரிகளுக்கு ஆயத்தம் செய்வதாக சொல்லிக்கொள்ளும் பள்ளிகளில்கூட லீனியர் அல்ஜிப்ரா கற்பிப்பதில்லை. இதனால் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள் அல்லல்படுவது நடக்கிறது. முதலாம் ஆண்டில், ஒரே சமயத்தில் ஒருபுறம் அறிவியலும் மறுபுறம் அதற்குத்தேவையான கணிதமும் கற்பிக்கப்படுவதால், மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள். லீனியர் அல்ஜிப்ரா ஆசிரியர்களுள் சிறந்த கில்பர்ட் ஸ்டரங், தன்புத்தகத்தில் குறைபட்டுக்கொள்கிறார். மேலே உள்ள காணொளியில் அவர் மிகப்பொருமையாக பாடம் நடத்துவதைக் காணலாம்.<br />
<br />
பள்ளிக்கூடங்களில் இந்தகணிதம் சொல்லித்தரப்படாததற்கு காரணம் அதற்குத்தேவைப்படும் "மாட்லாப்" போன்ற மென்பொருள்கள் கொள்ளைவிலை என்பதால் இருக்கலாம். ஆனால் அதற்கு இணையாக இப்போது கட்டற்ற மென்பொருள்கள் இருக்கின்றன. "ஆக்டேவ்" (Octave) என்னும் மென்பொருள் மாட்லாபின் நிரல்களை பெரும்பாலும் மாற்றம் எதுவும் இன்றி இயக்குகின்றன. மாட்லாபின் மற்றொரு அங்கமான சிமுலிங்க் (Simulink) கட்டுப்பாட்டு அமைப்புகளை (control systems - இதைப்பற்றி தனியே எழுதவேண்டும்) வடிவமைக்க உதவுகிறது. ஆக்டேவில் இந்த வசதி இல்லை. இந்த வசதியுடன் கூடிய சைலாப் (Scilab) என்னும் மென்பொருள் அதற்கு ஈடாகிறது. ஆனால் இதன் நிரல்மொழி மாட்லாபில் இருந்து சற்று மாறுபட்டது.<br />
<br />
மும்பை - இந்தியத் தொழில்நுட்பக்கழகம் "சைலாப்"-இற்கென்று தனி இணையதளம் அமைத்து, நூற்றுக்கணக்கான பாடப்புத்தகங்களிலுள்ள மாட்லாப் நிரல்களை சைலாப்பிற்கு மாற்றி வெளியிட்டுள்ளது. மேலும் மற்ற கல்லூரிகளுக்கும் சைலாபில் பயிற்சி அளிக்கிறது. இதிலிருந்து அதன் சிறப்பை புரிந்துகொள்ளலாம்.<br />
<br />
கல்லூரி செல்ல ஆயத்தப்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்களும், பெற்றோர்களும், "லீனியர் அல்ஜிப்ரா", வெக்டர், மாட்ரிக்ஸ் ஆகியவைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் நல்லது.<br />
<br />
சில சுட்டிகள்:<br />
<a href="http://ocw.mit.edu/courses/mathematics/18-06-linear-algebra-spring-2010/video-lectures/">MITன் காணொளிகள்</a><br />
<a href="http://www.scilab.in/">IITன் Scilab இணையதளம்</a><br />
<a href="https://www.gnu.org/software/octave/">ஆக்டேவ்</a><br />
<a href="http://www.scilab.org/">சைலாப்</a><br />
<br />குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29145729.post-32744281257724470052014-11-06T21:41:00.000-05:002014-11-06T21:41:19.308-05:00தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீன உழைப்பாளி சுயு லிஜி யின் கவிதைகள்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFoUsYQrmRCnoRp4AYNdiPG89-eSjyoyg0F4CDaYR1C2K91_18JZuAsIYA_5c-QK5_J14KHwUlMVW_K_HoFXP25Te0-uBEhy40iqTTLJgJSd40viaMTlMffKWh-GHpdBEf9p29/s1600/xu+lizhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFoUsYQrmRCnoRp4AYNdiPG89-eSjyoyg0F4CDaYR1C2K91_18JZuAsIYA_5c-QK5_J14KHwUlMVW_K_HoFXP25Te0-uBEhy40iqTTLJgJSd40viaMTlMffKWh-GHpdBEf9p29/s1600/xu+lizhi.jpg" height="158" width="320" /></a></div>
<br />
சுயு லிஜி (Xu Lizhi 许立志) தன் 24ம் வயதில், ஆப்பிள் ஃபோன் போன்ற மின் உபகரணங்களை உற்பத்திசெய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் கொத்தடிமை வேலைப்பழு தாங்காமல் செப்டம்பர் 30, 2014 அன்று தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவர் எழுதியுள்ளக் கவிதைகள் நெஞ்சை உலுக்குகின்றன.<br />
<br />
அதில் ஒன்று இங்கே - ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில்:
<br />
<br />
<pre>《一颗螺丝掉在地上》 "A Screw Fell to the Ground"
திருகாணி ஒன்று கீழே விழுந்தது
一颗螺丝掉在地上 A screw fell to the ground
திருகாணி ஒன்று கீழே விழுந்தது
在这个加班的夜晚 In this dark night of overtime
மேல்வேலையின் இந்த இருண்ட இரவில்
垂直降落,轻轻一响 Plunging vertically, lightly clinking
நெட்டுக்குத்தாக வீழ்ந்ததன், மெல்லிய சிணுங்கல்
不会引起任何人的注意 It won’t attract anyone’s attention
யாரது கவனமும் பெறாது
就像在此之前 Just like last time
சென்ற முறைப் போலவே
某个相同的夜晚 On a night like this
இதே போன்ற இரவில்
有个人掉在地上 When someone plunged to the ground
ஒர் உடல் தரையில் சரிந்த போது
-- 9 ஜனவரி 2014
</pre>
<a href="https://libcom.org/blog/xulizhi-foxconn-suicide-poetry">மேல் விவரங்களுக்கு</a>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29145729.post-74469235922547463352014-08-16T23:39:00.000-04:002014-08-16T23:39:25.565-04:00கணினிக்கு உகந்த மொழியில் இரண்டே சொற்கள்.<br />
கணினியின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படை இரண்டே எண்கள் 0-ம் 1-ம் ஆகும். கணினியில் பயனுரும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, மற்றும் பார்க்கும் படமென்ப, கேட்கும் ஒலியென்பவை அனைத்தும் இந்த இரண்டு எண்களை மட்டுமே கொண்டு செயல்படுகின்றன.<br />
<br />
கணினியின் ஆதாரமான மைக்ரோ புராசசரை 1984ல் ஆல்பர்ட் பால் மால்வினோ எழுதிய ‘டிஜிட்டல் கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக்ஸ்’புத்தகத்தின் மூலமாகக்கற்றுக்கொண்டேன். அதில் ஒரு சுவிச்சை தட்டி இருந்தால் 1 - தட்டாமல் இருந்தால் 0 என்று சிறுபிள்ளைக்கு பாடம் நடத்துவதுபோல் துவங்கி,இடையில் உதிரிப்பாகங்களைக் கொண்டு செய்த மிக எளியக் கணினி ஒன்றின் வடிவமைப்பைக் கொடுத்து இருந்தார். அதற்கு ’இயன்ற அளவு எளிய’ என்ற பொருளில் SAP (Simple As Possible) என்று பெயர்.<br />
<br />
அதை ஒருவர் செய்து இயக்குவதை கீழே காணலாம். அதைப் பார்க்கும் முன் கணினி இயங்கும் முறையைப்பற்றி சிறு விளக்கம்:<br />
கணினி செய்யவேண்டிய கட்டளைகளை முதலில் ஓரிடத்தில் பதிவு செய்யவேண்டும். அதன் பின்னர்தான் பதிந்த கட்டளைகளை செயல்படுத்த அதைப் பணிக்க முடியும்.<br />
<br />
இந்தக் கணினியில் மொத்தம் 16 இடங்கள் உள்ளன. அவற்றை A0, A1, A2, A3 ஆகிய நான்கு சுவிச்சுகளை வைத்து நான்கு இலக்க இரும (binary) எண்களால் குறிக்கிறோம். எல்லா சுவிச்சுகளும் தட்டி இருந்தால் (மேல் நோக்கி) இரும எண் 1111 = தசம எண் 15ஆம் இடத்தைக் குறிக்கும். எல்லா சுவிச்சுகளும் கீழே இருந்தால் இடம் 0.<br />
<br />
ஒவ்வொரு இடத்திலும், ஒரு எட்டு இலக்க இரும எண்ணைப் பதிவு செய்ய முடியும். வேறொரு முறையில் சொல்வதானால் இந்த கணினியின் கொள்ளளவு 16 வரிசை 8 புள்ளிகள், அவ்வளவே. அந்த எட்டு இலக்க இரும எண்கள் 0 முதல் 255 வரை ஆகும். அவற்றை முறையே 0000 0000ம், 1111 1111ம் குறிக்கும். இந்த எண்களை பதிய எட்டு சுவிச்சுகள் D0 - D7 உள்ளன.<br />
<br />
இந்தக் கணினியின் நிரல் மொழி, எடு, கூட்டு, கழி என்ற வெகுசில கட்டளைகளை மட்டுமே கொண்டுள்ளது. அந்தக் கட்டளைகளும் எட்டு இலக்கங்களால் 0ம் 1ம் மட்டுமே கொண்டு குறிக்கப்படுகின்றன. இப்படிக் குறிப்பது கடினமாகையால், அந்த கட்டளைகளுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லின் சுறுக்கத்தை மனனச்சொல்லாக (mnemonic) பயன் படுத்துகிறோம்.<br />
<br />
எட்டு இலக்கங்களுள் மேல் நான்கு இலக்கங்கள் (D4-D7)கட்டளையைக் குறிக்கவும், கீழ் நான்கு இலக்கங்கள் (D0-D3) எடுத்துக்கொள்ளவேண்டிய எண்கள் இருக்கும் இடத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.<br />
<br />
<pre>
குறியீடு - கட்டளை<br />
0000 - எடு LDA<br />
0001 - கூட்டு ADD<br />
0010 - கழி SUB<br />
1110 - வெளியிடு OUT<br />
0111 - நில் HLT
</pre>
<br />
எடு, கூட்டு, கழி ஆகியக் கட்டளைகள் எடுத்துக்கொள்ளவேண்டிய எண்கள் இருக்கும் இடத்தைச் சொல்ல கீழ் நான்கு இலக்கங்களை பயன் படுத்துகின்றன. மற்றக்கட்டளைகள் அந்த இலக்கங்களைப் பொருட்படுத்துவதில்லை.<br />
<br />
உ.ம்:<br />
0000 1010 - என்பது இடம் 1010 (10 தசம)ல் உள்ள எண்ணை எடுத்துக்கொள் என்றக் கட்டளையாகும்.<br />
0001 1011 - என்பது இடம் 1011 (11 தசம)ல் உள்ள எண்ணை முன்பு எடுத்துக்கொண்டுள்ள எண்ணுடன் கூட்டு என்றக் கட்டளையாகும்.<br />
<br />
இந்தப் படத்தில் கீழ்க்காணும் நிரலை கணினியில் நிறுவி ஓட்டுவதைப் பார்க்கலாம்.<br />
<br />
<pre>
இடம் - மனனம் - குறியீடு - எண் இருப்பிடம் ; விளக்கம்<br />
0 0000 - LDA - 0000 - 1010 ; 65ஐ எடு<br />
1 0001 - ADD - 0001 - 1011 ; 47ஐ கூட்டு<br />
2 0010 - SUB - 0010 - 1100 ; 24ஐ கழி<br />
3 0011 - ADD - 0001 - 1101 ; 3ஐ கூட்டு<br />
4 0100 - ADD - 0001 - 1110 ; 16ஐ கூட்டு<br />
5 0101 - ADD - 0001 - 1111 ; 7ஐ கூட்டு<br />
6 0110 - OUT - 1110 - இல்லை; விடையை காண்பி<br />
7 0111 - HLT - 1111 ; நில்<br />
<br />
</pre>
<pre>
எண் இருப்பிடம் - எண் (இரும) - தசம<br />
10 1010 - 0100 0001 - 65<br />
11 1011 - 0010 1111 - 47<br />
12 1100 - 0001 1000 - 24<br />
13 1101 - 0000 0011 - 3<br />
14 1110 - 0001 0000 - 16<br />
15 1111 - 0000 0111 - 7<br />
<br />
</pre>
விடை: 65+47-24+3+16+7 = 114(தசம) = 01110010(இரும)<br />
<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/5yFXw_klWq0" width="420"></iframe><br />
<br />
இந்த விளக்கங்கள் முழுமையாகப் புரியாவிட்டாலும், கணினியின் கட்டளைகள் எளியவை என்றும் அவைகளைக்குறிக்க எண்களே பயன்படுகின்றன என்பதும் மட்டுமாவது புரியும் என்று நம்புகிறேன்.<br />
<br />
முதலில் நிரலிகள் இப்படி மனனக்குறியீடுகளில் எழுதப்பட்டு, அவற்றை சுவிச்சுகள் மூலமோ, 0ம் 1ம் குறிக்க அட்டைகளில் துளையிட்டு, அந்த அட்டைகளை செலுத்தியோ கணினியில் நிறுவப்பட்டன. பின்பு மனனக்குறியீடுகளில் நேரடியாக தட்டச்சப்பட்டு, அதை எண்களாக கணினிமூலமாகவே மாற்றியபின் ஓட வைக்கப்பட்டன. இப்படி மனனக்குறியீடில் எழுதும் மொழி ‘அசெம்ப்ளி’ (assembly) மொழி என்று காரணப் பெயர் பெற்றது.<br />
<br />
அசெம்ப்ளி ஓவ்வொருவகைக் கணினி கட்டமைப்புக்கு ஏற்றார்ப்போல் மாறுபடும். உதாரணமாக இன்டெல் நிறுவனத்தின் 8085 மைக்ரோ புராசசரால் ஆனக் கணினியின் மனனக்குறியீடுகள் 8, 16 மற்றும் 24 இரும இலக்கங்கள் கொண்டவை. இதனால் ஒரு வகை கணினிக்கு அசெம்ப்ளியில் எழுதும் நிரல் மற்றொன்றில் வேலை செய்யாது.<br />
<br />
பின்னர் நிரல்கள் பேச்சு மொழி சொற்களால் ஆன நிரல்மொழிகளில் எழுதப்பட்டு அம்மொழிகளில் இருந்து கணினியின் கட்டளைகளாக மாற்றியபின் ஓடுமாறு செய்யப்பட்டது. பொதுவாக இம்மொழிகளில் எழுதப்பட்ட ஒரு நிரலைப் பலவகைக் கணினிகளில் ஓட்ட முடியும். இத்தகைய நிரல் மொழிகளில் முதன்மையான 20 மொழிகள், மொத்ததில் 70 சதவீத நிரல்களை எழுதப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் ’சி’ முதலிடமும் (16%), ’ஜாவா’ இரண்டாமிடமும் (15%) வகிக்கின்றன. பயன்பாட்டு விகிதங்கள் வரிசையில் முதல் 50 மொழிகள் இங்கே <a href="http://www.tiobe.com/index.php/content/paperinfo/tpci/index.html">அட்டவணையாக்கப்பட்டுள்ளன</a>.<br />
<br />
இப்படி பேச்சு மொழி சொற்களில் எழுதப்படும் நிரல் மொழிகளும், கட்டமைப்பு மொழிகள் (structural), பொருள் சார்ந்த மொழிகள்(object oriented), வினை சார்ந்த மொழிகள் (functional) என்று படிப்படியாக முன்னேற்றம் அடைந்துள்ளன. கடந்த இருபது வருடங்களாக சி++, ஜாவா போன்ற பொருள் சார்ந்த மொழிகள் பெரும்பான்மையாக புழங்கப்பட்டன.<br />
<br />
இப்போது ஸ்காலா போன்ற வினை சார்ந்த மொழிகள் புகழ்பெற்று வருகின்றன. என் கணிப்பில் அடுத்த பத்தாண்டு காலங்களுக்கு வினை சார்ந்த மொழிகள் பெருமளவில் பயன்படுத்தப்படும். மதவாதிகள் அவ்வப்போது பெருமையுடன் விளங்கும் கண்டுபிடிப்புக்களைத் தம்மதங்கள் ஆதிகாலம் தொட்டு அறிந்திருந்தன என்று பரப்புரை செய்வதில் வல்லவர்கள். அதைத்தொட்டே சமசுக்கிருதம் பொருள் சார்ந்த நிரல் மொழிபோன்றது என்ற மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விளக்கங்கள் தரப்படுகின்றன. இனிமேல் அது வினை சார்ந்த மொழியாகும் என்று வியாக்கியானம் செய்யவேண்டி இருக்கும்.<br />
<br />
எது எப்படி அயினும், எல்லா நிரல் மொழிகளும் , கணினிக்கு உகந்த குறியீடாக மாறும்போது, அதில் உள்ளவை இரண்டே சொற்கள்தான், அவை உண்டு(1), இல்லை(0).<br />
<div>
<br /></div>
குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-29145729.post-7186202405442183022014-06-13T20:43:00.000-04:002014-06-13T20:58:48.952-04:00ஆதலினால் ரோபாட் செய்வீர்நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளிடையே (வயது 9 முதல் 14 வரை) நடத்தப்படும் ரோபாட் போட்டிகளில் முதன்மையானது<br />
பர்ஸ்ட் லெகோ லீக் (FIRST Lego League) ஆகும். இப்போட்டிகளை<br />
FIRST (For Inspiration and Recognition of Science and Technology - என்பதன் சுருக்கம்) நிறுவனத்தார் தயாரித்து அளிக்கின்றனர். இந்நிறுவனத்தை பல புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளை தந்த ”டீன் கமென்” என்பவர் 1989ல் ஆரம்பித்தார். இப்போட்டிகள் ஆண்டுதோறும் செப்டம்பர் வாக்கில்<br />
அறிவிக்கப்பட்டு மார்ச் வரை நடக்கின்றன. ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப 4 அடிக்கு 8 அடி அளவில் வரைபடமும் அதன் மேல் பொருத்தமான லெகோ துணுக்குகளால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளையும் வெளியிடுகிறார்கள்.<br />
<br />
சென்ற ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்து ”இயற்கை சீற்றங்கள்” ஆகும். அதற்கு கொடுக்கப்பட்ட வரைபடத்தையும் அதன்மேல் உள்ள பொருட்களையும் கீழே காண்க.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_v00uweKYyR5u9IGveF8qoVOoHybYf_mUTzy2fh-EuDFep4jiXaBBRFVUABZNw-pjOd0yuiZEmP1xqd-eVO6VJJbzxvLGbpmZ_EzF2wAc2Q2kgRH1nraZS4llZ4n7ujm7h4Oc/s1600/NFoverheadmat.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_v00uweKYyR5u9IGveF8qoVOoHybYf_mUTzy2fh-EuDFep4jiXaBBRFVUABZNw-pjOd0yuiZEmP1xqd-eVO6VJJbzxvLGbpmZ_EzF2wAc2Q2kgRH1nraZS4llZ4n7ujm7h4Oc/s1600/NFoverheadmat.jpg" height="204" width="320" /></a></div>
<br />
தென்மேற்கு மூலையில் உள்ள வெள்ளை கட்டம், தேர்நிலை மாதிரி ரோபோ ஓடத்தொடங்கும் இடம். வடமேற்கில் செல்லப்பிராணிகள் நாயும், பூனையும் குடும்பத்தை விட்டு அனாதரவாக இருக்கின்றன.<br />
அருகில் உள்ள மரத்தின் கிளை ஒன்று ஊசலடிக்கொண்டுள்ளது. அதன் கீழே உள்ள மின்கம்பிகளின் மேல் விழுந்தால் ஆபத்து. உங்கள் ரோபாட் அந்த பிராணிகளை மனிதர்களுடன் சிவப்பு கட்டமிட்ட தென்கிழக்கு மூலையான பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சேர்த்தால், தலா 15 புள்ளிகள், மரக்கிளையை பாதுகாப்பாக தரையில் விழச்செய்தால் 30 புள்ளிகள் கிடைக்கும். இதேபோல் முதலுதவி வண்டி, சரக்கு விமானம் & வண்டி, சுனாமி, நிலநடுக்கப் பகுதியில் அடுக்கு கட்டிடங்கள், வெள்ளப்பகுதியில் வீடு, மனிதர்கள், இடிபாடுகள் என்று ஒவ்வொரு பொருளையும் சார்ந்த பல செயல்களுக்கும் புள்ளிகள் வரையரை செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தமாக சுமார் 600 புள்ளிகள் எடுக்கமுடியும். என்ன இவை எல்லாவற்றையும் இரண்டரை நிமிடங்களுக்குள் ரோபாட் செய்து முடிக்கவேண்டும். ரோபாட்டிற்கு ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறுவகை இணைப்புகள் தேவைப்படும். ஒரு சுற்று போய்விட்டு நிலைக்கு வந்தப் பிறகுதான் போட்டியாளர்கள் இணைப்புகளை மாற்றவேண்டும். நடுவில் அதை தொட்டால் தண்டனையாக சில புள்ளிகள் கழிக்கப்படும், மேலும் இடைஞ்சலாக விமான ஓடுதளத்தில் தடுப்புக் கட்டைகள் வைக்கப்படும்.<br />
<br />
இதில் எந்த வேலையை எப்போது செய்வது எப்படி செய்வது என்பது போட்டி குழுக்களின் தனிப்பட்ட யோசனை ஆகும். ஒவ்வொரு குழுவும் விதவிதமாக ரோபாட் வடிவமைக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும்<br />
வேலைகளுக்கு தகுந்தாவாறு ரோபாட் வடிவமும் அணுகுமுறையும் மாறுபடும். விதவிதமான சக்கரங்கள், இணைப்புகள், மற்றும் உணரிகளை பொருத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் இரண்டு வித அடித்தளங்களை (chassis) பயன்படுத்தினோம். தரையோடு அணுக்கமாக இரண்டு ஒளிஉணரிகள் கொண்டமாதிரி ஒன்றும் (கடைசியாக சேர்த்த இரு தொடு உண்ரிகள் படத்தில் இல்லை), இடிபாடுகளைக் கடந்து செல்ல பெரிய சக்கரங்களுடன் ஒரே மோட்டாரில் இயங்கும்படி ஒன்றும் (படங்கள் கீழே). இவையாவும் தானியங்கியாக செயல்பட ரோபாட்டில் நிரல்கள் எழுதவேண்டும். <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOrpgxFSikbiEIi9NyyQDTyqa9ZoyjApD_PizmDKLBgpqUIieMoIpn5SXxbU5Qw5VnGgkBKVc4z0Bw9zJHKeaUQLLP044OdjHnonxE2wmcvxIu_RnG__2ykoARV0BNOpz8fYd4/s1600/pets-attachment.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOrpgxFSikbiEIi9NyyQDTyqa9ZoyjApD_PizmDKLBgpqUIieMoIpn5SXxbU5Qw5VnGgkBKVc4z0Bw9zJHKeaUQLLP044OdjHnonxE2wmcvxIu_RnG__2ykoARV0BNOpz8fYd4/s1600/pets-attachment.jpg" height="213" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_S_BpfiOUclz8x0aMUD8dvPpf3ixIkmKUVsau2EaJp6OFP9YaxAVUPKTEAb0RMRACciyKdffSnpGqxWP4MLzW5bsSISN_glASZVgt5IGGvSmGbEsrNqPF3YDLmCwznG_YfTIX/s1600/bottom.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_S_BpfiOUclz8x0aMUD8dvPpf3ixIkmKUVsau2EaJp6OFP9YaxAVUPKTEAb0RMRACciyKdffSnpGqxWP4MLzW5bsSISN_glASZVgt5IGGvSmGbEsrNqPF3YDLmCwznG_YfTIX/s1600/bottom.jpg" height="269" width="320" /></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKlZ2MwSI1bG0FfrCxm1TopPCMM1TEt-yjWX1KCOxbN-m_TAwXeLGjlOB-JrqopJWcR0pFHNGkNTIH2OPvLbh29PaXRdSHdR4brvC37rfu_UxHsaYe2kw3e0HhUj4wfIc2kNn9/s1600/second-chassis.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKlZ2MwSI1bG0FfrCxm1TopPCMM1TEt-yjWX1KCOxbN-m_TAwXeLGjlOB-JrqopJWcR0pFHNGkNTIH2OPvLbh29PaXRdSHdR4brvC37rfu_UxHsaYe2kw3e0HhUj4wfIc2kNn9/s1600/second-chassis.jpg" height="213" width="320" /></a></div>
உதாரணமாக ஒரு சுற்றில் ரோபாட் வீட்டிற்கு அருகில் உள்ள மனிதனை மீட்டுக்கொண்டு, வீட்டை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க அதிலுள்ள பிடியை தட்டி தளத்தை உயர்த்திவிட்டு மீண்டும் நிலைக்கே திரும்பவேண்டும் என்று எடுத்துக்கொண்டால். ரோபாட் நிலையில் இருந்து வடக்கு நோக்கி 450 மில்லிமீட்டர் சென்று 90 பாகை வலப்புறம் திரும்பி, ஒளி உணரிமூலம் இரண்டு கருப்பு பட்டைகளைக்கடந்து போய் இடப்பக்கம் திரும்பி கருப்புப்படையில் நேர்க்கோட்டில் 3 வினாடிகள் பயணித்து (இல்லையானால் வீட்டின்மேல் இடித்துக்கொண்டு நின்றுவிடும்) இணைப்பை இயக்கி மனிதனை மீட்டுக்கொண்டு, மேலும் சில மில்லிமீட்டர் சென்று இடப்பக்கம் திரும்பி வேகமாக சென்று பிடியில் மோதி வீட்டை உயர்த்தியபின் வந்த வழியே திரும்பவேண்டும். ஒவ்வொரு கட்டளையும் ரோபாட்டின் நிரல்மொழியில் பதியவேண்டும் (கருப்புப்பட்டையின் வலது விழிம்பை தொடர்ந்து செல்லும் கட்டளைகள் படத்தில் ).<br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxccNqH6W3QpwiYRBdczqXfhVoK-nttQI3KQrSH-nf3-r3AiHAEIXzywcdofzcuclBYXpYv3oa8EYBV5-Sf166eRYI_y5brvqipWJbVLFlpXXhxeSt7pa_5JI8SvaJpIIKPHc4/s1600/line-follow.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxccNqH6W3QpwiYRBdczqXfhVoK-nttQI3KQrSH-nf3-r3AiHAEIXzywcdofzcuclBYXpYv3oa8EYBV5-Sf166eRYI_y5brvqipWJbVLFlpXXhxeSt7pa_5JI8SvaJpIIKPHc4/s1600/line-follow.png" height="135" width="320" /></a></div>
<br />
<br />
குழுக்களின் திறமையை மூன்றுவித தேர்வுகளுக்கு உட்படுத்தி முடிவு செய்கிறார்கள். இதில் நுட்பியலுக்கு 33.3 சதம் (போட்டியில் எடுத்த புள்ளிகளுக்கு 16.5% + நுட்பியல் நேர்காணலுக்கு 16.5%), கருத்துக்கு<br />
ஏற்ற புறத்திட்டுக்கு 33.3 சதம் மற்றும் குழுவின் கூடிசெயல்வகைக்கு 33.3 சதம் என்று பிரித்துக் கொடுக்கிறார்கள். தேர்வில் போட்டி மனப்பான்மையைவிட மாணவர்களின் ஒழுங்கும் கல்வியுமே முக்கியத்துவம் பெருகின்றன. முதலில் உள்ளூர் போட்டிகள் இரண்டும், அதில் ஏதாவதொன்றில் தேர்வானால், வட்டார அளவிலும், அதிலிருந்து மாநில அளவிலும் அடுத்து<br />
தேசிய அளவிலும் போட்டிகள் நடக்கின்றன.<br />
<br />
எங்கள் குழுவில் ஐந்து நண்பர்களின் குடும்பகளிலிருந்து ஆறு குழந்தைகள் பங்கேற்றனர். எங்களுக்கு, முன்பின் பழக்கமோ போதிய அவகாசமோ இல்லாத போதிலும் முதல் போட்டியிலேயே தேர்வானோம். மேலும் எங்கள் புறத்திட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது. ஒவ்வொரு போட்டியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரோபாட்டின் செயல்பாடுகளை துல்லியமாகியதால் அடுத்தடுத்த போட்டிகளில் பரிசுகள் குவிந்தன. இறுதியாக மாநில அளவில் சிறந்த ரோபாட் வடிவமைப்பு பரிசு கிடைத்தது.<br />
<br />
எங்கள் குழுவிற்கு நாங்கள் இட்ட தமிழ் சார்ந்த பெயர் வீராபாட்ஸ்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIqQHVG2LN-b7dJvZL2DVCaFl0hnfVtGSFlJg0ZVaQ1TRypfdo2IuqhEDPNqywqIBBcH6M6dSjPinPEf1p-JjrZmp3qZFNnfNaWbV5qFyVIYd2cdzH_VmWGp-uHISvoSrRw0FR/s1600/veerabots-regional.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIqQHVG2LN-b7dJvZL2DVCaFl0hnfVtGSFlJg0ZVaQ1TRypfdo2IuqhEDPNqywqIBBcH6M6dSjPinPEf1p-JjrZmp3qZFNnfNaWbV5qFyVIYd2cdzH_VmWGp-uHISvoSrRw0FR/s1600/veerabots-regional.jpg" height="213" width="320" /></a></div>
<br />
<br />
இந்தியாவில் சில இடங்களில் இப்போட்டிகள் நடைபெறுவதாகத்தெரிகிறது. பெங்களூருவில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் தொழில் தேர்ந்தெடுத்தலைப்பற்றி பேச நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை அழைத்து வருகிறார்கள். இதை செய்யமாட்டார்களா? இந்த வெற்றியின் காரணமாக, எனது நண்பர்கள் அடுத்து உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் போட்டி (FIRST Robotic Championship) குழு அமைக்க முயற்சி செய்துகொண்டுள்ளார்கள். அதற்கு பொறியில் கல்லூரிப்படிப்பு போல கடின உழைப்பும், தொழிற்சாலைகளில் பயன்படும் அளவு உயர்தர விலை கூடிய பாகங்களும் தேவை. பின்னாட்களில் அதைப்பற்றி பகிர்ந்துகொள்கிறேன்.<br />
<div>
<br /></div>
குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-29145729.post-79743478195657247172014-01-06T00:11:00.000-05:002014-01-06T00:12:58.064-05:00மைன்ட்ஸ்டார்ம்ஸ் (Mindstorms) - ரோபாட் கட்டுதளம்<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B">லெகோ </a>(Lego) நிறுவனம் தயாரிக்கும், ஒருபுறம் குழியும் மறுபுறம் கூம்புமாக உள்ள பிளாஸ்ட்டிக் துணுக்குகளை வைத்து விதவிதமாக சிறுவர்கள் பொருட்கள் செய்து விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். அதே போல் பலவித ரோபாட்கள் செய்து இயக்க கற்றுக்கொள்ள ஏதுவாக, அவர்கள் வடிவமைத்த கட்டுதளம் (platform) தான் <a href="http://www.lego.com/en-us/mindstorms/">மைன்ட்ஸ்டார்ம்ஸ்</a>.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="//www.youtube.com/embed/ShTEDaYYbDs" width="480"></iframe><br />
<br />
இந்த கட்டுதளம் ஒரு மையச்செயலியையும் அதனுடன் இணைக்க கூடிய இயக்கிகள் (மோட்டார்கள்), உணரிகள் (sensors), கட்டுமானப் பொருட்களான, சக்கரங்கள், அச்சுகள், மற்றும் பல உதிரி பாகங்களைக் கொண்டது.<br />
<br />
சிறுவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டது எனினும், பொறியியல் ஆய்வாளர்களும்கூட இதை பயன்படுத்துகிறார்கள்.<br />
<br />
லெகோ மைன்ட்ஸ்டோர்மை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து முதலில் 1998ல் வெளியிட்டது.<br />
முதல் வடிவமைப்பை RCX என்றும் 2006ல் இரண்டாவதை NXT என்றும், 2013ல் மூன்றாம் வடிவை EV3 என்றும் அழைத்தனர். பொது விற்பனைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வெவ்வேறு தொகுப்புகள் கிடைக்கின்றன.<br />
<br />
எனக்கு இதைப் பற்றி சென்ற ஆண்டு இறுதியில்தான் தெரிய வந்தது. விலை (350 அமெரிக்க வெள்ளி ) சற்று கூட என்றாலும், குழந்தைகளுக்கு அதன் பயன் கருதி வாங்கினேன். ஏறக்குறைய 600 உதிரி பாகங்களை கொண்ட தொகுப்பை வைத்து ஐந்து வித ரோபாட்கள் செய்ய அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் உள்ளன. சமூகப் பங்களிப்பாக மேலும் பல வடிவங்கள் செய்துகொள்ள விவரங்கள் கிடைக்கின்றன.<br />
<br />
மாணவர்கள் இப்படி சொந்தமாக கற்றுக்கொள்வதோடு நிற்காமல், இந்த கட்டுதளத்தை அடிப்படையாக வைத்து நடக்கும் பல போட்டிகளிலும் பங்கு எடுத்துக்கொள்கிறார்கள். அப்போட்டிகளுள் முதன்மையான ஒன்று ஃபர்ஸ்ட் லெகோ லீக் (<a href="http://www.firstlegoleague.org/">FIRST Lego League</a>). 9 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். கடந்த சில மாதங்களாக ஆறு குழந்தைகள் கொண்ட குழுவிற்கு பயிற்சியாளனாக இருக்கிறேன்.<br />
இப்போட்டியில் அறிவியலுக்கும் நுட்பியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதைப்பற்றி விரிவாக தனி பதிவாக எழுத உள்ளேன்.<br />
<br />
குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-29145729.post-43436855885211830182012-10-04T02:18:00.001-04:002012-10-04T02:21:30.612-04:00நவீன யோகா: வேலையே செய்ய வேண்டாம், மூச்சு விட்டால் போதும்!<p>
அது 90களின் மத்தியில் கோவையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக்கொண்டிருந்த காலம்.
ஒருநாள் என்னோடு முன்பு வேலை செய்த கிருத்துவ நண்பர் ஒருவர் வந்து தான் அண்மையில் பயின்ற யோகா பயிற்சிப்பற்றி வானளாவகப் புகழ்ந்து, என்னையும் சேரச்சொன்னார்.
என்னைவிட பல வயது சிறியவர், ஆறாம் வகுப்பு வரை அமெரிக்காவில் படித்தவர். இந்தியர்களைப் பற்றி அத்தனை ஒன்றும் நல்ல எண்ணம் இல்லாதவர்.
அவரே மனம் மாறி இருக்கிறாரே, என்ற இயல்பான ஆவலில் அறிமுக வகுப்பு நடந்த ஒரு நாளில் போய்ப் பார்த்தேன்.
</p>
<p>
காந்திபுரம் 100 அடி சாலையின் அருகே ஒரு அலுவலகத்தின் மாடியை வகுப்பு நடத்த யாரோ தனவான் ஒருவர் கொடுத்திருந்தார். அறையின் முன் காலணிகளெல்லாம் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.
செருப்புக்களை கழட்டி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். வெறும் தரையில் சமக்காளம் விரித்திருந்தார்கள். இடம் நிரம்பி இருந்தது, சுமார் 100 பேர் இருந்திருப்பார்கள்.
நடுவயது வடநாட்டுப் பெண்தான் குரு. தமிழ் பேசத் தெரியவில்லை. ஆங்கிலத்தில்தான் உரையாடினார். கோவையில் தனியார் நிறுவனமொன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தாராம். பல பேர் காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களெல்லாம் பழைய மாணவர்கள் போலத்தெரிந்தது.
</p>
<p>
”காலணிகள் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தீர்களா? அதெல்லாம் யாருடைய வேலை? இதோ இந்த தொண்டர்கள்தாம் அதற்கு காரணம்.” என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.
அவர்கள் ஒவ்வொருவராக வந்து, ”நான் பயிற்சிக்கு முன்னால் அப்பிடி இருந்தேங்க, இப்ப இப்பிடி ஆயிட்டேன்” என்று உற்சாகமாக பேசிவிட்டுப் போனார்கள்.
</p>
<p>
எல்லோரையும் வெளியே போய்விட்டு மீண்டும் வந்து அமரச்சொன்னார்கள். அதுதான் முதல் பாடம். அதாகப்பட்டது சிறிது நேரமே உட்கார்ந்திருந்த இடமானாலும், அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி மக்கள் அதே இருக்கைக்கு திரும்புகிறார்கள் என்று எடுத்துக்காட்டப்பட்டது. இதேக் காட்சிக்கு ஒரு சாமியார் வேறுமாதிரி விளக்கம் கொடுத்ததை படித்திருந்தேன். அதில் அதே இடத்திற்கு வராதவர்களை கடித்திருந்தார். அடுத்த பனிரெண்டுநாட்களும் சில மணி நேரம் இப்படி எங்களுக்கு ஏதாவது ஒரு சோதனை.
</p>
<p>
குரு துவக்கத்திலிருந்தே நேரம் தவறாமையை மிகவும் கண்டிப்பாக கடைபிடித்தார். வண்டி வரவில்லை, என்றால், வண்டிக்காரன், சாலை பழுது என்பான். அதற்குப் பொருப்பானவர்களை கேட்டால் மழையைக் காரணம் சொல்வார்கள்.
எனவே, நமக்கு என்ன நடந்தாலும் அதற்கு நாமே பொருப்பேற்க வேண்டும் என்பது தத்துவம். முதலாளி சம்பளம் கொடுக்காவிட்டாலும் நாமே பொருப்பு.
அப்படியிருக்க தாமதமாக வந்தால் நம் மானம் போகும். அதற்கு பயந்து எல்லோரும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள். வராமல் இருக்கவும் முடியாது.
முதல்நாளில் தினமும் வருவேன் என்று நெஞ்சில் கைவைத்து ஒப்புக்கொண்டிருந்தோம்.
</p>
<h3>ஒரு நாள்:</h3>
<p>
<pre>
”மசாலா மணம் இல்லை என்றால் கறி சாப்பிட முடியுமா? நீங்கள் சாப்பிடுவது சவம் தானே?”
”பால்தான் எல்லா வயிற்று கோளாறுகளுக்கும் காரணம். அமெரிக்காவில் அதற்காக
எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?”
”ஏன் சாணி நாறுவதில்லை? மிருகங்கள் சமைக்காமல் சாப்பிடுவதால்..”
</pre>
</p>
<h3>மறு நாள்:</h3>
<p>
<pre>
”மனம் தான் எல்லாவற்றிக்கும் காரணம்.”
நண்பர் ஒருவரை அழைத்து, ஒரு கையை நீட்ட சொன்னார்.
”இப்போது பாருங்கள், இவருடையக் கையை என்னால் எளிதில் மடக்க முடிகிறது..
அடுத்து அவர் மனதில் இந்தக் கை இரும்பைப் போல உறுதியாகிவிட்டது
என்று எண்ணத்தை விதைக்கிறேன்”, என்றுவிட்டு
மீண்டும் நீட்டிய கையின் முட்டிக்குக் கீழே சுட்டு விரலை வைத்து,
“இப்போது நீ வலுவடைந்து விட்டாய், உன் கை இரும்பாகிவிட்டது”,
என்று சில முறை சொல்லிவிட்டு கையை மடக்க அது திரும்பவும் இலகுவாக மடங்கியது.
“நான் உன் மனதுக்கு கட்டளை இட்டபோது, காதில் கேட்காமல் நீ சிரித்துக்கொண்டிருந்தாய்.
நான் போன வகுப்பில் இதை செய்து காட்டினேனா, இல்லையா?”,என்று
பழைய மாணவர்களைக் கேட்டார். சிசியக்கோடிகள் தலை ஆட்டினார்கள். அவர்களுடைய
வகுப்பு முடிந்த பின்னும், ”நாம் இதுக்கா காசு கொடுத்து சேர்ந்தோம்”, என்று சந்தேகத்தை
நிவர்த்தி செய்ய மீண்டும் வரும் அவர்களால் வேறென்ன சொல்ல முடியும்?
</pre>
</p>
<h3>அடுத்த நாள்:</h3>
<p>
<pre>
”ஓங்காரத்திற்கு விளக்கம். அது அ, உ, ம் என்னும் எழுத்துக்களின் கூட்டு.
தொடர்ந்து,
அ என்றால் வயிறு அதிருகிறது, - அது உயிரை உருவாக்கும் பிரம்மாவின் இடம் -
அதற்குத் தேவையான கல்விக்கு உடனுரை சரஸ்வதி.
உ என்றால் நெஞ்சம் - அது உயிரை காக்கும் இதயமாக விஷ்ணுவின் இடம் -
காப்பாற்ற தேவையானப் பணத்திற்கு கூடவே லட்சுமி.
ம் என்றால் மண்டை - அது வேண்டாதனவற்றை அறிந்து அழிக்கும் சிவனின் இடம் -
அழிக்கத் தேவையான சக்திதான் தேவி.
ஆக ”ஓம்” இந்து மதம் சார்ந்த ஒலியல்ல. தத்துவம். அதை உச்சாடனம் செய்வதின் மூலம்
உடல் முழுவதையும் வலுவடைய செய்கிறோம்.”
</pre>
</p>
<p>
அதன்படி வகுப்பின் முடிவில் “பொய்யிலிருந்து வாய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து இறவாமைக்கும் இட்டு செல்வாயாக. ஓம் சாந்தி, சாந்தி, சாந்திகி”,
என்று முதலில் இசுலாமியர்களும், கிருத்தவர்களும் கூட ஒப்பித்தார்கள். பின்னர் வீட்டில் திட்டுகிறார்கள் என்று நிறுத்திக்கொண்டார்கள்.
</p>
<h3>மற்றொரு நாள்:</h3>
<p>
<pre>
”உணவுகளில் மூன்று வகை.
1 - பிராண சக்தி தருவது (pranic),
2 - பிராண சக்தியை கெடுப்பது (non-pranic),
3 - வெறுமே வயிற்றை நிரைப்பது (filler)”.
”எல்லாக் காய்கறிகளுமே பிராண சக்தி தருபவை. கத்தரிக்காய் மட்டும் அதைக் கெடுப்பது.
உருளைக்கிழங்கு வயிற்றை நிரைப்பது."
”உருத்திராட்சமும், தங்கமும் பிராண சக்தியைக் கண்டறியும் சக்தி உள்ளவை.”
</pre>
தங்க சங்கிலி ஒன்றை ஒரு பெண்ணிடமிருந்து வாங்கி பரிசோதித்துக் காட்டினார்.
நல்லவகைக் காய் ஒன்றை இடது கையில் வைத்து அதன் மேல் தொங்கும்படி சங்கிலியை
வலது கையில் பிடித்தார். சங்கிலி மெதுவாக ஊசலாட ஆரம்பித்து காயை இடவலமாக சுற்றித்தொடங்கியது. கத்திரிக்காயை இடப்புறமாக சுற்றியது, உருளைக்கிழங்கின் மேல் பெண்டுலம் மாதிரி இடவலமாக நடுவில் ஆடியது. ஆகா.. ஆபாரம்.
</p>
<p>
”பிராண சக்தி அதிகமாக உள்ள காய், சாம்பல் பூசணி.”
எல்லோரும் தினமும் காலையில் பூசணி சாறு குடிக்க பரிந்துரை செய்தார். சில பெண்கள் வகுப்பின்போது வாயிலெடுக்க வருகிறது என்றார்கள். எட்டாம் குறுக்குத்தெருவில், என் புறாக்கூண்டு வாழ்க்கையில் சமைக்கவெல்லாம்
முடியாதாகையால் அந்த தண்டனையிலிருந்து நான் தப்பித்தேன். வசதியான அறையில் வசித்த நண்பர் ஒருவர், இதற்காகவே மின் கலப்பியெல்லாம் வாங்கினார்.
குறுக்கு வெட்டுத் தெருவிலிருந்த சந்தைக்கு காய் வாங்கப் போவோம். நான் தேங்காய் மண்டியில் ஒரே ஒரு தேங்காய் வாங்குவேன்.
வெள்ளரிக்காயை விட்டால், எனக்குத் தெரிந்து அதுதான் சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய். காரியாபட்டியில் பிஞ்சு வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிட்டு ருசி கண்டவனுக்கு,
கோவையில் கிடைக்கும் முற்றியவகை பிடிக்கவில்லை. கடைப்பெண்ணின் கணவர் எங்களை சந்தேகமாகப் பார்க்கவே அதையும் நிறுத்திவிட்டேன்.
”பழமுதிர்ச் சோலை”யில், முளைவிட்ட பயறுகளை சாப்பிட முயன்று தோற்றிறுக்கிறேன். பயறுகளில் இருந்த பூச்சிகள் நீரில் ஊறி கெட்ட வாடை அடித்தது.
</p>
<h3>முத்திரைகளைப்பற்றி ஒருநாள்:</h3>
<p>
முட்டிக்கால் போட்டு அமர்ந்து கைகளை விதம் விதமாக வைத்து மூச்சை இழுக்கச் சொல்லி இப்போது எங்கே பிடிக்கிறது என்று கேள்வி கேட்பார். ஒருத்தருக்கு, முதுகு பிடிக்கும், ஒருத்தருக்கு இடுப்பு பிடிக்கும், ஆளுக்கு ஒன்றாக சொல்வார்கள். வேண்டிய பதில் வரும் வரைக்கும் விடமாட்டார். தலையில் பிடிக்கிறது என்றால், ”தலையாம், திரும்ப முட்டி போடு” என்பார். வலி தாங்காமல், மற்றவர்கள் என்ன பதில் சொல்லி தபித்தார்களோ அதையே சொல்வார்கள்.
</p>
<p>
அதாகப்பட்டது (இரண்டாம் முறையாக சொல்கிறேன்.. மன்னிக்கவும்). தொழுகை செய்வது போல முட்டிக்கால் போட்டு கைகளை வெவ்வேறு
முறையில் வைத்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்தால் பிராண சக்தியை குறிப்பிட்ட இடங்களுக்கு செலுத்தமுடியும். அதன் மூலம் அப்பகுதியில்
உள்ள உறுப்புக்களை சீராக்க முடியுமாம்.
</p>
<h3>குடிக்கு எதிரான பிரச்சாரம் ஒரு நாள்:</h3>
<p>
அமெரிக்காவில், தன்னுடைய குருவிடம் பயிற்சிபெற்ற ஒருவன், குடித்துவிட்டு, நண்பர்களுக்கு யோக பயிற்சியை செய்துகாட்டப் போய் உடலெல்லாம்
நீலம் பாரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிவிட்டானாம். அப்புறம் குருதான் போய் காப்பாற்றினார் என்று பயமுறுத்தினார்.
எனவே, இந்த பயிற்சி செய்யும்போது குடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
குடிப்பவர்களைப்போல நல்லவர்களை பார்க்கமுடியாது அவர்கள் போதை தெளிந்து இருக்கும்போது”, என்று ஆசை காட்டவும் செய்தார்.
அதற்கு பயந்து சிலர் சில நாட்கள் குடிக்காமல் இருப்பார்கள்.
</p>
<p>
அவ்வப்போது சில புரட்சிகளும் கூட நடந்தன.
”வேதத்தில் பிராமணனுக்கு தினமும் பூசணிக்காய் தட்சிணை கொடுப்பவருக்கு சுவருகத்தில் இடம் கிடைக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறதாம்.
இங்கேயே சுகமாக வாழ பிராமணர்களின் தந்திரத்தைப் பாருங்கள்”, என்பார். சில சமயம் தமக்கு உதவி செய்பவர்களைக்கூட அவர்களின் சாதி பாகுபாட்டைக் குறை சொன்னார்.
</p>
<p>
பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீட்டார் செய்யும் கெடுபிடிகளை சொல்லி அழுதால், வேத காலத்தில் அப்படிபட்ட பிற்போக்குத்தனங்கள் இல்லை என்று எடுத்துக்காட்டுவது.
கணவனை இழந்தவர்கள் ஆசைப்பட்டால் இட்டுக்கொள்ள குங்கும் தருவது என்பதான சில செயல்களும், ”பழைய மாணவர் ஒருவர் தன் மனைவியின் கையைப்பிடித்துக்கொண்டு
நடக்க ஆசைபட்டார். ஆனால் அது மனைவிக்கு பிடிக்கவில்லை. அதனால் என்ன? என் கையைப் பிடித்துக்கொள் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றேன்”, என்று முற்போக்கு முகம் காட்டுவதும் புரட்சிகளில் அடக்கம்..
</p>
<p>
எடுத்துக்காட்டாக,
”சிரசாசனம் செய்யாதீர்கள். பிற யோக ஆசனங்களிலும் ஆபத்து உண்டு. அதனால் வரும் கோளாறுகளை சரிசெய்யவென்றே ஒருவர் இருக்கிறார்.”,
”பிடிக்காதப் பாடத்தைப் படிக்க சொன்னதால் பைத்தியமான மகன்”, என்பது போன்ற பெரிய சிக்கல் இல்லாத கதைகளும் உணர்ச்சி பொங்க சொல்லப்படும்,
</p>
<h3>பிரிதொரு நாள்:</h3>
<p>
<pre>
”மேலை நாட்டு மருத்துவம் பிணங்களை வைத்து சோதனை செய்கிறது. ரிஷிகள் தம்
உடலையே சோதனைக்கு உள்ளாக்கி நமக்கு ஆயுர்வேதம் அருளியுள்ளார்கள்”
”ஒரு பொருளின் ஒளி வடிவம் நம் கண்களுக்குத் தெரிகிறது. அப்பொருளுக்கு நிகரான
ஒலிவடிவம்தான் சமசுக்கிருதம்.
உதாரணமாக நெருப்பின் ஒலி வடிவம் ”ரம்” ஆகும். அந்த ஒலியைக் கட்டுப்படுத்தினால்
நெருப்பைக் கட்டுப்படுத்த முடியும்.”, என்பார்.
</pre>
கோவையில் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் தலைமை மருத்துவர் வகுப்பை
பார்வையிட வருகிறார் என்று எதிர்பாத்து இருந்தார்.
குருவுக்கு நல்லவேளை. அவர் வரவே இல்லை.
</p>
<p>
தினமும் நாம் பெற்ற ஞானத்தை வாழ்க்கையில் பயன்படுத்தி நமக்கு ஏற்பட்ட பட்டறிவை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள செய்வார்.
கையில் ஒலிவாங்கி கிடைத்த பெருமிதத்தில் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கூவுவார்கள்.
“இப்படித்தாங்க நான் பெங்களூரு ஐஐஎஸ்சி-ல ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தபோது..“, என்று ஒரு பெண் ஆரம்பிக்கும். மின் கலப்பி நண்பருக்கு அவர் சொந்தம்.
”ஆராய்ச்சியெல்லாம் ஒண்ணும் பண்ணல, சுத்துறா..”, என்று காதைக் கடிப்பார். கூடவே குரு, ”இப்போது உங்கள் தூக்கம் குறைந்து இருக்குமே, சுறுசுறுப்பு கூடியிருக்குமே”, என்று எடுத்துக் கொடுப்பார்.
</p>
<p>
”இயலாதவர்களுக்கு முன்பின் தெரியாதவரானாலும் கூச்சப்படாமல் உதவவேண்டும்”, என்று ஒரு நாள் பாடம்.
நண்பர் ஒருவர் பேருந்துக்கு கையில் சுமையுடன் நின்றிருந்த முதியவருக்கு உதவப்போனதைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
“ஐயா, எங்க போறீங்க உங்களுக்கு உதவி ஏதும் வேணுமா” என்று வலியப் போய் கேட்க பெரியவர் இவரை ”யாரு பெத்த பிள்ளையோ?” என்பது போல பார்த்து, ”தம்பி, நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க உங்க வேலையப் பாருங்க.”
என்று கேட்டு மண்டை காய்ந்ததை குருவுக்கு தெரியாமல், அரசியல்வாதி உட்பட்ட நண்பர் குழாமிடம் சொல்லி சிரித்தார்.
இதில் அன்றாடக் குடியர்கள் ஒருநாள் குடிக்காமல் வந்து நடந்த கதையைச் சொன்னால் கேட்க மிகவும் உருக்கமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு
”ரொம்ப நல்லவர்கள்” பட்டம் வேறு கிடைத்திருக்கிறதே.
</p>
<p>
இடையில், வார விடுமுறை ஒன்றில் நாள் முழுதும் வகுப்பு. காலையில் நேரு மைதானத்தில் குடும்பத்தாருடன் போய் விளையாட்டு. திடலில், பழைய மாணவர்கள் எல்லோரையும்
கூசிக்கொண்டிராமல் ஆட்டமும் பாட்டமுமாய் இருக்க உற்சாகப்படுத்தினார்கள். மாலை குறுக்கு வெட்டுத்தெருவுக்கு குறுக்காக ஓடும் இலக்கமிட்ட குறுக்குத்தெருக்கள் ஒன்றில் வகுப்பு.
நான் தங்கி இருந்த விடுதி எட்டாம் குறுக்குத்தெரு. வகுப்பு மற்றொன்றில். அங்கே குரு வரத் தாமதமாகிவிட்டது. மண்டை காய்ந்த நண்பர், பிடித்துக்கொண்டார்.
குரு, ”வண்டி நின்று விட்டது, ஓடி வந்தேன்”, என்று எவ்வளவு மன்றாடினாலும், நண்பர் மன்னிக்க மறுத்துவிட்டார். அதுதானே தனக்கு வந்தால்தானே தெரியும் முதுகு வலியும் திருகு வலியும்.
”நான் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பேன்”, என்று எல்லோரிடமும் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, எனெக்கென பிரத்தியேகமாக ”சிரீம்” என்ற மந்திரத்தை கொடுத்து அருளினார்.
அதை தியானத்தின் போது உச்சரித்துக் கொள்ள வேண்டும். பயிற்சி முடிந்த சில காலத்திற்குப் பின், மின் கலப்பி நண்பர் ஏதோ புத்தகத்தைப் படித்து இதில் பிரத்தியேகம் புண்ணாக்கு எல்லாம் இல்லை என்றார்.
</p>
<p>
ஒருவழியாக வகுப்புகள் முடியும் தறுவாயில், பழைய மாணவர்கள், நான்கு நாட்கள் வெளி இடத்தில் தங்கி புதிதாக பெற்ற
பயிற்சியைப்பற்றி அவர்களுக்குள் அளவு கடந்த மலர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். ஆசை யாரை விட்டது....
</p>
<hr/>
<h2>பாகம் 2</h2>
<p>
முதலில் பதிமூன்று நாட்கள் எடுத்துக்கொண்ட யோகப் பயிற்சியின் பெயர் ”சகஜ சமாதி யோகா”. ”சமாதி” என்றால் சுடுகாடு இல்லை.
ரஜினி ஒரு படத்தில் சொல்வது போல, “அது தேவ நகரி, தெலிவா உச்சுரிக்கனும்”.
ஆதியில், நாம் தாயின் கருவில் சுகமாக இருந்த நிலைக்கு சமமான யோக நிலை என்பது பொருள்.
</p>
<p>
புதிய வகுப்பிற்கு பேர் மறந்துவிட்டது. அதில் சேர வேண்டுமானால் இப்போது செய்யும் பயிற்சியை ஆறுமாதங்களாவது செய்திருக்கவேண்டும். ஆனால் எங்களுக்கு சலுகை கிடைத்தது.
சில மாதங்களில் நடக்க இருக்கும் அந்த பயிற்சியில் எங்களை கலந்து கொள்ள அனுமதித்தனர். சும்மா இல்லை, காசுதான். அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாயின.
அரசியல்வாதி, மண்டை காய்ந்தவர் இன்னும் சிலர் சூதானமாக கழன்று கொண்டார்கள். பொறியியல் கல்லூரி ஆசிரியர் முதலான, எங்களுக்கு அவ்வளவு மன முதிற்சி இல்லை.
</p>
<p>
நம் வாழ்வில் செய்த, செத்தாலும் யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பாத செயல்களை தினமும் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி இரகசியமாக
வைத்துக்கொள்ள வேண்டும். இது நம் ஆழ்மனதில் இருக்கும் சிக்கல்களை விடுவித்து தியானத்தின்மூலம் பேரமைதி பெற உதவும்.
வகுப்பில் கண்டிப்பாக அதை வெளியிட சொல்லமாட்டோம் என்று உறுதி செய்தார்கள்.
</p>
<p>
இடம் கோவையை ஒட்டிய கிராமப் பகுதியில் இருந்த பெரிய மண்டபம். ஊர் பெயர் நினைவில்லை. இரவு நேரத்தில் மண்டபத்திற்கு வழி தெரியாமல் கடைகளில்
விசாரித்தால் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
</p>
<p>
போய் சேர்ந்ததும், தொண்டர்கள் முதலில் கைக்கடிகாரங்களை வாங்கி வைத்துக் கொண்டார்கள். தினமும், இருட்டோடி இருக்கும்போதே எழுப்பி விடுவார்கள்.
</p>
<p>
எதிர்பார்த்தபடியே ஒரு வகுப்பில், குரு “யார் உங்கள் இரகசியத்தை பகிர்ந்துகொள்கிறீர்கள்”, என்று கேட்டார். ஆசிரியர்தான் முதலில் போனார்.
அவர் செய்த கில்லாடி வேலைகளையெல்லாம் கேட்டு எனக்கு, ”சே.. இதுக்கா நாம இவ்வளவு விசனப்பட்டோம்” என்று உடனடியாக எனக்கு நானே புனிதனாகிவிட்டேன். திரும்பிப் பார்த்தால்
தொண்டர் குழாமில் முன்பே இந்த பயிற்சிக்கு வந்திருந்த அவருடைய இளம் மனைவியும் இருந்தார். ஏனைய தொண்டர்கள்
கண்களில் எதிர்பார்த்தது கிடைத்த திருப்தியில் இருந்தனர். ஆசிரியரைப்போலவே பெரும்பாலனவர்கள் மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த விடயம்,
பாலியல் சம்பதப்பட்ட செயல்கள்தான். எங்கள் குழப்பத்திற்கு விடைகாண, குரு ஓஷோவின் புத்தகங்களைப் படிக்க பரிந்துரைத்தார்.
</p>
<p>
ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு சோடியுடன், சிருங்காரத் தொனியில் இந்தியில் இருந்த கிருஷ்ண லீலை மெல்லிசைப்
பாடல்களுக்கு கைகளைப் பிணைந்து நடனம். (என் சோடி என்னைப்போல ஒரு கல்லூரி மாணவருங் கோவ்...). அப்புறம் கட்டிப்பிடி வைத்தியம் கொஞ்சம்.
இது கண்களைத் திறந்து கொண்டு என்பதால், நான் எதிர்பாலரை அணுகவில்லை. மாணவராக வந்திருந்த நடுத்தர வயதினர் ஒருவரின் மகள்தான் ஒரு தொண்டர்
என்பது தெரியாமல் மற்றத் தொண்டர்கள் அப்பெண்ணிடம் நடந்துகொண்ட விதம் அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்தது. நல்ல வேளையாக வைத்தியத்தின் போது
அவருடைய அம்மா பாதுகாப்பாக வீட்டிலிருந்து வந்துவிட்டார்.
</p>
<p>
ஒருநாள் மனம் போனபடி களேபரம் செய்யச் சொன்னார்கள். அதாவது மனதில் எதையும் அடக்கி வைக்காமல் கொஞ்ச நேரம் விட்டுப்பிடித்துப் பழகவாம். மாணவர்கள் எல்லோருமே கட்டுப்பெட்டிகளாக அமைதியாய் இருக்க,
தொண்டர்கள்தாம் மடக்கு நாற்காலிகளைக் கீழேத்தள்ளி துவம்சம் செய்தார்கள்.
</p>
<p>
முத்தாய்ப்பாக, சுதர்சனக் கிரியா என்ற பயிற்சி. குருவின் குரு, சிரி, சிரி ரவிசங்கர் தம் தவ வலிமையால் கண்டுபிடித்து, உலகத்தினர் உய்ய தாம் அடைந்த இன்பம் இவ்வையகம் பெருகவென்ற,
பெருந்தன்மையில் பரப்பி வருகிறார். ஒலி நாடாவை ஓடவிட்டு, அதில் அவர் “சோ--கம்” என்று தாளகதியில் திரும்பத்திரும்ப சொல்லும் போது,”சோ”வில் மூச்சை இழுத்து
“கம்”இல் வெளிவிடவேண்டும். முதலில் மெதுவான நடைவேகத்தில் போய் வரும் மூச்சு, போகப்போக ஓட்டம் எடுக்கும், அவ்வப்போது கொஞ்சம் நடை அவகாசம், மீண்டும் ஓட்டம்.
எல்லாம் முடிந்தபின், இப்போதெல்லாம் செருப்புத்தேய, கால்கள் கெஞ்ச, சில மைல்கள் வேகமாக நடை பயிற்சி செய்துவிட்டு வரும்போது இருக்கும் அதே உணர்வு அன்று இருந்தது.
அல்லது எதிர்க்காற்று முகத்தில் அறையப் பயணம் செய்துவிட்டு, வண்டி நிற்கும் போது ஏற்படுகிறதே அது போன்ற உணர்வு, தொடர்ந்து பத்து பதினைந்து நிமிடங்கள் நீடித்தன,
”உடம்பு நோகாமல், வெறுமே மூச்சை விட்டே இவ்வளவு சக்தி கிடைத்தால்,” சிசியக்கோடிகளின் பரவசத்திற்கு கேட்க வேண்டியதில்லை.
</p>
<p>
இயந்திரத்தனமான இப்பயிற்சிகள், ஓஷோ தம் சன்னியாசிகளின் தேவைக்கு ஏற்ப கொடுத்த தியானப் பயிற்சிகளின் நகலாகும் என்பது பின்னர் அவருடைய புத்தகங்களைப் படிக்கையில் தெளிவாகப் புரிந்தது.
அசட்டு நாடகங்களை மேடைதோறும் நடத்துவதுபோல, அடுத்து நடந்த பயிற்சி வகுப்புகளுக்கு தொண்டாற்ற போனபொது, குரு அதே வசனங்களை ஒப்பித்துக் கொண்டிருந்தார்.
”பெண்டாட்டி கை இல்லைனா என்ன? என் கையை பிடிச்சுக்கோ..” எல்லோரும் சிரித்தார்கள்.
</p>
<p>
அதுவரையில் ரவிசங்கர் இன்னார் என்று எனக்கு தெரியாது. அவர் கூட, இளைய சங்கராச்சாரி சுப்பிரமணிக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு போன்ற சாதீய பற்றிலும்,
ஈழத்தமிழர்கள் வைத்து நாடகமாடிய தமிழர் விரோதப்போக்கிலும் அடிபடாமல் போய் இருந்தால், அவர் நிறுவனமாக்கி இருக்கும் மூளைச்சலவைத் தொழில் விளங்காமலேயே இருந்திடுக்கக்கூடும்.
</p>
<p>
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இதே நாடகத்தை, IIT-க்கெல்லாம் போய் காட்டுகிறார் பாருங்கள். அங்கேயும் கூட்டம் வருகிறது, காலில் விழுகிறது.</p>
<a href="http://nirmukta.com/2012/08/06/pseudoscience-unchallenged-at-iit-kanpur/">Pseudoscience unchallenged at IIT Kanpur</a>
<p>
என் பங்கிற்கு நானும் தவறு செய்துள்ளேன். இன்றாவது ரவிசங்கருக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
</p> குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29145729.post-15071669371605934042012-10-02T00:49:00.003-04:002012-10-04T01:32:56.386-04:00ஊமை கனவுகண்டால்கடந்த ஒரு மாதமாக நானும் என் மகளும் சைகை மொழி கற்று வருகிறோம்.
அமெரிக்காவில் அரசு பள்ளிகளில் குறைந்த கட்டணத்திற்கு பல வித மாலை வகுப்புகள் நடத்துகிறார்கள்.
என் மகனோடு உரையாட உதவும் என்பதால் சேர்ந்தோம். வகுப்பு ஆசிரியை சின்ன வயது பெண் 10 ஆண்டுகளாக சைகை மொழி பயின்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.<br />
வகுப்பில் படிக்கும் சிலர் சிறிது நேரம் சைகை செய்தாலே எங்கள் கை வலிக்கிறது நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன சில விடயங்கள் ஆச்சரியமாக இருந்தன..
<br />
எப்படி நமக்கு குறைந்த பயன்பாடு காரணமாக விரைவில் மூட்டு வலி ஏற்படுகிறதோ, அதே போல வாய் பேச்சு குறைந்த சிலர், வலுக்கட்டாயமாக பேச முயற்சித்தால் இரத்த வாந்தி எடுப்பார்கள் என்றார்.
எனவே தொடர்ந்து பழகினால் தசைகள் வலுபெற்று வலி குறையும் என்று கருத்து சொன்னார். தான் பல ஆண்டுகள் பழகி வருவதால், பேச்சை விடை சைகையே மேலோங்கி இருப்பதாக சொன்னார். சிலர் தூக்கத்தில் பேசுவதுபோல,
தான் சைகை செய்வது உண்டு என்றார். ஒருமுறை பயங்கர கனவு கண்டுகொண்டிருக்கையில், ”உதவி.. உதவி” என்று சைகை செய்ததை பார்த்த சிலர் சொல்லித்தான் அவருக்கே தெரிந்திருக்கிறது.<br />
நினைவில், ”உனக்கு நீலக் கண்களென்றால், இன்னொருவருக்கு கருப்புக் கண்கள். அது போலத்தான் நாங்களும் வித்தியாசமானவர்கள்.” என்பதுதான் மாற்றுத்திறனாளிகளின் நிலை. ஆனால், அவர்கள் கனவிலும் கூட தம்மை குறைபட்டுக்கொள்வதில்லை என்று புரிகிறது..
<br />
<br />
<br />
கீழே உள்ள படம் ஆங்கிலத்தில் உதவி (HELP) என்று சைகையில் காட்டுகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" height="120" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZXCG7YuPAzA4ZzLF-q2itWq_5gw5gni9JF61NY6RpsgxJ3D8-rBpdkqhw59cX9M5KdOj4yIFnaPZNT8NG_7zfxai39lqEKfdPLuTFxeR7eEdqAn5v6PNqHK0Afo6u6ZXYrqbd/s320/help.png" width="320" /></div>
குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29145729.post-35028920389975125922012-09-23T19:00:00.000-04:002012-10-04T01:32:37.330-04:00Scala - கணினி மொழியில் ஹைக்கூ<p>
ஸ்காலா (Scala) Scalable Language (நீட்சிக்ககூடிய மொழி) என்பதின் சுருக்கம். ஒரு வரியில் எழுதும் நிரல்களிலிருந்து பல்கிப்பெருகிப் பல கணினிகளில் ஒருசேர இயங்கும் மென்பொருள்கள் வரை அனைத்து விதப் பணிகளையும் இம்மொழியில் எழுதும் விதமாக வடிவமைக்கப்பட்டதால் இப்பெயர் இடப்பட்டது. இதனை உருவாக்கியவர் மார்டின் ஆர்டஸ்கி எனும் ஜெர்மனியர்.
</p>
<p>
இன்னமும் பரவலாக பயன்பாட்டிற்கு வராவிட்டாலும், வரும் காலங்களில் இம்மொழியின் தேவை அதிகமாகும். ஏனெனில் மற்ற மொழிகளில் நிரல்களை ஒன்றுக்கு மேற்பட்ட செயலகங்களில் இணைந்து இயங்கும் வண்ணம் எழுதுவது எளிதல்ல. இப்போது கைபேசிகளில் கூட நான்கு செயலகங்கள் உள்ளன. அவற்றை எளிதில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஸ்காலா உதவும்.
</p>
<p>ஸ்காலா நிரல் மொழி பற்றிய பல புத்தகங்களும், தகவல்களும் இணையத்தில் பரியாக கிடைக்கின்றன. சென்ற வாரம் தொடங்கி மார்டின் இணையம் வழியாக கற்றுத்தருகிறார். நானும் அந்த வகுப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். முதல் வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களே மாணவர்களிடம் மேலான திறமையை எதிர்பார்க்கும்படி உள்ளன.</p>
<h4>உதாரணமாக இரண்டு கேள்விகள்.</h4>
<p>
ஒன்று பாஸ்கல் முக்கோணத்தில், கிடைவரிசை எண்ணும் நிலை வரிசை எண்ணும் கொடுத்தால், அந்த தானத்தில் உள்ள எண் என்ன என்பதைக் கணிக்கவேண்டும். நி.வ 3, கி.வ 2 - விடை 3. (முதல் வரி 0 ல் தொடங்கும்)</p>
<pre>
1
1 1
1 2 1
1 3 3 1
1 4 6 4 1
</pre>
<p>
மற்றொன்று, ஒரு தொகையும், காசு இனங்களும் கொடுத்தால், மொத்தம் எத்தனை வழிகளில் அந்த காசுக்களைக் கொண்டு தொகையை அடையலாம் என்பது. உதாரணமாக: தொகை: 4 ரூபாய், காசு இனங்கள் 1ரூ மற்றும் 2ரூ. விடை 3. 1 + 1 + 1 + 1, 1 + 1 + 2, 2 +2.</p>
<p>
ஸ்காலாவில், இவற்றுக்கு முறையே இரண்டு வரி மற்றும் மூன்று வரிகளில் சரியான நிரல்களை எழுத முடிந்தது. அவற்றை பார்க்கும் போது ஹைக்கூவை அறிந்த பரவசம் கிடைக்கிறது.</p>
<p>
விடைகளை பகிர்ந்து கொள்வது தடை செய்யப்படுள்ளது. நீங்கள் விரும்பினால், இதைவிடவும் கடினமான கேள்விகளை ஆய்லர் புறத்திட்டிலும், அவற்றுக்கு ஸ்காலாவில் விடைகாண எழுதப்பட்ட நிரல்களையும் படித்துப் பார்க்கலாம்.
</p>
<p>
உ.ம்:<br />
<div class="problem-header">
<div class="problem-title">
Problem 1</div>
<div class="problem-description">
Add all the natural numbers below one thousand that are multiples of 3 or 5.<a href="http://projecteuler.net/index.php?section=problems&id=1">*</a></div>
</div>
<pre><span class="scala-keyword">val</span> r = (<span class="scala-number">1</span> until <span class="scala-number">1000</span>).view.filter(n => n % <span class="scala-number">3</span> == <span class="scala-number">0</span> || n % <span class="scala-number">5</span> == <span class="scala-number">0</span>).sum</pre>
<br />
</p>
தொடர்புடைய சுட்டிகள்:<br />
<ul>
<li><a href="http://www.scala-lang.org">ஸ்காலா இணையதளம்</a></li>
<li><a href="http://www.artima.com/pins1ed/"> Programming in Scala முதல் பதிப்பு (இலவசம்). இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு</a></li>
<li><a href="https://www.coursera.org/">இணைய வகுப்புகள்.</a></li>
<li><a href="http://projecteuler.net/problems">ஆய்லர் புறத்திட்டு</a></li>
<li><a href="http://pavelfatin.com/scala-for-project-euler/">ஆய்லர் புறத்திட்டு - ஸ்காலா நிரல்கள்</a></li>
</ul>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29145729.post-20542835124532133492012-01-30T20:40:00.000-05:002012-01-30T20:40:11.532-05:00சாடிஸ் - செலவில்லாமல் நீர் சுத்திகரிக்கும் முறைSODIS - Solar Disinfection (சூரியஒளி சுத்திகரிப்பு) என்பதின் சுருக்கம். சுவிட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய எளிய நீர் <a href="http://www.sodis.ch/methode/index_EN">சுத்திகரிக்கும் முறை</a>. அவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறார்கள். நம்நாட்டு மக்களுக்கும் இம்முறை பெரிதும் உதவும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNA3LeTqfOHHkSRPt6fW9DiYoEQ0HArHVLOft0Lzwh-bkUJVzFfjAVqzBGVcpno9iDFnYmaJMGb9Qaaii3kt8eE80JgBbez1vDoZNYm8giek0tHM-lS2ytoL1L60SYh2WdJM-O/s1600/sodis-poster1.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNA3LeTqfOHHkSRPt6fW9DiYoEQ0HArHVLOft0Lzwh-bkUJVzFfjAVqzBGVcpno9iDFnYmaJMGb9Qaaii3kt8eE80JgBbez1vDoZNYm8giek0tHM-lS2ytoL1L60SYh2WdJM-O/s320/sodis-poster1.png" width="280" /></a></div><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwVLO3DfeQS0Ul7FC84eX_yJyiN6lqNXFWVsWHP9CWVtGh8Gm1NqQIALRdKmJ0J6ZrCc4mDimVvsdMQ4UBSGx82TDVVMpgBCDenbrQHFRZFcAK1PBNAbUPcNF3ESYp1rnCNs81/s1600/sodis-poster2.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwVLO3DfeQS0Ul7FC84eX_yJyiN6lqNXFWVsWHP9CWVtGh8Gm1NqQIALRdKmJ0J6ZrCc4mDimVvsdMQ4UBSGx82TDVVMpgBCDenbrQHFRZFcAK1PBNAbUPcNF3ESYp1rnCNs81/s320/sodis-poster2.png" width="282" /></a><br />
தேவையானது தண்ணீர் புட்டிகளும் சூரிய ஒளியும்தாம். நிறமற்ற PET (Polyethylene terephthalate) வகை பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிப்பது நல்லது. பயப்பட வேண்டாம், நம்மூரில் இப்போது சர்வசாதாரணமாக கிடைக்கும் 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அந்த வகைதாம். அந்த புட்டிகளில் குடிநீரை பிடித்து சூரிய வெளிச்சத்தில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால் போதும். வெயில் அதிகம் இருக்கவேண்டுமென்பதில்லை. வெளிச்சம் இருந்தால் போதும். சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் நீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழித்துவிடுகின்றன. உடனே உட்கொள்ள ஆரம்பிக்கலாம்.<br />
<br />
<br />
இம்முறையின் எந்த அளவு செயல்படுகிறது என்று அறிவதுதான் இந்த ஆண்டு பள்ளியில் மகள் எடுத்துக்கொண்ட அறிவியல் புறத்திட்டு. கொதித்து ஆறிய, சுத்திகரிக்கப்பட்ட, மற்றும் சுத்திகரிக்காத நீரின் மாதிரிகளை - பெத்திரிகிண்ணங்களில் சோதனை செய்தோம்.<br />
<br />
<div><b><br />
</b><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpARPON_Vl5VvRs_PXYJhhyphenhyphenMfQLr9rdkloshPsvkIiLOLLhcwdMW9hCKrplhdli6f1GVa0Mb8xWaeDQhyphenhyphengitJrVgsEYTJxX2rjo_8-bozuHpzPmCFnpzIgf3htsHi3lZe1loK/s1600/sodis.png" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpARPON_Vl5VvRs_PXYJhhyphenhyphenMfQLr9rdkloshPsvkIiLOLLhcwdMW9hCKrplhdli6f1GVa0Mb8xWaeDQhyphenhyphengitJrVgsEYTJxX2rjo_8-bozuHpzPmCFnpzIgf3htsHi3lZe1loK/s200/sodis.png" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b><br />
சுத்திகரிக்கப்பட்ட நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:</b></td></tr>
</tbody></table></div><div><b><br />
<br />
</b><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiilpX_SApHRtK9rbyf72ZVevex099qBUbUpFGM8rZEdd2xrvl8tMsZ8kTSe-ZJT-SHAJE0fjEW2QPOLLyqo7e65XTaHRu5BQ1x6SyID3KWrietiysvV0Sj7zzplhPoMYW-_4dl/s1600/untreated.png" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiilpX_SApHRtK9rbyf72ZVevex099qBUbUpFGM8rZEdd2xrvl8tMsZ8kTSe-ZJT-SHAJE0fjEW2QPOLLyqo7e65XTaHRu5BQ1x6SyID3KWrietiysvV0Sj7zzplhPoMYW-_4dl/s200/untreated.png" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b>சுத்திகரிக்கப்படாத நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:</b></td></tr>
</tbody></table></div><div><b><br />
</b><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvzt6T-dN8_ViDv2MxquJ_sKGu7jmbbInHhkyopwSuLQAl9ufX5dL1vInYbq5z1IhiOGdssIoNy5m0auKHthHXO12pyn0golwpzhBEuRVetm6sESZ_VV3fab1B0XV5W8iInYk7/s1600/boiled.png" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvzt6T-dN8_ViDv2MxquJ_sKGu7jmbbInHhkyopwSuLQAl9ufX5dL1vInYbq5z1IhiOGdssIoNy5m0auKHthHXO12pyn0golwpzhBEuRVetm6sESZ_VV3fab1B0XV5W8iInYk7/s200/boiled.png" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b><br />
கொதிவைக்கப்பட்ட நீரில் இருந்த பாக்டீரியாக்கள்:</b></td></tr>
</tbody></table></div>எதிர்பார்த்தது போல கொதிக்கவைக்கப்பட்ட நீரில் எந்த கிருமிகளும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரில், வெறும் தண்ணீரைவிட பாக்ட்டீரியா எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாங்கள் சோதித்தது குடிநீருக்கு பதில் வீட்டின் பின் இருக்கும் நீர்குட்டையிலிருந்து மாதிரிகளை சேகரித்ததால், சுத்திகரிப்பு அவ்வளவாக செயல்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நீர் கிடைக்காத தருணங்களில், நீரை கொதிக்கவைக்கவும் இயலவில்லை எனில் குறைந்தபட்சம் சாடிஸ் முறையை பயன்படுத்தி நீரை சுத்திகரித்து உட்கொள்ளல் நலம்.குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-29145729.post-23301258383859094692012-01-30T00:44:00.002-05:002012-01-30T00:58:11.152-05:00அமெரிக்காவில் சுவிசேசக் கொள்ளைகள்பீட்டர் பாப்பாஃப் - அமெரிக்கவில் சுவிசேசக்கூட்டங்கள் நடத்துபவன். கடவுளுடனான அவனுடைய நெருக்கம் ஆபாரமானதாக இருந்தது. கடவுள் அவனுக்கு மட்டும் அசரீரியாக ஒலிக்க, கூட்டத்தில் ஒருவரின் பெயரைச் சொல்லி அழைத்து, கதவு எண் உட்பட அவருடைய வீட்டுமுகவரி, அவர்களுக்கு என்னப் பிரச்சனை என்று புட்டுப்புட்டு வைப்பவன். கடவுளருளின் வடிகாலாகி தன் பரிசத்தால், தன் பேச்சால் பக்தர்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்தான். கடவுளின் கருணையை வேண்டி அவன் நடத்தியக் கூட்டங்களுக்கு ஏராளாமான மக்கள் வந்தனர். வந்த வருமானத்தில் பெரும் செல்வமும் புகழும் பெறலானான்.<br />
<br />
ஜேம்ஸ் ரான்டிக்கு இப்படிப் பட்டவர்களின் மேல் எப்போதுமே ஒரு சந்தேகக் கண். பார்வையாலேயே கரண்டிகளை நெழித்த யூரி கெல்லர், அதேபோல் புத்தகத்தைத் தொடமலேயே பக்கங்களை புரட்டிய ஜேம்ஸ் ஹைட்ரிக் பொன்றோரின் திருட்டுத்தனங்களை தொலைக்காட்சி நேரிடை நிகழ்ச்சிகளில் அம்பலப்படுத்தியவர். யாரேனும் தமக்கு தெய்வீக சக்தி இருப்பதாக சொல்வதை நிரூபித்தால் அவர்களுக்கு $1,000 காசோலை வழங்குவதாக 1964லேயே பகிரங்கமாக பந்தயம் வைத்தவர். அந்த பரிசுத்தொகை இப்போது $1,000,000 (1 மில்லியன் டாலர்). ஆனால் இதுவரை யாரும் வெல்லவில்லை. நம் நாட்டு மக்களுக்கோர் அறிய வாய்ப்பு. போட்டியில் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எல்லா பொன்னும் உங்களுக்குத்தான். மேல் விவரங்களுக்கு <a href="http://www.randi.org/site/index.php/1m-challenge.html">சொடுக்கவும்</a><br />
<br />
அவருக்காக பீட்டரை கண்காணிக்க கூட்டத்தோடு கூட்டமாக போனவர்கள் கவனித்த ஒரு விசயம் அவன் ஏதோ திருட்டுத்தனம் செய்கிறான் என்ற சந்தேகத்தைக் கூட்டியது. வரும் பக்தர்களில் முடமானவர்களை நடக்கவும், குருடர்களை கண் பார்க்கவும் வைத்த அவனது காதுகளில் காதுகேட்கும் கருவி இருந்தது. அவன்மூலம் எல்லோருக்கும் உதவிய தெய்வம் அவனுக்கு உதவவில்லையா? அல்லது இது ஏதேனும் தந்திரமா? என்று அறிய திட்டமிட்டார்கள். கால் ஊனமடைந்தவர் போல ஒருவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி அதில் வானொலி ஏற்பியையும் அதனுடன் ஒலிப்பதிவு செய்யும் சாதனங்களையும் மறைத்துவைத்து அனுப்பினார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இப்போது பீட்டருக்குக் கேட்ட குரல் வானொலியிலும் கேட்டது. ஆனால் அந்த குரல் தெய்வத்தினுடையது அல்ல, பீட்டரின் மனைவி எலிசபெத்தினுடையது. எலிசபெத் அருகில் இருந்த அறையிலிருந்துகொண்டு பக்தர்கள் நிரப்பியிருந்த படிவங்களிலிருந்த விசயத்தை தந்தியில்லா ஒலிபரப்பு செய்ய, பீட்டர் தன் காதுகேட்கும் கருவியில் கேட்டு, எதோ தெய்வத்திடம் இருந்து செய்தி வந்தது போல நடிக்கிறான் என்று கண்டார்கள். அந்த ஒலிபரப்பை பதிவு செய்துகொண்டார்கள்.<br />
<br />
ஒரு தொலைக்காட்சியில் பீட்டரின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி கூடவே அவன் மனைவி சொல்வதையும் ஒலிபரப்பினார்கள். பீட்டரின் தகிடுதத்தங்கள் உலகுக்கு அம்பலமாகின. பீட்டரின் தொழில் நசிந்து திவாலானது. இது நடந்தது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது அவனுடைய வருமானம் ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர்கள். இது அமெரிக்கா, அத்தோடு அவன் காலி என்று நினைத்தால் அதுதான் இல்லை. இப்போது மீண்டுவந்து அதே ஏமாற்று வேலையில் வருடத்திற்கு 23 மில்லியன் வருமானமாம். என்ன சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாதுரியமாக கொள்ளை அடிக்கிறான்.<br />
<br />
ஜேம்ஸ் எப்போதும் போல யாராவது திருந்தமாட்டார்களா என்று தன் பணியை செய்துகொண்டு இருக்கிறார். இணையத்தில் James Randi என்று தேடிப் பாருங்கள். <br />
<br />
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/KYdlX_Wn1K4" frameborder="0" allowfullscreen></iframe>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-29145729.post-50165574993855682422012-01-20T12:39:00.002-05:002012-01-20T13:02:49.622-05:00விடியல்சனிக்கிழமை இரவு, என் மனைவியின் அனத்தல் அதிகமாகி இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வலித்தால் மருத்துவமனையை அழைக்கச் சொல்லி இருந்தார்கள். கர்பகாலம் நாற்பது வாரம் முடிய இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. சென்றமுறை குறித்த நாள் கடந்து மேலும் பத்து நாட்கள் ஆனபின்னும் வலி ஏற்படவில்லை. அறுவை சிகிச்சையில்தான் மகள் பிறந்தாள். பொதுவாக அடுத்தக்குழந்தையும் அதேபோல அறுவை சிகிச்சையில்தான் பிறக்கும் என்பது பலருடைய அனுமானம். எனவே மருத்துவமனைக்கு வீணாகப் போய் வரவேண்டுமே என்று முனகலை சட்டை செய்யாமல் இருந்தேன். அவள் சித்தியை அழைத்து புகார் செய்தாள். அவர் கேட்டுக்கொண்டதாலும், இப்போது வலி ஏற்படும் இடைவெளி மிகவும் குறைந்திருந்ததாலும், மருத்துவமனையை அழைத்தேன். விசாரித்துவிட்டு உடனே வரச்சொன்னார்கள். இம்முறை அவளுடையப் பெற்றோர்கள் வரப் பயண ஏற்பாடு செய்து இருந்தோம். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வருவார்கள். எனவே உதவிக்கு வேறு யாரும் இல்லை. மகள் நண்பர் வீட்டில் தோழிகளோடு வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்றிருந்தாள்.<br />
<br />
அவள் பிறந்த அதே மருத்துவமனைதான். அதனால்தானோ என்னவோ, வண்டியை மருத்துவமனை வளாகத்துள் செலுத்தும்போது பிரமை போல இருந்தது. அந்த இரவிலும் செவிலியர்கள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். சந்தேகமில்லை அது பிரசவ வலிதான் என்று உறுதிசெய்தார்கள். எந்தவகை மயக்க மருந்து வேண்டும் என்று கேட்டு குறித்துக்கொண்டார்கள். உடனே படுக்கை தயாரானது. பரிசோதித்ததில் ஏற்கனவே ஆறு அங்குலத்திற்கு தசை தளர்ந்து இருந்தது தெரிந்தது. இயற்கை பிரசவத்திற்குத்தான் வாய்ப்பு. மூன்று நான்கு செவிலியர்கள் இருந்தனர், எல்லோரும் பெண்கள். நான் வலப்புறம் நின்று தலையைக் கோதிக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். இரண்டுபேர் உதவியாக கால்களை மடக்கி பிடித்துக்கொள்ள, மற்றொருவர் அவளுக்கு உந்தித்தள்ள கட்டளை செய்துகொண்டிருந்தார். சென்றமுறை சிறிய அழுத்தத்திற்கே ஆர்ப்பாட்டம் செய்தவள் முழு வலியை எப்படி பொருத்துக்கொள்ளப்போகிறாள் என்று எனக்கு பெரும் கவலை ஆயிற்று. எந்தவித மயக்க மருந்தும் கொடுக்க இயலாது, அதற்கான காலம் கடந்துவிட்டது என்றார்கள். வேறு வழி இல்லை, பொருத்துத்தான் ஆகவேண்டும். மூச்சுப் பயிற்சிபோல ”எங்கே மூச்சை இழு - 1,2,3 - இப்போது தள்ளு” - என்று தாளகதியில் சொல்ல, பல்லைக் கடித்துக்கொண்டு முக்கினாள். சிறிது சிறிதாக குழந்தையின் உச்சந்தலை தென்படத்தொடங்கியது. இறுதியாக ஒருமுறை சக்தியை எல்லாம் திரட்டி முக்கியபோது நடுவில் உட்கார்ந்திருந்தவரின் முகத்தின் மேல் நீர் பீய்ச்சி அடித்தது. வாயையும், கண்களையும் அனிச்சையாக சட்டென்று மூடி முகத்தைத் திருப்பிக்கொண்டார். ஆனாலும் கால்களைப் பிடித்திருந்த பிடியை விடவில்லை. முகம் முழுதும் தொப்பலாக நனைந்துவிட்டது. மற்றொருவர் தயாராக இருந்த துவாலையை வைத்து சுத்தமாக துடைத்துவிட்டார். இது சர்வசாதாரணமாக நடக்கும் போலும். அருவெறுப்போ, கோவமோ இல்லாமல், நன்றாக முக்கினாய் (தட் வாஸ் அ குட் புஷ்) என்று மட்டும் சொன்னார். இந்த இறுதி முயற்சியில் என் மனைவி அயர்ந்துவிட்டாள். மருத்துவரைக்கூட்டி வந்தார்கள். நாங்கள் இம்முறை தெரிவு செய்திருந்த பெண் மகப்பேறு மருத்துவர் அவர். தசைக்கருகில் மந்த ஊசி போட்டுவிட்டு நெடுவாக்கில் ஒரு அங்குலம் கொய்துவிட்டார். அடுத்த நிமிடத்தில் மற்றொரு உந்தலில் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு வந்து அரைமணி நேரத்திற்குள், யாருக்கும் பெரிய துன்பம் தராமல் எங்கள் செல்ல மகன் பிறந்தான். அவன் அழவேயில்லை.<br />
<br />
தொப்புள் கொடியை கத்தரித்து பிரித்தபின் அந்த அறையிலேயே இருந்த குழந்தை நல மருத்துவர் அவனை சோதனை செய்ய ஆரம்பித்தார். நான் என் மனைவிமேல் கண்ணாய் இருந்தேன். மகப்பேறு மருத்துவர், கருக்குடையைக் கொக்கிவைத்து இழுத்து அகற்றினார். என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கொய்துவிட்ட பகுதியில் தையல் போட்டார். குழந்தை நல மருத்துவர், என்மகனிடம் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு எதுவும் தெரியவில்லை என்றேன். ”இங்கே பார். கையை இழுத்து விட்டால், இயல்பாக திரும்ப மடக்கிக் கொள்ள மாட்டேன் என்கிறான். கழுத்துப்பகுதியில் நீர் தேங்கினார்ப் போல தளர்ந்து இருக்கிறது. கால் கட்டை விரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது.” என்றார். ”என் மகளை விடவும் உயரமும், எடையும் சிறிது குறைவு. மற்றபடி முகம் அவள் குழந்தை முகம்போலவே இருக்கிறது. எனக்கு வேறெதுவும் தெரியவில்லை. மூன்று வாரங்கள் முன்பே பிறந்ததால், வளர்ச்சியில் சிறிய வித்தியாசம் தெரிவது இயற்கை அல்லவா”, என்றேன். சிறிது நேரப் பரிசோதனைக்குப் பிறகு ”அவனைப் பற்றிக் கவலையாய் இருக்கிறது” என்றார். உடல் வெப்பம் குறைவாக உள்ளது என்று சொல்லி பாதுகாப்பு அறைக்கு எடுத்துப்போனார்கள். நாங்கள் வேறு அறைக்குச் சென்றோம்.<br />
<br />
என் மகளைப்பற்றி அறிந்தவர்கள், நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் என்பார்கள். நாங்கள் வேத வகுப்புகளில் செய்யும் பாராயணங்கள்தான் அத்துணை அமைதியும், அறிவும் கூடிய குழந்தையை தந்துள்ளன என்று சொல்வார்கள். அப்போதும் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தோம். மேலும், அனுதினமும் காலை குளித்து, சாமிப்படங்கள் முன் விளக்கேற்றி, நானும் மகளும் ஒரு சில சுலோகங்களும் சொல்லிக்கொண்டிருந்தோம். மகள் பிறந்தபின் இந்த மூன்று ஆண்டுகளில் நாம் என்ன தவறு செய்தோம். என் மகனுக்கு ஒன்றும் நேர வாய்ப்பில்லை. நான் புலால் உண்பதை திருமணமான முதலே மனைவிக்காக நிறுத்திவிட்டேன். மது, புகைப் பழக்கம் இல்லை. இருவரும் காப்பி, டீ கூட அருந்துவது இல்லை. அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன்.<br />
<br />
முதலில் யாரோ ஒருவர் உங்கள் மகனுக்கு டௌன்-சின்ட்ரோம் இருக்கிறது என்றார்கள். அப்படியென்றால் எனக்கு என்னவென்று தெரியவில்லை. மனம் ஊக்கமில்லாமல் இருப்பது என்று நினைத்துக்கொண்டேன். காலையில் மகப்பேறு மருத்துவர் வந்து, முன்கூட்டியே இந்த குறையைக் கண்டறிய முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். நான் ”அதனால் என்ன, இது என்ன குணப்படுத்த முடியாதக் குறையா?” என்றேன். குணப்படுத்துவது இருக்கட்டும் அவன் நல்லபடியாக வீட்டிற்குப் போவதைப் பார்ப்போம் என்றார். அன்று காலை நான்மட்டும் வீட்டிற்குப்போய் இணைய தளங்களில் தகவல் திரட்டும்போதுதான் இந்தக்குறையின் தாக்கம் புரிந்தது. <br />
<br />
திரும்பவும் மருத்துவமனைக்குப் போனபோது, மனைவியிடம் முழுவிவரமும் சொல்லவில்லை. குழந்தை இன்னும் பாதுகாப்பு அறையில்தான் இருந்தான். உடல் வெப்பம் எப்போதும் போல் 96 பாகைகள்தான் (ஃபாரன்ஹீட்) இருந்தன. குழந்தையால் அம்மாவிடம் பால்குடிக்க முடியவில்லை. உதடுகள் கவ்வி உறிஞ்சிகுடிக்கத் தசைகளில் வலு இருக்கவில்லை. குப்பியில் பிடித்து புட்டிப்பாலாக ஊட்டினாலும் குடிக்கவில்லை. அருகில் இருந்த செவிலியர் சிலர் தங்களுக்குள், ”இப்படிப்பட்ட குழந்தை எனக்கு இருந்தால், நான் வைத்துக் கொள்ளமாட்டேன். எங்காவது ஒப்படைத்துவிடுவேன்” என்று எங்கள் காது பட பேசிக்கொண்டார்கள். அன்று மாலை மரபணு சிறப்பு மருத்துவரை மருத்துவமனையிலேயே சந்தித்தோம். அவரிடம் நான் அறிந்த விசயங்களை பூடகமாக சொன்னேன். ”அறிவுத்திறன் குறைவாக இருக்கும், இன விருத்தி அணு செயலற்று இருக்கும்.” என்றேன். “ஆம், அவனால் பிள்ளை உண்டாக்கமுடியாது”, என்று தெளிவாக்கினார். என் மனைவி அழுதாள். நான் தனிமையில் அழுததைவிடவும் குறைவுதான்.<br />
<br />
திரும்பி எங்கள் அறைக்கு செல்லும் வழியில்தான் எங்கள் மகனை கண்ணாடிக்கூண்டில் வைத்திருந்தார்கள். அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் என் மனைவி வெளியேறினாள். அவளுக்கு மருத்துவமனையின் கண்காணிப்பு தேவையில்லாததால் அன்று இரவே வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். குழந்தை மட்டும் மருத்துவமனையிலேயேதான் இருந்தான். உடல் வெப்பம் இன்னும் குறைவாகவே இருந்தன. வீட்டில் நாங்கள் தனிமையில் இருந்தபோது மனம் உடைந்துபோய்க் கிடந்தோம். ஆனாலும் நான்கு மணிக்கு ஒருமுறை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டுமாதலால், குப்பிகளில் எந்திரத்தை வைத்து பால் சேகரித்து எடுத்துக்கொண்டு மறுநாள் அதிகாலையில் மருத்துவமனைக்குப் போனோம். நேற்று காலையில் இருந்த அதே தாதிப்பெண்தான் இருந்தாள். ”ஏனோ தெரியவில்லை எதுவுமே சாப்பிடமாட்டேன் என்கிறான்”, என்று கைவிரித்தாள். நானும் முயன்று பார்த்தேன். புட்டிக்காம்பின் முனையை வாயில் திணிக்கவேண்டி இருந்தது. என்ன செய்தாலும் பால் சொட்டுச் சொட்டாக கீழே வழிந்ததேஅன்றி அவன் வயிற்றுக்குள் போகவில்லை. இயல்பாகவே தளர்ந்த உடல், சாப்பிடவும் இல்லை என்றால் எப்படி தேறும். குழந்தைகள் தம் மீது அன்பு செலுத்த யாரும் இருக்கமாட்டார்கள் என்று உணர்ந்தால் வயிற்றிலேயே தன்னை மாய்த்துக்கொள்ளும் என்று கேட்டிருக்கிறேன். சில குழந்தைகள் பிறந்த பின் தாய்பாசம் கிட்டாமல் போனால் மரித்துப்போவதும் உண்டாம். சில மாதங்கள் முன்புதான் நண்பர் ஒருவரின் கைக்குழந்தை ஒன்று காப்பகத்தில் எந்தக்காரணமும் தெரியாமல் உறக்கத்திலேயே இறந்துபோனது. எங்கள் மகனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்கிற எங்களைப்பற்றிய சுயநலம்தான் அதுவரை மேலோங்கி இருந்தது. ஆனால் இப்போதுதான் எனக்கு அவனைப்பற்றிய கவலை என்னை முழுமையாக சூழ்ந்தது.<br />
<br />
அன்று மாலை மறுபடியும் மருத்துவமனைக்கு போனபோதுதான் என் நம்பிக்கை துளிர்விட்டது. குழந்தை வேறு ஒரு தாதிப்பெண்ணின் கைகளில் மலர்ச்சியாக இருந்தான். என்னிடம் இப்படி அவன் முகத்தைக் கீழ்நோக்கி இருப்பது போல முதுகை நம்மோடு ஒட்டி அணைத்துக்கொண்டு பாலூட்டினால் குடிக்கிறான் என்று காண்பித்தாள். பொதுவாக குழந்தைக்கும் நமக்கும் இயல்பில் அசவுகரியமான நிலை. ஆனால் இவனுக்கு அதுதான் பிடித்திருந்தது. புட்டிப்பால் மளமளவென்று என் துயரம்போன்று காலியாயிற்று.<br />
<br />
”உங்கள் பெயர் என்ன?”, வென்றேன். “விடியல்”, என்றாள்.<br />
<br />
<br />
(குறிப்பு: ஆங்கிலப் பெயர் ’டான்’ - Dawn. குடும்பப் பெயர் தெரியவில்லை)குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29145729.post-31241792740181525182012-01-05T03:02:00.009-05:002012-01-05T09:48:36.431-05:00தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’<div style="text-align: center;"><b>தூக்கு</b></div><div style="text-align: center;"><i>ஜார்ஜ் ஆர்வெல்</i></div><br />
இது நடந்தது பர்மாவில், தொடர் மழையில் ஊறிய ஒரு காலை வேளை. சீக்குப்பிடித்த வெளிச்சம், மஞ்சள் நிறத் தகரக்காகிதம் போல, சிறையின் உயர்ந்த மதில்களின் மேல் சாய்ந்திருந்தது. நாங்கள் சிறைக்கூடங்களின் வெளியேக் காத்திருந்தோம், அவை ஒரு வரிசையில் இரட்டைக் கம்பிக்கதவுகள் போட்ட தடுப்புகளாய், சிறு மிருகங்கள் அடைக்கும் கூண்டுகளைப் போலிருந்தன. ஒவ்வொன்றும் சுமார் பத்தடிக்குப் பத்தடி அறை, ஒரு பலகைக் கட்டிலும் தண்ணீர்ப் பானையும் தவிர உள்ளே வெறிச்சோடிக் கிடந்தது. சிலவற்றில் பழுப்பு நிற மனிதர்கள் மௌனமாக கம்பிக்கதவுகளின் பின் போர்த்தியபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் யாவரும் தண்டனைப் பெற்றவர்கள், இன்னும் ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்பட இருப்பவர்கள்.<br />
<br />
ஒரு கைதியை அறையிலிருந்து வெளியேக் கொண்டுவந்திருந்தனர். அவன் ஒரு இந்து, ஒல்லி நோஞ்சான் உடம்பு, மொட்டைத் தலை, நீர்த்தக் கண்கள். தடித்த நீண்ட மீசை வைத்திருந்தான், ஆளுக்கு பொருத்தமில்லாத மிகப் பெரிய மீசை, சினிமாக் கோமாளி போல. உயரமான ஆறு சிறைக் காவலர்கள் அவனைக் கண்காணித்து தூக்குமேடைக்குத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அதில் இருவர் கத்தி பொருத்திய துப்பாக்கிகளுடன் நின்றிருக்க, மற்றவர்கள் விலங்கை மாட்டி, அதில் சங்கிலியைக் கோர்த்துத் தங்கள் இடுப்புப் பட்டையில் இணைத்தார்கள், அவனுடையக் கைகளைப் பக்கவாட்டில் இருகக் கட்டினார்கள். அவனை மிகவும் நெறுங்கி இருந்து, எப்போதும் கை விலகாமல் கவனமாக, அணுக்கமான பிடியில், அவன் இருப்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக்கொள்வது போல சூழ்ந்திருந்தனர். அது உயிரோடு பிடித்த மீன் நழுவி தப்பித்துப் போய்விடாமல் பார்த்துக்கொள்வதைப் போல இருந்தது. ஆனால் அவன் துளி எதிர்ப்பும் காட்டது, தளர்வுடன் கைகளை பிணைக்கயிறு கட்டக் கொடுத்து, அங்கே நடப்பது எதுவும் பார்க்காதது போல இருந்தான்.<br />
<br />
மணி எட்டு அடித்தது, அழைப்பு முழக்கம், அனாதரவாக சன்ன ஒலியாக ஈரக் காற்றில் தூரத்தில் இருந்த இராணுவ கூட்டத்திலிருந்து மிதந்து வந்தது. சிறைக் கண்காணிப்பாளர், எங்களைவிட்டுத் தள்ளி நின்றிருந்தவர், எண்ண ஓட்டத்தில் சரளைக் கற்களை தன் தடிக்குச்சியால் நிரடிக்கொண்டிருந்தவர், அந்த சத்தத்தைக் கேட்டுத் தலையை உயர்த்தினார். அவர் இராணுவ மருத்துவர், அவரின் பல்தூரி மீசை நரைத்து குரல் தடித்து இருந்தது. “கடவுளே சீக்கிரம் ஆகட்டும், ஃபிரான்சிஸ்“, என்றார் கடுகடுப்புடன். ”அவன் இந்நேரம் பிணமாகி இருக்க வேண்டும். நீ இன்னும் தயாராகவில்லையா?”.<br />
<br />
ஃபிரான்சிஸ், தலைமை சிறை அலுவலர், குண்டு திராவிடன், வெள்ளைச் சீறுடையும் தங்கக் கண்ணாடியும் அணிந்தவன், தன் கருப்புக் கையை ஆட்டினான். “யெஸ் சார், யெஸ் சார்,” என்று பொங்கினான். “எல்லாம் நிறைவாக ஆயத்தமாயுள்ளன. தூக்கிலிடுபவன் காத்திருக்கிறான். நாம் ஆரம்பிக்கலாம்.”<br />
<br />
“அப்படியானால், விரைந்து அணிவகுத்து நடவுங்கள். கைதிகளுக்கு இந்த வேலை முடியும் வரை காலை உணவு கிடைக்காது.” நாங்கள் எல்லோரும் தூக்குமேடைக்குக் கிளம்பினோம். இரண்டு சிறைக்காவலர்கள் கைதியின் இருபுறமும் அணிவகுத்து, துப்பாக்கிகளை சாய்த்து நடக்க; மற்ற இருவர் அவனுக்கு மிக அருகில் அணிவகுத்து, கையையும் தோளையும் பற்றிக்கொண்டு, ஒருசேரத் தள்ளவும் தூக்கவுமாக சென்றனர். ஏனைய நாங்கள், நீதிபதி மற்றும் சேர்ந்தாட்கள் பின் தொடர்ந்தோம். திடீரென, பத்து கஜம்தான் நடந்திருப்போம், அந்த பேரணி எந்தக் கட்டளையும், முன்னறிவிப்பும் இன்றி நின்று போனது. ஒரு மட்டமான செயல் நடந்தது - ஒரு நாய், எந்த சமயம் பார்த்து வந்ததோ, முற்றத்தில் முகம் காட்டியது. அது எங்களை நோக்கி துள்ளி வந்தது, சரமாரியாக உரக்க குரைத்துக்கொண்டு, எங்கள் மேல் தாவித் தன் உடல் முழுதும் நாட்டியமாட, பல மனிதர்களை ஒரு சேர பார்த்தக் கொள்ளை மகிழ்ச்சியில் சுற்றிச்சுற்றி வந்தது. அதன் உடம்பெல்லாம் முடி, பாதி ஏர்டேல் வகை கலப்பின நாய். எங்களை சுற்றி சற்று நேரம் தாவி குதித்துவிட்டு, யாரும் தடுப்பதற்கு முன், அந்த கைதியின் மேல் பாய்ந்தது, மேலே ஏறி அவன் முகத்தை நக்கிக்கொடுக்க முயன்றது. எல்லோரும் பயத்தில் உறைந்திருந்தனர், அதைப் பிடிக்க எத்தனிக்கக்கூட இயலாமல் பின்வாங்கி இருந்தனர்.<br />
<br />
“யார் அந்த வெறிபிடித்த மிருகத்தை உள்ளே விட்டது?” கண்காணிப்பாளர் கோபமாகக் கத்தினார். “அதை யாராவது பிடியுங்கள்!”<br />
<br />
ஒரு சிறைக் காவலர், அணிவகுப்பிலிருந்து பிரிந்து, அந்த நாயைத் தட்டுத்தடுமாறி பிடிக்கப்போனார், ஆனால் அது போக்குக் காட்டி பிடிகொடுக்காமல் கூத்தாடியது, எல்லோரும் தன்னோடு விளையாடுகிறார்கள் என்று நினைத்தது. ஒரு ஐரோப்பா-ஆசியக் கலப்பினக் காவலன், கைநிறையக் கற்களை எடுத்து வீசி நாயை அடித்து விரட்ட முயன்றான், ஆனால் அது கற்கள் மேலே படாமல் விலகி எங்களை நோக்கி வந்தது. அது குரைக்கும் சத்தம் சிறை மதில்களில் எதிரொலித்தது. அந்தக் கைதி, இன்னும் இரண்டு காவலர்களின் பிடியில் இருந்தவன், ஆர்வமில்லாது இதுவும் தூக்கிடுவதில் மற்றொரு சடங்கு என்பதுபோலப் பார்த்தான். யாரோ ஒருவர் அந்த நாயைக் கட்டுப்படுத்துவதற்குள் சில நிமிடங்கள் ஆயிற்று. என் கைக்குட்டையை அதன் கழுத்து பட்டியில் சுற்றி பிடித்துக்கொள்ள எங்கள் பேரணி மீண்டும் தொடங்கியது, நாய் முனகலுடன் திமிறியபடி வந்தது. <br />
<br />
தூக்கு மேடைக்கு இன்னும் நாற்பது கஜம் இருந்தது. நான் எனக்கு முன்னே சென்ற கைதியின் வெற்று முதுகை பார்வையிட்டேன். அவன் கட்டப்பட்ட கைகளுடன் தள்ளாடி நடந்தான் ஆனால் மிக நிதானமான, ஒருபோதும் முழங்கால்களை விரைப்பாக்காத இந்தியர்களின் நடை பாணியில். ஒவ்வொரு அடியிலும் இறுகிய சதைகள் சரிந்து மீண்டும் அதன் இயல்பிற்கு வந்தன, பின்னந்தலைக் குடுமி மேலும் கீழும் நர்த்தனமாடியது, அவன் கால்த்தடங்கள் ஈரத்தரையில் அச்சு பதித்தன. ஒரு சந்தர்ப்பத்தில், இரண்டுபேர் அவனுடைய தோள்களை இருக்கிப் பிடித்திருந்ததையும் மீறி, தேங்கியிருந்த நீர்க்குட்டையில் கால் வைக்காமல் சற்றே விலகி நடந்தான்.<br />
<br />
ஆச்சரியம் என்னவென்றால், அந்தக்கணம் வரையிலும் நான் ஒரு ஆரோக்கியமான, சிந்தையுள்ள மனிதனை தகர்க்கப்போகிறோம் என்பதை உணரவில்லை. அவன் நீர்க்குட்டையிலிருந்து விலகி நடப்பதை பார்த்தபோதுதான், அந்த மர்மம் புலப்பட்டது, அந்த சொல்லவியலாதத் தப்பிதமான, வாழ்க்கை அதன் முழு வீச்சில் இருக்கையில் வெட்டி வீழ்த்தும் செயல். அந்த மனிதன் சாகக்கிடக்கவில்லை, உயிரோட்டத்தோடுதான் இருக்கிறான் நாங்கள் இருப்பதற்குச் சமமாக. எல்லா உறுப்புகளும் வேலை செய்கின்றன - வயிறு செரிக்கிறது, தோல் புதுப்பித்துக் கொள்கிறது, நகம் வளர்கிறது, திசு உருவாகிறது - உறுப்புகள் எல்லாம் வேறு சிந்தனை இல்லாமல் தன் போக்கில் உழல்கின்றன. அவனுடைய நகங்கள் வளர்ந்துகொண்டுதான் இருக்கும், தூக்குமேடையில் நிற்கும்போதும் சரி, அந்தரத்தில் விழும் கடைசி நொடிகளின் போதும் சரி. அவன் கண்கள் மஞ்சள் நிறத் தரையைப் பார்க்கின்றன, சாம்பல் நிறச் சுவற்றையும் காண்கின்றன, மூளை இன்னமும் நினைவு கூர்கிறது, முன்னுணர்வு கொள்கிறது, சீர்தூக்கச் செய்கிறது - நீர்க்குட்டையைப் பற்றிக்கூட. அவனும் நாங்களும் கூட்டாகத்தான் நடக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம், அதே உலகத்தை புரிந்துகொள்கிறோம்; ஆனால் இன்னும் இரண்டு நிமிடங்களில், ஒரு சொடுக்கில், எங்களில் ஒருவர் இருக்கப்போவதில்லை - ஒரு மனது குறையும், ஒரு உலகம் மறையும். <br />
<br />
தூக்குமேடை சிறிய முற்றத்தில், சிறையின் இதர முக்கியப் பகுதிகளிலிருந்து தனித்து இருந்தது, சுற்றிலும் முள்ச்செடிகள் மண்டிக்கிடந்தன. மூன்று பக்கமும் கற்களால் எழுப்பிய மேடை, அதன் மேல் பலகைகள், அவற்றுக்கும் மேல் இரண்டு தூண்கள், குறுக்குச்சட்டம், அதில் ஊசலாடிய கயிறு. தூக்கிலிடுபவன், ஒரு முடி நரைத்த குற்றவாளி, சிறைக்கூட வெள்ளைச் சீறுடையில், எந்திரத்திற்கு அருகில் காத்துக்கொண்டிருந்தான். எங்களைப் பார்த்துக் கூழைக்கும்பிடு போட்டான். ஃப்ரான்சிஸ் சொல்ல இரு காவலர்கள் கைதியை இன்னும் இருக்கமாகப்பிடித்து, பாதி நடையும், பாதி தள்ளுமாக தூக்குமேடைக்குச் செலுத்தி தட்டுத்தடுமாறி ஏணிப்படியில் ஏற உதவினர். அதன் பின் தூக்கிலிடுபவன் மேலே போய், சுறுக்குக்கயிற்றைக் கைதியின் கழுத்தில் மாட்டினான்.<br />
<br />
நாங்கள் ஐந்து கஜம் தள்ளி காத்து நின்றோம். காவலாளிகள் உத்தேசமான வட்டவடிவில் தூக்குமேடையைச் சுற்றி நின்றுகொண்டார்கள். சுறுக்கு கழுத்தில் இறுகியதும், அந்த கைதி தன் கடவுளை வேண்ட ஆரம்பித்தான். உச்சத்தொனியில், திரும்பத் திரும்பச் சொன்னான், “ராம்! ராம்! ராம்! ராம்!”, அவசரகதியில் பய நடுக்கத்தில் ஜபிப்பது போலோ உதவிக்கு கூப்பாடு போடுவது போலில்லாமல், நிதானமாக, தாளரீதியில், கோவில் மணி அடிப்பதற்கு ஒப்பாக இருந்தது. நாய் பதிலுக்கு ஈனமாக அழுகை ஒலி எழுப்பியது. தூக்கிலிடுபவன் இன்னும் மேடைமேல் இருந்தான், சின்ன பருத்தித் துணிப்பையை எடுத்து, மாவு சாக்கு போலிருந்த அந்தப் பையைக் கைதியின் தலை மேல் கவிழ்த்து முகத்தை மூடினான். ஆனால் அந்த சத்தம், துணியால் மட்டுப்பட்டாலும், இன்னும் தொடர்ந்தது, மீண்டும் மீண்டும்:“ராம்! ராம்! ராம்! ராம்!” <br />
<br />
அந்தத் தூக்கிலிடுபவன் கீழே இறங்கி இயந்திரத்தின் நெம்புகோலை பிடித்து தயாராக நின்றான். கைதியிடமிருந்து நிலையாக, மட்டுப்பட்ட வேண்டுதல் கேட்டுக்கொண்டே இருந்தது, “ராம்! ராம்! ராம்! ராம்!” ஒரு கணமேனும் பிசிறில்லை. கண்காணிப்பாளர், தலைக் குனிந்து தன் தடிக்குச்சியால் தரையை நோண்டிக்கொண்டிருந்தார்; எத்தனை முறை கூப்பிடுகிறான் என்று எண்ணிக்கை எடுத்தாரோ ஏதோ, கைதிக்கு குறிப்பாக இத்தனை தடவையென்று அனுமதி தரும் நோக்கில் - ஒரு ஐம்பது அல்லது ஒரு நூறு. எல்லோரும் நிறம் மாறிப்போயிருந்தனர். இந்தியர்கள் திரிந்த காப்பி போல வெளிறிப்போனார்கள் - ஒன்றிரண்டு துப்பாக்கிகள் அல்லாடின. நாங்கள் கட்டப்பட்டு முகத்திரை இட்டு தூக்குமேடையில் இருந்த மனிதனைப் பார்த்தவண்ணம், அவனுடைய வேண்டுதலைக் கேட்டோம் - ஒவ்வொரு அழைப்பும் மற்றொரு விநாடிநேர வாழ்க்கை; எல்லோர் மனதிலும் அதே எண்ணம்: ஓ, அவனை சடுதியில் கொல்லுங்கள், கதை முடுயட்டும், அந்த வெறுப்பான இரைச்சலை நிறுத்துங்கள்.<br />
<br />
சட்டென்று கண்காணிப்பாளர் முடிவுக்கு வந்தார். தலையை நிமிர்த்திக்கொண்டு தடிக்குச்சியை விசிறினார். “சலோ!” என்று கொஞ்சம் ஆங்காரமாக கத்தினார்.<br />
<br />
இயந்திரம் உராயும் சத்தம் கேட்டது, அதன் பின் மயான அமைதி. அந்த கைதி போய்விட்டான், கயிறு தன்னைத்தானே முறுக்கிக்கொண்டது. நான் பிடியைத்தளர்த்தி நாயை விடுவித்தேன், அது உடனே தூக்குமேடையை நோக்கிப் பாய்ந்து ஓடியது; ஆனால் சற்று அருகே சென்றதும், குரைத்து விட்டு, பின்வாங்கி முற்றத்தின் மூலைக்கு ஒடுங்கி, அங்கே முட்புதர்களுக்கு இடையே நின்று, எங்களை நடுக்கத்துடன் பார்த்தது. நாங்கள் தூக்குமேடையைச் சுற்றிச்சென்று கைதியின் உடலைப் பரிசோதிக்கப் போனோம். ஊசலாடியபடி, அவன் கால்விரல்கள் செங்குத்தாக தரையை நோக்கி இருக்க, மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தான், கல் போல செத்திருந்தான். <br />
<br />
கண்காணிப்பாளர் தன் தடிக்குச்சியை வைத்து அந்த வெற்றுடம்பை குத்திப் பார்த்தார்; அது சற்றே அல்லாடியது. “அவன் சரியாகத்தான் இருக்கிறான்,” என்றார். அவர் தூக்குமேடைக்கடியிலிருந்து வெளிப்பட்டு, பெருமூச்செறிந்தார். சிந்தனை வயப்பட்டமுகம் இப்போது காணாமல் போயிருந்தது. கைக்கடிகாரத்தை பார்வையிட்டார். “எட்டு மணி எட்டு நிமிடம்”, நல்லது, இன்றைய காலை வேலைகள் முடிந்தன. நன்றி கடவுளே.” என்றார்.<br />
<br />
காவலர்கள் துப்பாக்கிகளிலிருந்து கத்திகளை பிரித்து எடுத்து அணிவகுத்துப் போய்விட்டனர். அந்த நாய், தெளிந்து தான் செய்த சேட்டையை உணர்ந்து, அவர்களுக்குப் பின் ஓடிப்போய்விட்டது. நாங்கள் தூக்குமேடை முற்றத்தை விட்டு வெளியேறி, கைதிகள் காத்திருந்த குற்றவாளிகள் சிறைக்கூடத்தைத் தாண்டி, சிறையின் பெரிய நடு முத்தைவெளிக்கு வந்தோம். குற்றவாளிகள், லத்தி சகிதம் இருந்த காவலர்களின் ஆணைப்படி காலை உணவு பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நீள்வரிசையில் உட்கார்ந்து, ஒவ்வொருவரும் தகரத்தட்டு ஏந்தியிருக்க, இரண்டு காவலர்கள் அவர்களுக்கு அரிசி சோறு பரிமாரினார்கள்; அது வீட்டு நிகழ்ச்சி மாதிரி இருந்தது, தூக்கு நிரைவேறியபின் மகிழ்ச்சியான தருணம். எங்களுக்கு ஒரு பெரிய பாரம் குறைந்தது போல இருந்தது, வேலை முடிந்தது அல்லவா. உணர்ச்சி பொங்கியது, பாடவும், விட்டு ஓடவும், எக்காளமாய் சிரிக்கவும் என்று. ஒரே நேரத்தில் எல்லோரும் அளவளாவத் துவங்கினார்கள்.<br />
<br />
ஐரோப்பிய-ஆசிய கலப்பினப் பையன் என்னோடு நடந்து வந்து நாங்கள் வந்த பாதையை நோக்கி தலையாட்டி, அறிந்துகொள்ளக்கூடிய புன்னகையுடன்: “உங்களுக்குத் தெரியுமா, சார், நம் நண்பன் (இறந்த மனிதனைச் சொல்கிறான்), அவனுடைய மறுபரிசீலனை மனு நிராகரிக்கப்பட்டதைக் கேட்டதும், அவன் கூண்டில் தரையிலேயே பயத்தில் மூத்திரம் போய்விட்டான். அருள்கூர்ந்து என்னுடை ஒரு சிகரெட் எடுத்துக்கொள்ளுங்கள், சார். என்னுடைய புதிய வெள்ளி பெட்டி பிரமாதம் இல்லையா? தச்சர்கள் செய்தது, இரண்டு ரூபாய் - எட்டு அணா. மேன்மையான ஐரோப்பிய பாணி.”<br />
<br />
பலர் சிரித்தார்கள் - எதைப் பார்த்து, ஒருவருக்கும் உறுதியாகத் தெரியாது. <br />
ஃபிரான்சிஸ் கண்காணிப்பாளருடன் வளவளவென்று பேசிக்கொண்டு வந்தான். “நல்லது, சார், எல்லாம் மிக நிறைவாக நடந்தேறியுள்ளன. எல்லாம் முடிந்தது - இப்படி - ஒரு சொடக்கில்! எப்போதுமே இப்படியா என்றால் இல்லை - ஓ, நோ! நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களில், மருத்துவர்கள் தூக்கு மேடைக்குக் கீழேப் போய் கைதியின் கால்களைப் பிடித்திழுத்து சாகடிக்கவேண்டி இருந்தது. கொடுமை!”<br />
<br />
“உடம்பு இன்னும் நெழிந்து கொண்டிருக்கும்போதா? அது மோசம்.”, என்றார் கண்காணிப்பாளர்.<br />
”ஆமா சார், இதைவிட மோசம் என்னவென்றால், கைதிகள் ஒத்துழைக்காததுதான்! ஒரு ஆள், எனக்குத் தெரிந்து, அவனை அறையிலிருந்து கூட்டிவரப்போனபோது, கம்பிக்கதவை தொற்றிக்கொண்டான். சொன்னால் நம்பமாட்டீர்கள், சார், ஆறு காவலர்கள் தேவைப்பட்டனர் அவனைத் தூக்கிவர. இரண்டு பக்கமும் மூன்று பேர் சேர்ந்து காலை இழுத்து எடுக்கவேண்டி இருந்தது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். “இப்படி எங்களை தொந்தரவு செய்கிறாயே, எங்களுக்கு எத்தனை சிரமங்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பார்” என்று. அவன் கேட்பதாயில்லை. அவனால் ரொம்பவே கஷ்ட்டப்பட்டோம்.!” <br />
<br />
என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள். கண்காணிப்பாளர் கூட சகிக்ககூடிய வகையில் புன்முறுவல் செய்தார். “நீங்கள் எல்லோரும் வந்து கொஞ்சம் மது அருந்தினால் நன்றாயிருக்கும்,” என்று மிகப் பெருந்தன்மையுடன் அழைத்தார். ”என் காரில் ஒரு பாட்டில் விஸ்கி இருக்கிறது. நமக்கு உபயோகப்படும்.”<br />
<br />
நாங்கள் சிறையின் இரட்டைக் கதவுகளைத் திறந்து சென்று சாலைக்கு வந்தோம். “காலை இழுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு பர்மிய நீதிபதி திடீரென்று சத்தமாக எக்களித்தார். நாங்கள் எல்லோரும் சிரித்தோம். அந்த நேரத்தில் ஃபிரான்சிஸ் சொன்ன சம்பவம் மிகவும் கேலிக்கூத்தாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம், பர்மியர்கள், ஐரோப்பியர்கள் உட்பட மிகுந்த நட்புரிமையோடு. செத்தவன் ஒரு நூறு கஜ தொலைவில் கிடந்தான்.<br />
<br />
<br />
மேல் விவரங்களுக்கு: <a href="http://www.maamallan.com/2011/08/blog-post_777.html">விமலாதித்த மாமல்லனின்</a> சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ - இடுகை.<br />
<br />
என்னால் ஆன முயற்சி செய்து தமிழில் தந்துள்ளேன். தவறு பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும்.குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29145729.post-23549841091972093902010-12-06T16:37:00.003-05:002010-12-06T17:40:56.461-05:00காகிதப் பாலம்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6n9M-9ENKp_g8U1d6c8teSBuc9eEFvJIRrhp8XyaDf2qG0TBxjrT5YGpQuSXA0MoMFEKzoai8cOpQ5C1svKBDVy-lMIlpgbqLjCe87gnNgGduPs_KCgpLhi2vzS4lRMF5v1nH/s1600/bridge.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="136" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6n9M-9ENKp_g8U1d6c8teSBuc9eEFvJIRrhp8XyaDf2qG0TBxjrT5YGpQuSXA0MoMFEKzoai8cOpQ5C1svKBDVy-lMIlpgbqLjCe87gnNgGduPs_KCgpLhi2vzS4lRMF5v1nH/s320/bridge.jpg" width="320" /></a></div><br />
5ம் வகுப்பில் சென்ற ஆண்டு துவக்கப் பள்ளியில் (Susie E. Tolbert) அறிவியல் கண்காட்சிக்கு (science-fair) ”சிவப்பு, பச்சை, மஞ்சள்” நிறங்களில், எந்த வண்ணம் அதிக தூரம் தெரிகிறது என்ற ஆராய்ச்சி முடிவை சமர்பித்தோம். இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு நடுநிலைப் பள்ளி (James Weldon Johnson) ஆரம்பித்ததுமே ஆராய்ச்சி வேலையைத் தொடங்க சொன்னார்கள்.<br />
<br />
பல துறைகளின் புறத்திட்டுகளைப் பார்த்துவிட்டு, பாலம் கட்டுமானத்தைப் பற்றி ஆராயலாம் என்று முடிவு செய்தோம். சமதளப் பாலத்தை விட வில் போன்று வளைந்த (Arch) கட்டுமானம் அதிக உறுதி உள்ளது என்று எங்கோ படித்த விடயத்தை மையமாக வைத்து ஆய்வை ஆரம்பித்தோம். தேடலில் உறுதியான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் பனிமிட்டாய் மரக்குச்சிகளை (popsicle sticks) உருக்கு கோந்தை (hot glue) வைத்து ஒட்டி எப்படி பாலம் செய்வது எப்படி என்று விவரங்கள் கிடைத்தன (<a href="http://www.instructables.com/id/Popsicle-Stick-Bridge/">Popsicle Stick Bridge</a>). பாலங்கள் செய்தபின் அது எவ்வளவு எடை தாங்குகிறது என்று பார்க்க அது உடையும் மட்டும் சுமை ஏற்றுகிறார்கள். பின் உடையும்முன் தாங்கிய எடைக்கும் பாலத்தின் எடைக்குமான விகிதாச்சாரம் என்ன என்று பார்த்து அதிகமான விகிதாச்சாரம் கொண்ட பாலம் நல்ல வடிவமைப்பு என்று கணிக்கிறார்கள்.<br />
<br />
எங்கள் ஆராய்ச்சி அறிக்கை, ஏதேனும் ஒரு கேள்வி (problem), நம் கருதுகோள் (hypothesis), ஆய்வு (research), ஆய்வு முடிவு (conclusion) என்ற வடிவமைப்பில் இருக்க வேண்டும். அதன்படி எங்கள் கேள்வி:”எந்த வகை பாலம் உறுதியானது?”, கருதுகோள்: ”வளைவுப் பாலம் சமக்கிடக்கைப் பாலத்தை விட உறுதியாக இருக்கலாம்”. மூன்று வகைப் பாலங்கள் செய்வது, அதில் எது உறுதியானது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். <br />
<br />
ஆய்வு முடிவு நம்பகமாக இருக்க வேண்டுமெனில் மூன்றுக்கும் ஒரே அளவு பொருண்மை இருக்கவேண்டும். கட்டுமானக் கோளாறினாலும் பாலத்தின் பலம் குறையலாம். இந்தப் பிரச்சினைகளோடு, மூன்று பாலங்கள் செய்வது என்பது ஆறாம் வகுப்பு மாணவருக்கு மிகவும் அதிகப்படியான சுமையாகும். நானும் நிரைய உதவி செய்ய வேண்டி இருக்கும். <br />
<br />
எனவே கேள்வியை சிறிது மாற்றி அமைக்க வேண்டி பாலங்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் என்று ஆராய்ந்தோம்.<br />
<br />
அப்போதுதான் அட்டை காகிதத்தில் பாலம் செய்யும் முறையைப் படித்தோம் (<a href="http://bridgecontest.usma.edu/manual.htm">Designing and Building File-Folder Bridges</a>). இது அமெரிக்க ராணுவ பள்ளியை சேர்ந்த ஸ்டீபன் ஜெ. ரெஸ்லர் எழுதியது. பரியாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.<br />
<br />
- A Problem-Based Introduction to Engineering - Stephen J. Ressler, P.E., Ph.D. - United States Military Academy - Product of the U.S. Government<br />
Graphic Design -<br />
<br />
ஒரு சுமை, பாலத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் எத்தகைய, எவ்வளவு விசை உருவாக்குகிறது, அதற்குத் தகுந்தார்போல் எத்தகையப் பொருளைக் கொண்டு வடிவமைக்க வேண்டும் என்று பற்றி பள்ளி மாணாக்கர்கள் புரிந்துகொள்ளும் படி விளக்கமாக சொல்கிறார். அழுந்துவிசை ஏற்படும் இடங்களில் குழய்களும், இழுவை விசை ஏற்படும் இடங்களில் கம்பிகளும் பாவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம். இங்கே 7ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கணினியில் பாலம் வடிவமைக்கும் போட்டியும் நடத்துகிறார்கள். விருப்பம் உள்ளவர்களைக் கலந்துகொள்ளச் சொல்லுங்கள்.<br />
<br />
இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, கேள்வியை “வடிவமைப்பு எப்படி கட்டுமானத்தின் உறுதியை பாதிக்கிறது?” என்றும் கருதுகோளை, “சரியாக வடிவமைக்கப்பட்டக் கட்டுமானம் அதன் எடையைப் போல நூறு மடங்கு எடையைத் தாங்கக் கூடும்.” என்று மாற்றிக் கொண்டோம். இதனால் ஒரே ஒரு பாலம் செய்தால் போதுமாயிற்று.<br />
</p><br />
<p>புறத்திட்டு அறிக்கையில், திரவு திரட்டுதலும், வரைபடங்களும் இன்றியமையாதன. எனவே உபரியாக புத்தகத்தில் சொன்னபடி பாலத்தின் பாகங்களின் திறனை சோதனை செய்யும் நெம்புகோல் இயந்திரமும் செய்தோம். அதை வைத்து எப்படி குழாய் வடிவம் அதிக அழுந்துதிறன் கொண்டதாகவும், 8 மில்லிமீட்டர் அகலமுடைய அட்டை ~3,600 கிராம் இழுவைத்திறன் கொண்டதாகவும் உள்ளது என்று அட்டவணைப் படுத்தினோம். <br />
</p><br />
<p>பாலத்தை செய்து முடித்துவிட்டு சந்தேகத்தோடுதான் அதைப் பரிசோதித்தோம். எங்கள் கருதுகோள் உண்மை ஆயிற்று. ஆச்சரியகரமாக 50 கிராம் எடை இருக்கும் பாலம் 5 கிலோவிற்கு மேல் எடையை தாங்கிற்று. மேலும் இரண்டுமுறை இன்னும் அதிகமான சுமையை ஏற்றினோம். இது பள்ளியில் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டால் இன்னும் பலரை அதிசயிக்கச் செய்யக்கூடும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhilK4e-_W9F-SPqGjK9_d5sMtLkMfUFFDdn_1ogIdfF7BXWaDfQEIjWTS_hyphenhyphenraXA18or3kGZp42fxDZYOyQ2D0SPij3bkh3jnYtyhROjSTnr2iVjErRV7bRlNViJSJe0iDvnom/s1600/bridge-weight.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhilK4e-_W9F-SPqGjK9_d5sMtLkMfUFFDdn_1ogIdfF7BXWaDfQEIjWTS_hyphenhyphenraXA18or3kGZp42fxDZYOyQ2D0SPij3bkh3jnYtyhROjSTnr2iVjErRV7bRlNViJSJe0iDvnom/s320/bridge-weight.jpg" width="320" /></a></div>பாலத்தின் எடை 50 கிராம்</p><br />
<p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTfwvQTy9y7FcSadZkiiJ6cr2AOX89P5QZp2BjG6qk99Q3UHy6Y1MGvLusmM8zAePMhstYZJFT9olJnZXSlnIvUHTUrdV25nWMEdhQPfu-VGBlbnpiGTy6CPmgj1f6LhGg-tey/s1600/load-test.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTfwvQTy9y7FcSadZkiiJ6cr2AOX89P5QZp2BjG6qk99Q3UHy6Y1MGvLusmM8zAePMhstYZJFT9olJnZXSlnIvUHTUrdV25nWMEdhQPfu-VGBlbnpiGTy6CPmgj1f6LhGg-tey/s320/load-test.jpg" width="320" /></a></div>சுமை 5,595 கிராம்</p><br />
<b>மேலும் சில படங்கள்.</b><br />
<br />
<p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvGzfYtSyr3Wwhl1U91ohyZjqaK2lpeDPfxVWFl-kdiZSBy5yrW7OkIRDcu0neaLFyIEXa0wMXzv_-8fLrIR4t88qt7M-JErUT-LP7gZQSneZjJ4yeTObDLLRvSnna50orIc6R/s1600/tensile-and-compression-testing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvGzfYtSyr3Wwhl1U91ohyZjqaK2lpeDPfxVWFl-kdiZSBy5yrW7OkIRDcu0neaLFyIEXa0wMXzv_-8fLrIR4t88qt7M-JErUT-LP7gZQSneZjJ4yeTObDLLRvSnna50orIc6R/s320/tensile-and-compression-testing.jpg" width="320" /></a></div>நெம்புகோல் எந்திரம் (lever based testing machine)<br />
</p><br />
<p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidwFhqkJhDSE4zN9qZW7XRS6l2coJV26_GHZWNIm4_KIHIvkYWkZwKDAnbIDyPtsNIZuFHVo3Tai0teHu4rmqCs9UNddcycH-AZxC0ZjJpfBHEfnd3sI2NcYE3GUXHFFLlmlAt/s1600/4994-grams.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidwFhqkJhDSE4zN9qZW7XRS6l2coJV26_GHZWNIm4_KIHIvkYWkZwKDAnbIDyPtsNIZuFHVo3Tai0teHu4rmqCs9UNddcycH-AZxC0ZjJpfBHEfnd3sI2NcYE3GUXHFFLlmlAt/s320/4994-grams.jpg" width="320" /></a></div>ஒரு அடுக்கு புத்தகங்கள் - 4,994 கிராம். (எடை எந்திரத்தின் அதிகபட்ச நிறுவை 5000 கிராம்)<br />
</p><br />
<p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_A_0fOpBbTsO0nNBc5vy8-xbjNTOS1XvRxh2_2ZVyljiD38KJlZlXzbQSej8SkOODpkAZPMP7lNf22YjlmHy_FQbCywB_yp4za4se0ESGvzXE9IH9L18NozQgIZYkk6HDTWK3/s1600/601-grams.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_A_0fOpBbTsO0nNBc5vy8-xbjNTOS1XvRxh2_2ZVyljiD38KJlZlXzbQSej8SkOODpkAZPMP7lNf22YjlmHy_FQbCywB_yp4za4se0ESGvzXE9IH9L18NozQgIZYkk6HDTWK3/s320/601-grams.jpg" width="320" /></a></div>அடுத்த அடுக்கு புத்தகங்கள் - 601 கிராம்.<br />
<p>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29145729.post-71708416883672912292010-04-10T23:56:00.003-04:002010-04-11T00:09:40.746-04:00Scratch - ஸ்க்ராட்ச், சிறுவர் பயில எளிய நிரலிசிறார்கள் எளிதில் கணினி நிரல்களின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நிரல் மொழிதான் <a href="http://scratch.mit.edu/">ஸ்க்ராட்ச்</a>. இதன் சிறப்பு அம்சம் இதன் இடைமுகப்பு. நிரலின் கட்டகங்களை, ஏறக்குறைய தீப்பெட்டி அடுக்குவது போல சுட்டியை வைத்தே உருவாக்கிக்கொள்ளலாம். கீழே உள்ள படங்களைப் பார்த்தாலே புரியும் விரிவாக விளக்கவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். மேலும் கட்டகங்களில் சொற்களை பொருத்திக்கொள்ள வசதி இருப்பதால், கட்டளைகளை வேண்டிய மொழிகளில் அமைத்துக்கொள்ள முடிகிறது.<br />
<br />
புகழ் பெற்ற மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) ஆராய்ச்சியாளர்கள் 2007ல் இதை தயாரித்து வெளியிட்டனர்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihb1D600yaUsmwt5k27mto8vDOlARTr8uKoY3XWrLLJr8lRamkyZY_M0gFztGaK416iru5zpR_9rBXKKEGeT5joMP0dY9foN6kcmXi82b5EJp2SmRwVoNo9LePwC9Dqb_HAZjR/s1600/scratch-tamil.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihb1D600yaUsmwt5k27mto8vDOlARTr8uKoY3XWrLLJr8lRamkyZY_M0gFztGaK416iru5zpR_9rBXKKEGeT5joMP0dY9foN6kcmXi82b5EJp2SmRwVoNo9LePwC9Dqb_HAZjR/s320/scratch-tamil.png" /></a><br />
<br />
இந்தி, கன்னட மொழியாக்கங்கள் தயாராக இருந்தாலும் தமிழ் மொழியாக்கம் இல்லை. எனவே நானே சில சொற்களுக்கு மட்டும் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தேன். நீங்கள் விரும்பினால் இணைத்துள்ள கோப்பை (ta.po) ஸ்க்ராட்ச் நிறுவியுள்ள இடத்திற்கு அடியில் locale/ அடைவில் சேர்த்துக்கொள்ளவும். இங்கே மற்ற மொழி கோப்புகளைக் காணலாம் (உ.ம் kn.po கன்னடம்). நிரைய பேருக்கு இது பயனுள்ளதாக இருந்தால், மேலும் மெருகேற்றி சோதனைகளுக்குப் பின் MITக்கு அனுப்பினால் அடுத்த வெளியீடுகளில் சேர்த்துக்கொள்வார்கள். இது என்னுடைய பரீட்சார்த்த முயற்சி மட்டுமே, உங்களில் யாருக்கேனும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் மாணவர்களுக்கு இதுமட்டும் போதாது. எப்படி உபயோகிப்பது என்ற பாடங்களையும் தமிழில் தரவேண்டும்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh514V2xZs-RjnjmacAW27zfPtx5ipWMPeVls6FWhcvlUiw-TAiDUnbVFXvMF4Bh09Kes9JJn9S_wSsqN7EGFpYNPLuATbBO1rlpz41KPgf_1zUKk1DEGaelydDIIPrcb-mrb29/s1600/scratch-circuit-en.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="113" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh514V2xZs-RjnjmacAW27zfPtx5ipWMPeVls6FWhcvlUiw-TAiDUnbVFXvMF4Bh09Kes9JJn9S_wSsqN7EGFpYNPLuATbBO1rlpz41KPgf_1zUKk1DEGaelydDIIPrcb-mrb29/s200/scratch-circuit-en.png" width="200" /></a><br />
<div 1em;="" class="separator" clear:="" float:="" left;="" margin-bottom:="" margin-right:=""><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1jzmcNr-EUDTVNwFQ8lrgjUvO-QInyRFt4ntqUEa3JZN_dF9NNCFwiwr6EYEMwHNjFlHw8cWSDKpsYUXLsvP1zNFKZzigy6yZuyVcJUM9S2Timk9_ZJ_vpsx0QpstMcN3N4iI/s1600/scratch-circuit-ta.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="113" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1jzmcNr-EUDTVNwFQ8lrgjUvO-QInyRFt4ntqUEa3JZN_dF9NNCFwiwr6EYEMwHNjFlHw8cWSDKpsYUXLsvP1zNFKZzigy6yZuyVcJUM9S2Timk9_ZJ_vpsx0QpstMcN3N4iI/s200/scratch-circuit-ta.png" width="200" /></a></div><br />
நிரைய உதாரணங்கள், ஒலிக்கோப்புகள் கூடவே வருகின்றன. மேலும் உங்கள் ஆக்கத்தை எளிதாக மற்றவர்களுடன் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் ஸ்க்ராட்ச் நிறுவிக்கொள்ளவில்லை என்றாலும், உலவி மூலமே பயன்படுத்திக்கொள்ள முடியும். 500 ஆயிரம் பேர்களுக்கு அடுத்து 18 மில்லியன் நிரலிகளை இப்படி பகிர்ந்து கொள்கின்றனர். தமிழ் மாணவர்களும் பங்கெடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.<br />
<br />
சிறு குறிப்பு, ஸ்க்ராட்சில் தமிழ் தட்டச்சு செய்ய முடிவதில்லை. வேறு இடங்களில் எழுதி வெட்டி ஒட்டினால் ஏற்றுக்கொள்கிறது. மேலதிக உதவி வேண்டுமானால் செய்ய சித்தமாய் உள்ளேன்.<br />
<br />
<b>உசாத்துணைகள்:</b><br />
<ul><li><a href="http://docs.google.com/leaf?id=0B-610O8xIpeeZWM4ZTU0ZDUtZmVkNC00ODNmLWFmNDgtMjE5NjI0MTdhZDUy&hl=en">ஸ்க்ராட்ச் தமிழ் மொழியாக்கம் (ta.po)</a></li>
<li><a href="http://scratch.mit.edu/">ஸ்க்ராட்ச்</a></li>
</ul>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-29145729.post-15480408746444105502010-04-08T20:24:00.003-04:002010-04-09T10:45:52.308-04:00IVLIVS என்றால் என்ன?ரோமானிய்ர்களின் எண் குறியீடுகளில் சில I V X L C என்று தெரியும். அவற்றைக் கொண்டு எண்களை குறிப்பதில் உள்ள பிரச்சனைகளும் தெரியும். அவர்களுக்கு எண்களில் மட்டுமல்ல எழுத்துக்களிலும் பிரச்சனைகள் இருந்தன. கி.மு 100 வாக்கில் அவர்கள் மொத்தம் 21 எழுத்துக்கள் மட்டுமே கொண்டு எழுதி வந்தனர்.<br />
<br />
அவ்வெழுத்துக்கள் : A B C D E F Z H I K L M N O P Q R S T V X<br />
<br />
மற்ற எழுத்துக்கள் J, U, W, Y, G பதிநான்கு நூற்றாண்டு இடை வெளியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்தன. J மெய் எழுத்து ஓசைக்கு I -ஐ பயன் படுத்தினார்கள். அதேபோல U உயிர் எழுத்து ஓசைக்கு V. சொல்லில் எழுத்து வரும் இடங்களைக் கொண்டு சரியாக உச்சரித்துக்கொண்டனர். இப்போது புரிகிறதா IVLIVS நமக்கு தெரிந்த ஜூலியஸ் (JULIUS) தான்.<br />
<br />
இவையெல்லாம் ஆயிரம் ஆண்டுகளாக நடந்த சிறு மாற்றங்கள். தேவையற்ற சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழை ஏன் அவக்கர கதியில் சீரழிக்க நினைக்கிறார்கள்.<br />
<br />
ஜூலியஸ் சீசரின் பெயர் பொறிக்கப்பட்ட நாணயம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikeCx_Cu1c9sy5ilenTPnhAoFsZcukQsRE1EhhmABxqfmt24OonRZ2lswX-GWm3go-gKt6OgTSuG9oNfnl7S0zPTKB1q7lttzjudbQscBZVAYxKGon0jDOQsfqoe5dweYzZ-He/s1600/julius.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikeCx_Cu1c9sy5ilenTPnhAoFsZcukQsRE1EhhmABxqfmt24OonRZ2lswX-GWm3go-gKt6OgTSuG9oNfnl7S0zPTKB1q7lttzjudbQscBZVAYxKGon0jDOQsfqoe5dweYzZ-He/s320/julius.jpg" /></a></div>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-29145729.post-32338538024347206082010-04-08T00:03:00.005-04:002010-04-08T00:40:17.622-04:00பாரம்மா நான் ஒரு கையில் 31 வரை எண்ணுகிறேன்.சாதாரணமாக ஒரு கையை வைத்து 5 வரை எண்ணலாம், அது எப்படி 31 வரை எண்ணுவது? கணினி போல இரும குறியீட்டை (binary coding) பயன்படுத்தினால் முடியும்.<br />
<br />
நாம் விரல் விட்டு எண்ணுவது ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு கோடு இழுப்பது போன்று.<br />
<br />
அதாவது :<br />
1 = |, 2 = ||, 3 = |||, 4 = ||||, 5 = |||||<br />
<br />
அச்சு வடிவங்களில், இந்த கற்காலக் குறியீட்டிலிருந்து தசமக்குறியீட்டிற்கு (0,1,2, ...,9) மாறிக்கொண்டோம். அச்சில் உள்ளது போல நாம் ஒவ்வொரு விரலையும் 10 விதமாகக் கோணிக்கொள்ள முடியுமானால், நாம் ஒரேக் கையில் 99,999 வரை எண்ணிக்கொள்ளலாம் இல்லையா. (ஒருவேளை சிம்பு செய்யக்கூடும்)<br />
<br />
<h4>இருமக்குறியீட்டில் எண்களை எப்படி எழுதுகிறோம்:</h4>இரும முறையில் இரண்டு குறியீடுகள் 0 மற்றும் 1 மட்டுமே வைத்து எண்களைக் குறிக்கிறோம்.<br />
<br />
தசமக்குறியீட்டில் ஒவ்வொரு இலக்கமும் 10ன் மடங்காக 1, 10, 100 என்று அதிகரிப்பது போல, இருமக்குறியீட்டில் ஒவ்வொரு இலக்கமும் 2ன் மடங்காக 1, 2, 4, 8 என்று அதிகரிக்கிறது.<br />
<br />
25-ஐ தசமத்தில் இவ்வாறு புரிந்து கொள்ளலாம்.<br />
2 பத்து + 5 ஒன்று<br />
2 x 10 + 5 x 1 = 25<br />
<br />
அதுவே இருமத்தில் இவ்வாறாகும்: 11001 <br />
1 பதினாறு + 1 எட்டு + 0 நான்கு + 0 இரண்டு + 1 ஒன்று<br />
1 x 16 + 1 x 8 + 0 x 4 + 0 x 2 + 1 x 1 = 25<br />
<br />
<a href="http://www.glassgiant.com/geek/count_to_31_on_one_hand/" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqA9xutQyHf-BG71_rFQtCyVOTxHTrM1ZYT98Rc0G4J5rwHLbjMTdbtHo3xhGSy9jm0h5ujvn6ugUNzpnsfq4dVTBvU7bQaPhswYfXbths6EN_zaNTu9cm67ZdRoCPO3gnmz2q/s320/11001.png" /></a><br />
இருமத்தின் குறியீடுகள் இரண்டையும், சுழி (0) மற்றும் ஒன்றை (1) குறிக்க விரலை எளிதாக மடித்தும் உயர்த்தியும் காட்ட முடியும்.<br />
<br />
அதன்படி கையில் கட்டை விரல்(16), ஆள் காட்டி விரல்(8) மற்றும் சுண்டு விரல்களை(1) உயர்த்தி மற்ற விரல்களை மடித்துக்காட்டினால் 25 என்று புரிந்து கொள்ளலாம். உபரித் தகவலாக இந்தக் முத்திரை சைகை மொழியில் நான் உன்னை விரும்புகிறேன் என்பதைக் குறிக்கும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<hr/>ஐந்து இலக்க இரும எண்ணில் 0-இருந்து 31 வரை குறிக்கலாம்<br />
00000 = 0<br />
00001 = 1<br />
00010 = 2<br />
00011 = 3<br />
00100 = 4<br />
00101 = 5<br />
00110 = 6<br />
00111 = 7<br />
01000 = 8<br />
01001 = 9<br />
01010 = 10<br />
01011 = 11<br />
01100 = 12<br />
01101 = 13<br />
01110 = 14<br />
01111 = 15<br />
10000 = 16<br />
10001 = 17<br />
10010 = 18<br />
10011 = 19<br />
10100 = 20<br />
10101 = 21<br />
10110 = 22<br />
10111 = 23<br />
11000 = 24<br />
11001 = 25<br />
11010 = 26<br />
11011 = 27<br />
11100 = 28<br />
11101 = 29<br />
11110 = 30<br />
11111 = 31<br />
<br />
சரி 10 விரல்களில் எத்தனை வரை எண்ணலாம்: <b>1023</b>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-29145729.post-61588161297694293562010-04-05T03:45:00.003-04:002010-04-05T04:02:28.949-04:00எங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி<h3>எங்களுக்கு ஏன் இந்த கதி</h3><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTrYTkoMulSQCwQsS2w95cgePgT5b4ZzNdUyk7MTien6Qk3Uvosqgs71SZSJFiZE_jY66yLmQGtuzvfySF4MR9eKNnPsX9wQRbwVocZuWb7g4zKU7PlHIK3WhMsdMYWI4yP5sJ/s1600/JK.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTrYTkoMulSQCwQsS2w95cgePgT5b4ZzNdUyk7MTien6Qk3Uvosqgs71SZSJFiZE_jY66yLmQGtuzvfySF4MR9eKNnPsX9wQRbwVocZuWb7g4zKU7PlHIK3WhMsdMYWI4yP5sJ/s400/JK.jpg" width="313" /></a></div>ஏதோ ஒன்று வெடித்து அதிர்ந்தது. அதிகாலை நான்கரை மணி, இன்னும் மிகவும் இருளாக இருந்தது. பொழுதுப் புலர மேலும் அரைமணி நேரம் ஆகலாம். மரங்களில் பறவைகள் இன்னும் தூங்கிக்கிடந்தன, அந்த பயங்கர சத்தம் அவற்றை உசுப்பியதாகத் தெரியவில்லை, ஆனால் இருள் விலகியதும் அவை இரைச்சலோடு வழக்காடத் தொடங்கிவிடும். நிலத்தின்மீது மெல்லிய மூடுபனி படர்ந்திருந்தது, ஆனால் விண்மீன்கள் மிகத்தெளிவாகத் தெரிந்தன. முதல் வெடிஅதிர்வை தொடர்ந்து, மேலும் சில தூரே எழுந்தன; சிறிது அவகாசத்திற்குப் பிறகு பட்டாசுகள் சுற்றுமுற்றும் வெடிக்க ஆரம்பித்தன. பண்டிகை நாள் ஆரம்பித்தாயிற்று. அன்று காலை, பறவைகள் தங்கள் சச்சரவுகளை நீட்டிமுழக்காமல், அந்த மூர்க்கமான ஓசைகள் அச்சமூட்டவே சுருக்கமாக முடித்துக்கொண்டு விரைந்து விலகிப்போயின. ஆனால் மாலை நெருங்கினால் அவை மீண்டும் அதே மரங்களில் கூடி, தங்கள் அன்றாட செயல்களை ஒருவருக்கொருவர் உரத்து சொல்லிக்கொள்ளும். ஆதவன் கதிர்கள் இப்போது மரங்களின் உச்சியை தீண்ட, அவை சன்னமான வெளிச்சத்தில் ஒளிர்ந்தன; சலனமற்ற அழகோடு ஆகாயத்திற்கு வடிவம் கொடுத்தன. தோட்டத்தில் பூத்திருந்த ஒற்றை ரோஜா பனித்துளிகளில் ஊறி கனத்திருந்தது. பட்டாசு ஓசை சூழ்ந்தபோதும், ஊர் தன்போக்கில் மெதுவாக நிதானமாக விழிக்க, அந்த ஆண்டின் தலையாயப் பண்டிகை நாள் தொடங்கியது; அன்று விருந்தும் கொண்டாட்டமுமாக இருக்கும், செல்வந்தரும் வரியவரும் தமக்குள் பண்டங்களை பரிமாரிக்கொள்வர்.<br />
<br />
மாலை இருள் சூழும் நேரம், மக்கள் ஆற்றங்கரையில் குழுமத் தொடங்கினர். அவர்கள் சிறு களிமண் கிண்ணத்தில் எண்ணெய் நிரப்பி, திரி ஏற்றி, அதை நீரில் மிதக்கச் செய்தார்கள். பிரார்த்தனைக்குப் பிறகு அந்த விளக்குகளை ஆற்றோடு மிதந்து போக விட்டார்கள். விரைவில் பல்லாயிரக்கணக்கான ஒளி வட்டங்கள் நீரில் மினுமினுத்தன. அந்தக் காட்சி மெய்மறக்கச் செய்தது, எதிர்பார்ப்புக் கூடிய முகங்கள் சிறு தீபங்களால் ஒளிர, நதி அதிசய ஒளியாக ஓடியது. அண்டமே தன் நட்சத்திரங்கள் புடை சூழ ஒளி ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டிருக்க, பூமி தன் அன்பு மக்களோடு அமைதி பூண்டிருந்தது. <br />
<br />
அந்த சூரிய ஒளி வீசும் அறையில் நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்: கணவன், மனைவி, மேலும் இரண்டு ஆடவர். எல்லோருமே இளைஞர்கள். அந்த மனைவி சோகம் ததும்ப, விரக்தியோடு காணப்பட்டாள். கணவனும் உயிரற்று இறுகிய முகத்தோடு இருந்தான். மற்ற இரு ஆடவர்களும் <br />
கூச்சத்தோடு அமைதியாக அமர்ந்து, மற்றவர்கள் பேசட்டும் என்று இருந்தனர். தக்கத்தருணத்தில் கூச்சம் விலகிய பின் நிச்சயமாக பேசுவார்களாயிருக்கும்.<br />
<br />
"எங்களுக்கு ஏன் இந்த கதி?" என்று ஆரம்பித்தாள். குரலில் வெறுப்பும் கோபமும் கலந்திருந்தது, கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து கன்னங்களில் வழிந்தது. "எங்கள் மகனை பாசத்தோடு வளர்த்தோம்; அவன் வெகு சூட்டிகையான பையன், படு சுட்டி, எப்போதும் சிரித்த முகம். நாங்கள் அவனை வெகுவாக நேசித்தோம். அவனை மிகவும் செல்லமாக வளர்த்தோம். அவனுடைய வளமான வாழ்விற்காகத் திட்டமிட்டோம்..." தொடர்ந்துப் பேச முடியவில்லை, நிறுத்தி கொஞ்சம் அசுவாசப்படுத்திக்கொண்டாள். "உங்கள் முன்னால் மனமுடைந்து போவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்", என்று தொடர்ந்தாள், "என்னால் தாங்க முடியவில்லை. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தவன், சில நாட்களில் எப்போதும் திரும்பி வரமுடியாத இடத்திற்குப் போய்விட்டான். இது என்ன கொடுமை, எங்களுக்கு ஏன் இந்த கதி? நாங்கள் கண்ணியமாக வாழ்ந்து வந்தோம்; ஒருவரோடு ஒருவர் அன்போடு இருக்கிறோம், எங்கள் மகன் மீது அதைவிட பாசமாக இருந்தோம். இப்போது எங்களை விட்டுப்போய்விட்டான், எங்கள் வாழ்ககை சூனியமாகிவிட்டது - கணவர் அலுவலகத்திலும், நான் வீட்டிலுமாக முடங்கி கிடக்கிறோம். எல்லாம் வெறுத்துவிட்டது, அர்த்தமற்றதாகிவிட்டது." அவள் மேலும் மேலும் தன் மன கசப்பைக் கொட்டியிருப்பாள். அவள் கணவன் மென்மையாகத் தடுத்துவிட்டான். அடக்கமாட்டாமல் தேம்பிக்கொண்டிருந்தவள் இப்போது அமைதியானாள்.<br />
<br />
இது எல்லோருக்கும் நடப்பதுதானே அம்மா, இல்லையா? இது ஏன் எங்களுக்கு நேர்ந்தது என்று கேட்கும்போது, அது மற்றவர்களுக்குத்தானே நேரவேண்டும் எனக்கில்லையே என்று நினைக்கவில்லைதானே. மற்றவர்களும் உன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறார்களே.<br />
<br />
"ஆனால் நாங்கள் என்ன தவறு செய்தோம் இந்த தண்டனை கிடைக்க? நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என் மகன் ஏன் சாகவேண்டும்? அவனுக்காக என் உயிரையும் தருவேனே."<br />
<br />
எந்த விளக்கமோ, எந்த சூதுமிக்க வாதங்களோ, அறிவுபூர்வமான பக்தியோ இந்த பிய்த்தெடுக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?<br />
<br />
"நான் நிம்மதி தேடுவது இயல்புதானே, ஆனால் வெறும் வார்த்தைகள் மூலமோ நாளை பற்றிய நம்பிக்கைகள் மூலமோ அல்ல. அதனாலேயே எனக்கு நிம்மதி கிடைக்கமாட்டேன் என்கிறது. என் கணவர் மறுபிறப்பை பற்றி சொல்லி சமாதானப்படுத்த முயன்றார், முடியவில்லை. அவருக்கும் <br />
துக்கம்தானே. என்னதான் மறுபிறவி மீது நம்பிக்கை இருந்தாலும், துக்கம் தீரவில்லையே. நாங்கள் இருவருமே துயரத்தில் சிக்கித்தவிக்கிறோம். ஏதோ ஒரு பயங்கர கனவு போல இருக்கிறது." மறுபடியும் அவள் கணவன் இடைமறித்து அசுவாசப்படுத்துகிறான்.<br />
<br />
"நான் இனி அமைதியாக யோசித்துப் பேசுகிறேன், மன்னியுங்கள்."<br />
<br />
"ஐயா, நாங்கள் வாழ்வு என்றால் என்ன, சாவென்றால் என்ன, எங்கள் துக்கம்தான் என்ன என்று புரியாமல் தவிக்கிறோம்," என்றான் கணவன். "இந்த சம்பவத்துக்குப் பின், நான் திடீரென முதிர்ச்சி அடைந்தது போல உணர்கிறேன், இப்போது என்னிடம் தீவிரமான கேள்விகள் உள்ளன. முன்பு வாழ்க்கை என்பது விளையாட்டைப் போல, எப்போதும் சிரிப்பாக கழிந்தது; முன்பு மகிழ்ச்சியைக் கொடுத்த விடயங்கள் இப்போது மூடத்தனமாகவும், சில்லரைத்தனமாகவும் தெரிகிறது. பெரும் சூறாவழி வீசி மரங்கள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு உணவில் மண் விழுந்தது போல் <br />
இருக்கிறது. எல்லாமே மாறிப் போய்விட்டது. திடீரென்று நான் மிகவும் சோகமாக உணர்கிறேன், இதெல்லாம் ஏன் என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் எங்கள் மகன் இறந்து போனதிலிருந்து, நிரைய மத நூல்களையும் தத்துவங்களையும் படிக்க ஆரம்பித்தேன், என் வாழ்க்கையில் இதற்கு முன் இவற்றை இவ்வளவு படித்ததில்லை; வலியில் துவழும்போது வெற்று வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பக்தி எப்படி மெல்லக்கொல்லும் விசமாக மாறுகிறது என்று புரிகிறது. பக்தி புத்தியை மழுங்கச் செய்கிறது, கூடவே வலியையும் மட்டுப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையும் இல்லை என்றால் மனம் ஆறாத புண்ணாக வேதனை தருகிறதே. நேற்று மாலை உங்கள் சொற்பொழிவைக் கேட்க வந்தோம். நீங்கள் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை, அதுவும் சரிதான்; ஆனாலும் எங்கள் காயம் ஆற வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு உதவுவீர்களா?"<br />
<br />
"எங்களுக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது," ஆடவரில் ஒருவர் சொன்னார், "வார்த்தைகளாலும், ஆறுதல் மொழிகளாலும் அதைத் தீர்க்க இயலாது. நாங்கள் இங்கே வந்தது, மேலும் சில நம்பிக்கைகளை சேர்த்துக் கொள்ள அல்ல, நாங்கள் துக்கப்பட என்ன காரணம் என்று தெரிந்து <br />
கொள்ளவே வந்தோம்."<br />
<br />
காரணம் என்ன என்று தெரிந்துவிட்டால் கட்டம் தீரும் என்று நினைக்கிறீர்களா?<br />
<br />
"உள்ளூர இருக்கும் வலியின் காரணம் தெரிந்ததும், அதைத் தடுக்க முடியும். ஒன்று உடலுக்கு ஆகாதென்று தெரிந்தால் அதை உணவில் சேர்ப்பதில்லையே."<br />
<br />
உள்ளத்தில் ஏற்பட்ட ரணத்தை துடைத்தெரிவது அவ்வளவு எளிது என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் பொருமையாகவும் கவனமாகவும் பேசலாமே. இப்போது பிரச்சனை என்ன?<br />
<br />
"என் பிரச்சனை," மனைவி ஆரம்பித்தாள் "வேறொன்றுமில்லை. என்னைவிட்டு என் மகன் ஏன் பிரிந்தான்? என்னக் காரணம்?"<br />
<br />
இந்த தருணத்தில் எவ்வளவுதான் ஆறுதலாக இருப்பினும் எந்த விளக்கமும் நிம்மதி தருமா? நீங்கள்தானே இதற்கு விடை தேடிக் கொள்ள வேண்டும்?<br />
<br />
"நான் எப்படி தேடுவது?" என்று கேட்டாள்.<br />
<br />
"எனக்கும் அதுஒரு பிரச்சனைதான்," ஆடவரில் மற்றொருவர் சொன்னார். "நானே குழம்பிப்போய் இருக்கும்போது எனக்கு எது சரி என்று எப்படித்தெரியும்?" "நாங்கள் செய்த பாவம்தான், எங்கள் அன்பு மகனை இழக்கக் காரணமா?" கணவன் கேட்டான்.<br />
<br />
"எங்கள் மகன் எங்களை விட்டுப் பிரியக் காரணம் என்ன என்று தெரிந்துகொண்டால் ஒருவேளை என் மகன் இறந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியலாம்." மனைவி சேர்ந்துகொண்டாள்.<br />
<br />
நிம்மதி என்பது வேறு; உண்மை வேறு; இரண்டும் ஒன்றிலிருந்துஒன்று விலகிப்போகின்றன. நீங்கள் நிம்மதியைத் தேடினால், ஒரு விளக்கமோ, மருந்தோ அல்லது நம்பிக்கையோ அதைத் தரக்கூடும்; ஆனால் அது தற்காலிகமானதே, இன்றோ நாளையோ மீண்டும் முதலில் இருந்து நீங்கள் <br />
தேடவேண்டும். நிம்மதி என்று ஒன்று உண்டா? நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டியது இந்த நிதரிசனமாக இருக்கலாம்: நிம்மதியை, பாதுகாப்பை நாடும் மனது கட்டாயம் துக்கத்தில்தான் உளல வேண்டும். மனதுக்குப் பிடித்த ஒரு விளக்கம், ஆறுதல் தரும் நம்பிக்கை, உங்களை நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்த்தலாம்; உங்களுக்கு அதுதான் தேவையா? அது உங்கள் துயரத்தைப் போக்குமா? துக்கத்தை உறங்கச்செய்வதால் களைய முடியுமா?<br />
<br />
"நான் என்னுடைய பழைய மகிழ்ச்சியான நாட்களுக்கு செல்லவேண்டும் என்று விரும்புகிறேன் போலும் - மீண்டும் அந்த மகிழ்வை அந்த இன்பத்தை அனுபவிக்க. அது முடியாததாகையால், நான் துக்கத்தில் நைந்து போகிறேன் அதனால் நிம்மதியை நாடுகிறேன்."<br />
<br />
உங்கள் துயரத்தின் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கும் விசயத்தை எதிர்கொள்ள மனமில்லாமல், அதிலிருந்து தப்பிச்செல்லப் பார்க்கிறேன் என்கிறீர்களா?<br />
<br />
"நான் ஏன் நிம்மதி பெறக்கூடாது?"<br />
<br />
உங்களால் நிரந்தரமான தீர்வு காண இயலுமா? அப்படி ஒன்று இல்லாமல் இருக்ககூடும். நாம் நிம்மதியை நாடும் போது, மனதிற்கு எந்தத் தொல்லையும் இல்லாத நிலையை வேண்டுகிறோம். அப்படி ஒரு நிலை உள்ளதா? பல வகைகளில் அப்படி ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டாலும், விரைவிலேயே வாழ்க்கை அதில் குறுக்கிடுகிறதே. அந்த குறுக்கீடுதான் இந்த துக்கம் என்ற அதிர்ச்சி.<br />
<br />
"நீங்கள் சுட்டிக்காட்டுவது போலத்தான் என் நிலைமை இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும்?", வற்புறுத்திக் கேட்டாள்.<br />
<br />
இதில் செய்யவேண்டியது என்று எதுவும் இல்லை. ஆறுதலும் பாதுகாப்பும் நாடும் மனம் துன்பத்திற்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும். இந்த தெளிவு பெறுவதுதான் செய்யவேண்டிய செயல். மனிதன் தான் சிறைபட்டுள்ளதை உணர்ந்துவிட்டால், என்ன செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதில்லை, செயல்களோ, செய்யாமையோ அப்போது தாமே தொடர்கின்றன. உணர்ந்து கொள்வதிலேயே செயலும் அடங்குகிறது.<br />
<br />
"ஐயா, ஆனால் எங்கள் காயங்கள் உண்மைதானே அதை குணப்படுத்த முடியாதா? அதற்கு சிகிச்சை முறை இல்லையா, விடிவே இல்லை என்று வெறுத்துப்போய்க் கிடப்பதுதான் முடிவா?"<br />
<br />
மனம் தான் விரும்பும் எந்த தோற்றத்தையும் எடுத்துக்கொள்கிறது. அதன் போக்கை முழுமையாக அறிந்து கொள்வது என்பது வேறு விடயம். நீங்கள் வேண்டுவது என்ன?<br />
<br />
"புத்தி உள்ள யாரும் வெறுப்பை வளர்த்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். கதியே இல்லை என்கிற தத்துவமார்க்கம் இருக்கிறதுதான், அந்த வழியில் எனக்கு நாட்டமில்லை. ஆனால் நாங்கள் செய்த பாவம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."<br />
<br />
நீங்கள் இருவரும்கூட இதைப்பற்றி பேச விரும்புகிறீர்களா?<br />
<br />
"நிச்சயமாக ஐயா. எங்களுக்கும் முன் வினைகளை ஒட்டிய விசாரணைகள் உள்ளன. நீங்கள் எங்கள் கேள்விகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உதவியாக இருக்கும்."<br />
<br />
கர்மா என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?<br />
<br />
அதன் பொருள் ’செய்’ என்பதாகும், கணவன் பதிலிருத்தான், மற்றவர்களும் ஆமோதித்தனர். "கர்மா என்பது, பொதுவாக - நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நினைக்கிறேன், காரணியின் செயல்பாடு. நாளை என்பது நேற்றைய செய்கைகளால் நிர்ணயிக்கப்படுகிறது; விதைத்ததை அறுவடை செய்கிறோம். நான் செய்த சில காரியங்களுக்கு விலை கொடுத்தாகவேண்டும் அல்லது பலன் பெறவேண்டும். என் மகன் சிறு அகவையில் இறந்தான் என்றால், அதற்கு முன் ஜன்மத்தில் ஏதேனும் காரணங்கள் இருக்கும். இந்த பொதுவான வரையரைக்கு மேற்பட்டு பலவித புரிதல்கள் உள்ளன."<br />
<br />
எல்லா பிறப்பும் அவற்றின் இருப்பும் காரண காரியத் தொடர்களுக்கு உட்பட்டவை இல்லையா?<br />
<br />
"அதுவே பட்டவர்த்தமாக தோன்றுகிறது," இருவரில் ஒருவர் சொன்னார். "நான் இந்த உலகில் இருப்பது என் தாய், தந்தை மற்றும் முன்வினைகளால். எண்ணற்ற முன் ஜன்ம பலன்களின் மொத்தம்தான் நான். எண்ணமும் செயலும் பல காரணிகளால் முடிவு செய்யப்படுகின்றன."<br />
<br />
காரியம் காரணத்திலிருந்து தனித்திருக்கிறதா? அவற்றுக்கிடையே இடைவெளி உள்ளதா, சிறிதோ பெரிதோ, கால இடைவெளி உண்டா? காரணமோ காரியமோ மாற்றமற்றதா? காரண காரியம் எப்போதும் ஒரே மாதிரி செயல்பட்டால், நாளை என்பது முன்பே நிறுவப்பட்டதாகும்; அது அப்படியானால், மனிதருக்கு விடுதலை என்பதே கிடையாது, எப்போதும் வரையறுக்கப்பட்டக் கோட்டில் அகப்பட்டு கிடக்க வேண்டியதுதான். ஆனால் அது அப்படி இல்லையே, அன்றாட நிகழ்வுகளில் பார்க்கிறோமே, அங்கே சுற்றுசூழல் தொடர்ந்து செயல்பாட்டில் மாற்றம் நிகழ்த்தியபடி உள்ளனவே. உடனடியாகவோ அல்லது மெதுவாகவோ எப்போதும் மாற்றம் நிகழ்ந்தபடி உள்ளது.<br />
<br />
"ஆம் ஐயா, அப்படித்தான் இருக்கிறது; இன்ன செயலுக்கு இன்ன பலன் என்ற புத்திமதியோடு வளர்க்கப்பட்ட எனக்கு, நமக்கு எல்லாமே விதிப்படி நடக்க வேண்டியதில்லை என்று அறியும்போது பெரிய சுமை குறைந்த மாதிரி இருக்கிறது."<br />
<br />
மனம் புத்திமதியால் பீடிக்கப்பட்டு கிடக்க வேண்டியதில்லை. ஒரு காரணியின் காரியம் அந்த காரணியின் போக்கில் போவதில்லை, அது முற்றிலுமாக அழிக்கப்படலாம். அழிவில்லாத நரகம் என்று ஒன்று கிடையாது. காரண காரியங்கள் மாற்றமற்றதோ, எப்போதும் ஒரேமாதிரி செயல்பாடோ கொண்டதல்ல; காரியமாக இருக்கும் ஒன்று மற்றொரு காரியத்திற்கு காரணியாகிறது. இன்று என்பது நேற்றிலிருந்து மாறுபட்டது, நாளை இன்றிலிருந்து. அது உண்மைதானே? எனவே காரணியும் காரியமும் வெவ்வேறன்று, அவை ஒருமித்த செயலாகும். தவறான வழி சரியான முடிவிற்கு உதவாது, ஏனெனில் வழிதான் முடிவுமாகும்; ஒன்று மற்றொன்றை உள்ளடக்கியுள்ளது. விதை முழு மரத்தையும் கொண்டிருக்கிறது. ஒருவர் இதை சரியாக உணர்ந்துகொண்டால், எண்ணமே வாழ்வுமாகும், அவர்களிடம் முதலில் எண்ணம் அதை பின்தொடர்ந்து செயல்கள் எனறு கிடையாது, அப்படி இருந்தால் இரண்டையும் எப்படி இணைப்பது என்ற தவிர்க்கமுடியாத கேள்வி எழும். காரணியும் காரியமும் பிரிக்கமுடியாதவை என்று முழுமையாக உணர்ந்தால் செயல் செய்கிற, சதாகாலமும் எந்த முறையிலோ எதோ ஒன்றாக உருவெடுக்கும், அந்த "தான்" மறைகிறது.<br />
<br />
"நீங்கள் முன்வினைக்கு புது அர்த்தம் கற்பிக்கிறீர்களா?", என்றான் கணவன்.<br />
<br />
ஒன்று அது உண்மையாக இருக்கவேண்டும் அல்லது பொய்யாக இருக்கவேண்டும். எது உண்மையோ அதற்கு வியாக்கியானங்கள் தேவை இல்லை, வியாக்கியானமே உண்மையாகிவிடாது. விளக்கம் கொடுப்பவரே கேடுவிளைவிக்கிறார், ஏனெனில் அவருடைய விளக்கம் அவருடைய தனிக் கருத்து <br />
மட்டுமே, தனிக்கருத்து உண்மையாகாது.<br />
<br />
"சாத்திரங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் தலைவிதிகளை சேர்த்துக்கொண்டு பிறக்கிறோம் அவற்றை அனுபவித்து ஆகவேண்டும் என்கின்றன.", கணவன் தொடங்கினான். "ஒருவர் இந்த விதிப் பலன்களை, ஒரு பிறவியிலோ, பல பிறவிகளிலோ, எப்படி அனுபவிப்பது என்பது மட்டும்தான் <br />
அவரவர் கையில் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது சரியா?"<br />
<br />
சாத்திரங்கள் சொல்வது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?<br />
<br />
"என்னால் இதை சீர்தூக்கிப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை."<br />
<br />
ஒன்றாக சேர்ந்தே ஆராய்வோம். ஒருவர் இந்தப் பிறவியில் சில வரைமுறைகளுக்கு (தலைவிதி நம்பிக்கை) இடையில், பிறக்கிறார்; ஒவ்வொரு குழந்தையும் சில அமைப்புக்குள் சிந்திக்கும்படி சூழ்நிலை தூண்டுகிறது, அவனுடைய எதிர்காலத்தின் போக்கு அந்த அமைப்புகளால் <br />
தீர்மானிக்கப்படுகிறது. அவன் ஒன்று அமைப்பின் கட்டுதிட்டங்களுக்குள், சில ஏற்றத்தாழ்வுவோடு அடங்கி நடக்கிறான் அல்லது எல்லாவற்றையும் உடைத்து வெளியேறுகிறான். பிந்தையதில், அப்படித் தடைகளை உடைக்க முயற்சிக்கும் மனமும் வரைமுறைகளால் (தலைவிதி நம்பிக்கை) <br />
பீடிக்கப்பட்டதுதான்; எனவே ஒரு அமைப்பை உடைத்த மனம் மற்றொன்றை உருவாக்கி அதில் சிக்கிக்கொள்கிறது.<br />
<br />
"அப்படியானால், எப்படி மனம் விடுதலையாகும்? எனக்குத் தெளிவாக தெரிகிறது, மனதின் ஒருபகுதி அந்த அமைப்பை விட்டு வெளியேற விரும்புகிறது, மற்றொரு பகுதி இன்னும் சிக்கிக்கிடக்கிறது. ஆனால் இரண்டும் இன்னும் அதே கட்டமைப்புக்குள்தான் இருக்கின்றன. முந்தையது தான் பிந்தையதிலிருந்து வேறுபட்டதாக நினைத்தாலும், இரண்டின் குணமும் ஒன்றுதான் இன்னமும் முழுதாக விடுதலை ஆகவில்லை. அப்படியானால் விடுதலை என்பது என்ன?<br />
<br />
"பெரும்பாலோர், " ஒரு இளைஞன் தொடர்கிறான், "ஆத்மாவானது பக்தி, தொண்டு செய்தல் மற்றும் உயர்சக்தியின் மேல் இடையறாத சிந்தனையால் இந்த வரைமுறைகளை நீக்கமுடியும் என்று நிறுவுகிறார்கள்."<br />
<br />
ஆனால் பக்தி கொண்ட மனம், தொண்டு செய்யும் மனம் ஆகியவையும் வரைமுறைகளுக்கு உட்பட்டதுதானே; மேலும் அவன் மனதை ஒருநிலைப்படுத்தும் அந்த உயர்சக்தியும் வரைமுறை கொடுத்த உருவம்தானே, இல்லையா?<br />
<br />
"ஆமாம்." கணவன் ஆர்வத்தோடு சொன்னான். "எங்கள் கடவுள், எங்கள் மதக் கருத்துக்கள், எங்கள் குறிக்கோள்கள் என எல்லாமே வரைமுறையின் அமைப்புக்குள் இருப்பவைதான். நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு, பட்டவர்த்தமாக அப்படித்தான் என்று தெரிகிறது. அப்படியானால் மனிதனுக்கு விடிவே இல்லையே."<br />
<br />
ஒரு முடிபை எடுத்துக்கொண்டு, அந்த முடிபிலிருந்து எண்ணத்தலைப்படுவது புரிதலையும் தேடலையும் தடுத்துவிடுகிறது.<br />
<br />
முழுமனமும் தான் ஒரு அமைப்புக்குள் கட்டுண்டு கிடப்பதை உணர்ந்துகொண்டால் என்ன நடக்கிறது?<br />
<br />
"எனக்கு நீங்கள் கேட்பது அவ்வளவாகப் புரியவில்லை, ஐயா."<br />
<br />
நீங்கள் உங்கள் முழுமனதும், வரைமுறைகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று உணருகிறீர்களா, உள்மனம் என்று சொல்லப்படும் ஆத்மாவும் சேர்ந்து? <br />
<br />
நீங்கள் உணர்கிறீர்களா, பட்டவர்த்தமாகத் தெரிகிறதா அல்லது வெறுமே சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா? உள்ளபடி என்ன நடக்கிறது?<br />
<br />
"என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நான் இதைப்பற்றி முடிவுவரை சிந்தித்தது இல்லை."<br />
<br />
மனம் தான் வரைமுறைகளுக்குள் சிறைபட்டிருப்பதை முழுமையாக உணர்ந்தால் - வெரும் நிம்மதியை மட்டும் தேடிக்கொண்டிருக்கும் வரையிலும், சோம்பலில் எளிய பாதையை எடுக்கும்போதும் அதனால் முடியாது - அதனுடைய எல்லா ஓட்டங்களும் முடிவுக்கு வருகிறது; எந்த ஆசையும் இன்றி, எந்த கட்டாயமும் இன்றி, எந்தக் குறிக்கோளும் இன்றி அது நிலைகுத்தி நிற்கிறது. அப்பொழுதுதான் விடிவு பிறக்கிறது.<br />
<br />
"ஆனால் நாம் இந்த உலகில் வாழ்ந்தாக வேண்டுமே, பொருளீட்டுவது முதல் மனதின் நுட்பமான ஆய்வுகள் வரை நாம் என்ன செய்தாலும் அதில் சிலக் குறிக்கோள்கள் இருக்கின்றன. குறிக்கோள் இல்லாமல் ஒரு செயல் இருக்கமுடியுமா?"<br />
<br />
நீங்கள் இருக்கிறது என்று கருதவில்லையா? அன்பு செலுத்துவதில் குறிக்கோள் எதுவும் இல்லை, மற்ற எல்லாவற்றிலும் உண்டு.<br />
<br />
<h3>மூலம்</h3><a href="http://www.jiddu-krishnamurti.net/en/commentaries-on-living-series-3/1960-00-00-jiddu-krishnamurti-commentaries-on-living-series-3-13-why-should-it-happen-to-us">COMMENTARIES ON LIVING SERIES III CHAPTER 13 "WHY SHOULD IT HAPPEN TO US?"</a>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-29145729.post-16417587739279051612010-04-01T15:07:00.006-04:002010-04-01T15:51:06.351-04:00ஐந்து விரல்கள் - ஓஷோ<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY_OyM3c_uGPFAfNevwfcQ03MApvj8SBlZBkgYhekFl4YUIkbzwTnsVUdqV89BMQExyzxIQyFVQapCNJsroMiMvrPXVgK1Km-KmT2q_uhoeGOd97vm0myLxywTO7FV8UrQFDGc/s1600/Five_Fingers.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY_OyM3c_uGPFAfNevwfcQ03MApvj8SBlZBkgYhekFl4YUIkbzwTnsVUdqV89BMQExyzxIQyFVQapCNJsroMiMvrPXVgK1Km-KmT2q_uhoeGOd97vm0myLxywTO7FV8UrQFDGc/s320/Five_Fingers.jpg" width="320" /></a></div><br />
ஓஷோவின் சொற்பொழிவுகளைப் போலவே, ஆசிரமத்தில் இருந்து வெளியாகும் இசைத் தொகுதிகளும் வெகு இனிமையானவை. நான் பல ஆண்டுகள் முன்பு வாங்கிய, "ஐந்து விரல்கள்" என்ற இசை ஒலிநாடாவில் முன்னுரையாக அவர் இசையைப் பற்றி சொன்ன கருத்தையும் பதிந்திருந்தார்கள். தளர்ந்துபோன குரலில் பேசி இருந்தாலும் அந்த வார்த்தைகள் என்னுள்ளே இப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கின்றன.<br />
<hr/>அதன் தமிழாக்கம் இங்கே:<br />
<br />
நீங்கள் என் கையில் ஐந்து விரல்களைப் பார்க்கிறீர்கள். சிலர் விரல்களிடையே ஐந்து வெளிகளைக் காணக்கூடும். பொதுவாக நீங்கள் இந்த வெளிகளை உணர்வதில்லை. உங்களுக்கு விரல்கள்தான் தெரிகின்றன. ஆனால் இந்த வெளியோ நிரந்தரமானது. விரல்கள் தோன்றும் மறையும், வெளி எப்போதும் இருக்கிறது. இசையின் ஓசைகளுக்கு இடையே அமைதி வெளிகள் உள்ளன. ஆழ்ந்த இசையின் ஆதாரம் ஒலிகளன்று, அமைதி வெளிகளேயாகும். ஒலி எழும் மறையும். அமைதி நிலைத்திருக்கிறது. வேறு எதையும் விட இசையால் அந்த வெளிகளை அழகாகப் புலப்படுத்த முடியும்; எனவேதான் மௌனத்திற்கு அடுத்ததாக இசையை சொல்கிறேன். - <b>ஓஷோ</b><br />
<br />
<br />
You see my five fingers - but somebody can see the five gaps between my fingers. But ordinarily you will not see the gaps. You will see five fingers. But the gaps are more real. Fingers come and go, gaps will remain. Between sounds of music, there are gaps of silence. The authentic music consists not of sound, but of the gaps. Sounds come and go. Those gaps remain. And music can make you aware of those gaps more beautifully than anything else; hence I have to say that music comes next to silence. - <b>Osho</b><br />
<br />
<br />
இசையின் சிறு பகுதிகளை இங்கே கேட்கலாம்:<br />
http://www.legalsounds.com/download-mp3/music-from-the-world-of-osho/five-fingers/album_36270குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-29145729.post-62979337145739314832010-03-28T22:20:00.003-04:002010-04-09T23:03:05.386-04:00ஆஸ்டரிக்ஸ் Asterix - கேலி சித்திரங்களில் அசகாய சூரன்சிறுவயதில் பெட்டிக்கடைகளில் முத்துக் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் என்று படக்கதைப் புத்தகங்கள் வாடகைக்கு கிடைக்கும். விடுறை காலங்களில் அவற்றைப் படிப்பது முக்கிய பொழுது போக்காக இருந்தது. இரும்புக்கை மாயாவி, வேதாளர், மந்திரவாதி மான்ட்ரேக், லாரன்ஸ்-டேவிட் என்று <br />
நாசகார சக்திகளை அழிக்கும் நாயகர்கள் அப்போது மிகவும் பிரசித்தமானவர்கள். காட்சிகளுக்கு தகுந்த உணர்ச்சி பொங்கும் படங்கள், பலவிதமான கோணங்களில் தத்ரூபமாக இருக்கும். பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் படிப்பதற்கு இந்தப் புத்தகங்கள் தூண்டுகோலாக இருந்தன.<br />
<br />
வேலைக்குப் போய் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க கற்றுக் கொண்ட பின்தான் உலகப் பிரசித்தி பெற்ற Asterix படக்கதைகள் எனக்கு அறிமுகமாயிற்று. அதன் கதைக்களம், பழகிப்போன மோசக்காரர்களின் குற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கேலி சித்திர வடிவில் கண்ணைக் கவரும் வண்ணங்களில், விசித்திரமான பாத்திரங்கள் கொண்ட முழுநீள நகைச்சுவைக் கதைக்களம். ஒரு புத்தகத்தை படித்ததுமே எல்லாவற்றையும் படிக்கத் தூண்டியது. ஒரே படத்தை சித்திரம்போல மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBFp1wgiGxaySjCX-o5FcApXWQKejia1P79rWH1DsESzUMq4RuGlDCOEGrzubwsCmXRKM7RUcmAn8GOUTEmNMFiza2DKdnh_7nN5GLdE8BAy4vIyfYUC1BiILbL7M6zFc8qx9x/s1600/Asterix.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBFp1wgiGxaySjCX-o5FcApXWQKejia1P79rWH1DsESzUMq4RuGlDCOEGrzubwsCmXRKM7RUcmAn8GOUTEmNMFiza2DKdnh_7nN5GLdE8BAy4vIyfYUC1BiILbL7M6zFc8qx9x/s320/Asterix.jpg" /></a></div><br />
பிரஞ்ச் மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகின்றன. ஆனால் மொழிபெயர்க்கப் பட்ட எழுத்து என்று தெரிவதில்லை. உதாரணமாக சில இடங்களில் ஆங்கில மொழியின் உச்சரிப்பை/எழுத்துபிழைகளை பகடி செய்திருப்பார்கள். மூலக்கதையில் பிரஞ்சு மொழியை அதே போல கலாய்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் பாத்திரங்களின் பெயர்கள் பலவும் காரணப் பெயர்கள் ஆகும். அவற்றையும் ஆங்கிலத்திற்கென்று மாற்றி இருக்கிறார்கள்.<br />
<br />
தளம் இதுதான்:<br />
கடலோர கிராமத்தில் வசிக்கும் குடியானவர்கள் (Gauls), ஜூலியஸ் சீசரின் ரோமன் அரசுக்கு பெரும் சரவலாக இருக்கிறார்கள். உலகத்தையே வென்றவர்களால் அந்த குட்டி கிராமத்தை கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால் அந்தக் குடியானவர்களுக்கு அசாத்தியமான வலிமை இருந்தது. எதற்கும் பயப்பட மாட்டார்கள், வானம் இடிந்து விழப் போவதைத் தவிற.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr1gvXmbCDMC1UB8dfTim0P27UPm7NNZ_ZtO8g_caIjlqVRZzPiMCb6OL950iCZC1bu09uLHSnhSziHAerIwNwDNGGp0ke8AwCMt1OqC8SlGvvvnxBhkwDlrNQzqAD9BkH04iD/s1600/panoramix.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr1gvXmbCDMC1UB8dfTim0P27UPm7NNZ_ZtO8g_caIjlqVRZzPiMCb6OL950iCZC1bu09uLHSnhSziHAerIwNwDNGGp0ke8AwCMt1OqC8SlGvvvnxBhkwDlrNQzqAD9BkH04iD/s320/panoramix.jpg" /></a></div><br />
அவர்களின் வலிமைக்குக் காரணம் கிராமத்து வைத்தியருக்கு (Getafix) மட்டுமே தெரிந்த மாய பாசாணம் (magic potion). இரண்டு சொட்டு சாப்பிட்டால் போதும் யானை பலம் கிடைத்துவிடும். அப்போது ரோமானிய வீரர்கள் மாட்டினால் அவ்வளவுதான் தீர்ந்தார்கள். பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நாயகன் ஆஸ்டரிக்ஸ் புத்திசாலி, அவன் வழிகாட்டுதலோடு எதிரிகளை எப்போதும் எட்டவே வைத்திருக்கிறார்கள். அவனுடைய இணை பிரியாத நண்பன் ஓபிலிக்ஸ் (Obelix). அவன் குழந்தையாக இருக்கும்போது மருந்து குண்டாவில் விழுந்துவிட்டதால் எப்போதுமே பலசாலி, மருந்தே வேண்டியதில்லை. அவனுடைய செல்ல நாய் டாக்மெடிக்ஸ் (Dogmatix - dogma-tix என்று பிரித்துப் பொருள் கொள்ளவும்). அவர்களுக்குப் பிடித்த உணவு காட்டுப்பன்றி. அவைகளை வேட்டையாடுவது, கை துறுதுறுத்தால் ரோமானிய வீரர்களைப் பந்தாடுவது என்று தன்நிறைவாக வாழ்கிறார்கள்.<br />
<br />
சீசருக்கோ இத்துனூண்டு கிராமத்தை பிடிக்க முடியவில்லையே என்ற தன்மானப் பிரச்சனை. கதைக்குக் கதை சூழ்ச்சியாக, அதிரடியாக என்று பல வகைகளில் கிராமத்தவர்களோடு மோதிப் பார்க்கிறான். அவற்றை ஆஸ்டரிக்ஸ் தலைமையில் குடியானவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் பெரும்பாலான கதைகள். சில புத்தகங்களில் ஆஸ்டரிக்ஸ்-ம் ஓபிலிக்ஸ்-ம் தூர தேசங்களுக்கு சாகசப் பயணம் போய் வருகிறார்கள். எல்லாக் கதைகளிலும் கடைசியில் கிராமத்தில் குடியும் கும்மாளமுமாக பெரிய விருந்து நடக்கும். கூடவே பாணன் பாடிவிடாமல் இருக்க கட்டி வைக்கப்பட்டிருப்பான். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க சுபம்.<br />
<h3>கிராமத்து மாந்தர்கள் சிலர்:</h3><br />
மீன் வியாபாரி: அன்ஹைஜீனிக்ஸ் (Unhygenix), அவன் மனைவி பாக்டீரியா<br />
<table><tbody>
<tr> <td>கொல்லன்: ‘புல்லிஆட்டோமேடிக்ஸ் (Fulliautomatix)</td> <td><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTMiQ1Zl9o8NNnFxBr4NNY0Bz4whoLZ2z5bsqa7KyYx-nYfY5akrELzxN5ekFaxuPQNt7A5uLqUbueWo1yx7WXY_4jx1L14QHIGoQD4d80fTsTnC2Tdy3FO5wS-Ow0gjwWQrkn/s1600/fulliautomatix.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTMiQ1Zl9o8NNnFxBr4NNY0Bz4whoLZ2z5bsqa7KyYx-nYfY5akrELzxN5ekFaxuPQNt7A5uLqUbueWo1yx7WXY_4jx1L14QHIGoQD4d80fTsTnC2Tdy3FO5wS-Ow0gjwWQrkn/s320/fulliautomatix.gif" /></a></div></td> </tr>
<tr><td><br />
தாத்தா: 'கெரியாட்ரிக்ஸ்(Geriatrix)</td> <td><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyHfXM4wNlKFHZS_ZoywtU-d50szmcj0cemDU77iR35KbboXJnNLeszzdalPa6LzUOIIsqDu7x_fc22PlV0fNOoztYxPx199UmFIc2CP5zMrJIGM2HmmCqO5Hf2RrWuoQ1o74r/s1600/geriatrix.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyHfXM4wNlKFHZS_ZoywtU-d50szmcj0cemDU77iR35KbboXJnNLeszzdalPa6LzUOIIsqDu7x_fc22PlV0fNOoztYxPx199UmFIc2CP5zMrJIGM2HmmCqO5Hf2RrWuoQ1o74r/s320/geriatrix.gif" /></a></div></td> </tr>
<tr> <td><br />
பாணன்: Cacofonix</td> <td><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZfwxIVWCfWPfXPIMSgZN5bIPInHi8258maM2PyrfyIE-7kLmiRHmNBiGSYon40Tk_Pl5NEDp-D0N_3SKwFEf1Eb7VQjJGSwoz0cVwAbBwQBwv3CiiMKcy1Tbn5UAybl_M-BN_/s1600/cocofonix.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZfwxIVWCfWPfXPIMSgZN5bIPInHi8258maM2PyrfyIE-7kLmiRHmNBiGSYon40Tk_Pl5NEDp-D0N_3SKwFEf1Eb7VQjJGSwoz0cVwAbBwQBwv3CiiMKcy1Tbn5UAybl_M-BN_/s320/cocofonix.gif" /></a></div></td> </tr>
</tbody></table><br />
விலை அதிகம்தான். 1990 வாக்கிலேயே ஒரு புத்தகம் 80 ரூபாய் ஆயிற்று. ஆனால் தனியார் நூலகங்களில் கண்டிப்பாக கிடைக்கும். படித்து மகிழுங்கள்.<br />
<br />
சில புத்தகங்களின் நிழற்படத் தொகுப்புகள் இங்கே தரவிறக்கிக்கொள்ள கிடைக்கின்றன http://codingfreak.blogspot.com/search/label/Asterixகுலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-29145729.post-82866760129680368882010-03-21T02:59:00.007-04:002010-03-21T10:03:39.565-04:00ஒலி நிரலியில் சுருதிப்பெட்டிஎன் மகளுடைய பள்ளி அறிவியல் முகாமில் ஒலியை அடிப்படையாக வைத்து ஏதாவது செய்யலாம் என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறேன். அதற்கு சி-சௌன்’ட் (CSound) என்ற ஒலி நிரல் மொழியை பயன்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் பட்டயப்படிப்பு படித்த காலத்தில் மின்னணுவியல் கொசு விரட்டி செய்துபார்த்து இருக்கிறேன். மிகு அதிர்வு ஒலி உண்டாக்கினால் கொசுக்கள் அண்டாது என்ற நம்பிக்கையில் இந்த விரட்டிகள் வடிவமைக்கப் படுகின்றன. அது சரியா தவறா? எத்தனை மிகு அதிர்வலை வரை நமக்கு கேட்கிறது போன்றவற்றை ஆய்வு செய்ய உத்தேசித்திருக்கிறோம்.<br />
<br />
தேவையான விடயங்களை சேகரித்த பொழுது இந்த சுருதிப்பெட்டி கண்ணில் பட்டது. இங்கே உங்கள் பார்வைக்காக.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihFfQppDmSqB31JDsYJF1pSqYwd8M8ol4lFzX-sitw5tjB6cAXAShcdQ3AmwWEJs7cjq9gOxDRwPxZcjSK3cpVBVy-h24Rk7e8-wQrNLyu6OqUZtksLQK5w2jpBKZp3ulVgqZ9/s1600-h/SrutiDrone.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihFfQppDmSqB31JDsYJF1pSqYwd8M8ol4lFzX-sitw5tjB6cAXAShcdQ3AmwWEJs7cjq9gOxDRwPxZcjSK3cpVBVy-h24Rk7e8-wQrNLyu6OqUZtksLQK5w2jpBKZp3ulVgqZ9/s320/SrutiDrone.png" /></a></div>இந்த சுருதிப்பெட்டியை செயல்படுத்த நீங்கள் சி-சௌன்’ட் சொவ்வறையை (http://www.csounds.com/downloads) தரவிறக்கிக் கொள்ள வேண்டும்.<br />
<br />
இந்த நிரலிக்கு கீழ்க்கண்ட கட்டளைகள் (அ. நிரல்) அடங்கிய கோப்பைக் கொடுத்தால் படத்தில் உள்ளதுபோல இடைமுகப்பை உருவாக்கும். முகப்பில் உங்களுக்கு தேவையானபடி எண்களை பொருத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு சுட்டியைக்காண்க: http://mysterybear.net/article/8/drone-instrument-sruti-box. இந்த நிரல் இதே தளத்தில் SrutiDrone.csd.txt என்ற பெயரில் இணைக்கப் பட்டுள்ளது. நிரலின் வடிமைப்பை காண்பிக்க அதை அப்படியே இங்கே கொடுத்துள்ளேன். <br />
<br />
சி-சௌன்’டையும் இந்த நிரலையும் தரவிக்கிக்கொண்ட பின் நிரல் கோப்பின் பெயரை SrutiDrone.csd என்று மாற்றிக்கொள்ளவும். சி-சௌன்’டை நிருவிக் கொண்டபின் முனையத்தில் இருந்து இவ்வாறு இயக்கிக்கொள்ளலாம்:<br />
<pre>c:>csound StrutiDrone.csd</pre><br />
இந்த நிரல் மொழி பார்க்க கடினமாகத் தோன்றினாலும் ஒலி/இசையின் தன்மைகளை அறிந்தவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். பல லட்சம் விலை ஆகும் சிந்த்தசைசரைவிட (synthesizer) அதிக திறம் வாய்ந்தது எனபதையும் அறிந்து கொள்ளலாம். கணினி விளையாட்டுக்கள் திரைப்படங்கள் ஆகியவற்றில் தனித்தன்மையான இசைக் கோர்வைக்கு சி-சௌன்’ட் பாவிக்கப்படுவதாக அறிகிறேன். <br />
<br />
சி-சௌன்’ட் உருவாக்கிய இசைகள் சில:<br />
<a href="http://homepage.mac.com/andykopra/pdm/tutorials/csound/sound_synthesis_with_csound.html">இசை 1</a><br />
<embed autoplay="false" cache="false" controller="true" height="16" src="http://homepage.mac.com/andykopra/pdm/tutorials/csound/horn.aif" width="112"></embed><br />
<br />
<a href="http://www.freaknet.org/~martin/audio/csound/index.en.html">இசை 2</a><br />
<embed autoplay="false" cache="false" controller="true" height="16" src="http://www.freaknet.org/~martin/audio/csound/nuclear.mp3"></embed><br />
<br />
உதாரணமாக சிந்த்தசைசரில் கருநாடக இசையை உருவாக்குவது கடினம். குறிப்பாக கருநாடக இசையின் கமகம் (microtonal?, intonation?) என்னும் ஒரு சுரத்தில் இருந்து அடுத்த சுரத்திற்கு இழைந்து குழைந்து மாறும் வித்தை அதற்கு கைவராது.<br />
<br />
ஆனால் சி-சௌன்’ட்-ஐ வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு கணினியில் கருநாடக இசையை உருவாக்க கொஞ்சம் வேலை செய்தேன். (முன்பு அப்படியெல்லாம் விளையாட நேரம் இருந்தது) எனக்கு இசையில் பயிற்சி இல்லை என்றாலும் காயகா (http://carnatic2000.tripod.com/) என்ற கருநாடக இசை சொவ்வறைப் பற்றிய விளக்கங்களிலிருந்து, அவர்கள் உபயோகிக்கும் ச-ரி-க-ம-ப-த-நி குறியீட்டில் எழுதப்பட்ட இசைக் கோர்வையை சி-சௌன்’ட் மூலம் வீணை இசை வருமாறு செய்தேன். அந்த கணினி பழுதடைந்துவிட்டதால் முக்கியமான சில வேலைகள் அதில் முடங்கிப்போய்விட்டன. கொஞ்சம் நேரம் கிடைத்தால் மீண்டும் அந்த வேலையை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.<br />
<br />
<br />
சி-சௌன்’டில் முதலில் நமக்கு வேண்டிய இசைக்கருவி(களை) உள்ளடக்கிய குழுவை (orchestra) உருவாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அந்த குழுவுக்கு எந்த இசையை வாசிக்க வேண்டுமென்று அலை வரிசை எண்களாகப் பட்டியல் (score) தரவேண்டும். ஆனால் இப்படி எண்களின் பட்டியலாக தருவது சற்று கடினம்தான். அதற்கு பதிலாக, ஆங்கில சுரக் குறியீடுகளைக் கொண்டு இசையை குறித்துக்கொள்ள முடியுமானால் எளிதாக இருக்கும் இல்லையா? "abc" என்ற பெயரில் அத்தகையக் குறியீடு ஏற்கனவே செந்தரப்படுத்த பட்டுள்ளது. இது இசைப் பலகையில் உள்ள கட்டைகளுக்கு வழங்கும் C,D,E,F,G,A,B குறியீடுகளை வைத்தே இசைக் கோர்வையை எழுதிக்கொள்ளும் முறை.<br />
<br />
அதன்படி, பைத்தான் நிரல் மொழி உதவியுடன் "abc" குறியீட்டிலிருந்து அலை எண்களாக மாற்றிக் கொண்டால் இசைக்கோர்வையை எழுதுவது எளிதாகும். மேலும் பல பாடல்கள் "abc" குறியீட்டில் முன்பே எழுதப்பட்டுள்ளன. நாம் விரும்பும் பாடலை விரும்பிய இசைக்கருவிகளில் மீட்கச் செய்து கேட்கலாம். அப்படி ஒரு "abc" பாடல் ஒன்றை (John Dowland's "Can She Excuse My Wrongs") சி-சௌன்’டின் கிடாரில் வாசிக்கப்பட்ட இசை இங்கே<br />
<embed autoplay="false" cache="false" controller="true" height="16"
src="http://kneuro.net/abcsound/csemw.mp3"></embed><br />
<br />
<pre>;-------------------------------------------------------------------------
;
; Drone Instrument/Sruti Box
; by Dave Seidel (dave at mysterybear dot com)
; http://mysterybear.net
;
; Copyright 2005, Dave Seidel. Some rights reserved.
; This work is licensed under a Creative Commons "Attribution" License.
; http://creativecommons.org/licenses/by/2.0/
;
;-------------------------------------------------------------------------
<csoundsynthesizer>
<csoptions>
;-+P ; for CsoundAV realtime
;-o devaudio ; for MyCsound4 & flcsound (csoundgbs) realtime. Adding a -b1000 flag to this line may help performance.
-o dac ; for Csound5
</CsOptions>
<csinstruments>
;-------------------------------------------------------------------------
; globals
;-------------------------------------------------------------------------
sr = 44100
kr = 441
ksmps = 100
nchnls = 1
; basic offset value for Risset effect
giofs init .01
; zak channels
zakinit 16, 16
;-------------------------------------------------------------------------
; waveform tables
;-------------------------------------------------------------------------
giTblSz init 1048576
; pure sine wave
giFn1 ftgen 1, 0, giTblSz, 10, 1
; sawtooth wave � all partials (through 17) at a strength of 1/harmonic#
giFn2 ftgen 2, 0, giTblSz, 10, 1, .5, .3333, .25, .2, .1667, .1428, .125, .111, .1, .0909, .0833, .077, .0714, .0667, .0625, .0588
; first 13 partials, strength = 1/n + 1/(n-1)
giFn3 ftgen 3, 0, giTblSz, 10, 1, 1.5, .8333, .58, .45, .367, .31, .268, .236, .211, .1909, .1742, .1603
; square wave � odd partials (through 19) at a strength of 1/harmonic#
giFn4 ftgen 4, 0, giTblSz, 9, 1,1,0, 3,.3333,0, 5,.2,0, 7,.1428,0, 9,.111,0, 11,.0909,0, 13,.077,0, 15,.0667,0, 17,.0588,0, 19,.0526,0
; odd partials to 19, strength = 1/n, where n is ordinal to the odd set
giFn5 ftgen 5, 0, giTblSz, 9, 1,1,0, 3,.5,0, 5,.3333,0, 7,.25,0, 9,.2,0, 11,.1667,0, 13,.1429,0, 15,.125,0, 17,.1111,0, 19,.1,0
; prime partials to 23, strength = 1/n
giFn6 ftgen 6, 0, giTblSz, 9, 1,1,0, 2,.5,0, 3,.3333,0, 5,.2,0, 7,.143,0, 11,.0909,0, 13,.077,0, 17,.0588,0, 19,.0526,0, 23,.0435,0, 27,.037,0
; primes to 23, strength = 1/n, where n is ordinal to the prime set
giFn7 ftgen 7, 0, giTblSz, 9, 1,1,0, 2,.5,0, 3,.3333,0, 5,.25,0, 7,.20,0, 11,.1667,0, 13,.1429,0, 17,.125,0, 19,.1111,0, 23,.1,0, 27,.0909,0
; partials in the Fibonacci series to 89, strength = 1/n
giFn8 ftgen 8, 0, giTblSz, 9, 1,1,0, 2,.5,0, 3,.3333,0, 5,.2,0, 8,.125,0, 13,.0769,0, 21,.0476,0, 34,.0294,0, 55,.0182,0, 89,.0112,0 144,.0069,0
; fibs to 89, strength = 1/n, where n is ordinal to the fib set
giFn9 ftgen 9, 0, giTblSz, 9, 1,1,0, 2,.5,0, 3,.3333,0, 5,.25,0, 8,.2,0, 13,.1667,0, 21,.1429,0, 34,.125,0, 55,.1111,0, 89,.1,0, 144,.0909,0
;---------------------------------------------------------------------------
; orchestra macros
;---------------------------------------------------------------------------
; base pitch in specified octave above base
#define BOCT(O) #gkroot*(2^($O.))#
; for UI
#define XOFS #50#
#define X(xx) #($XOFS.+($xx.))#
#define YOFS #0#
#define Y(yy) #($YOFS.+($yy.))#
;-------------------------------------------------------------------------
; UI
;-------------------------------------------------------------------------
FLpanel "Drone Instrument/Sruti Box (Dave Seidel, 1/2005)", 530, 420, 100, 100
; per-drone settings, in vertical columns by drone
gkd1,gi1 FLbutton "1", 1, 0, 2, 40, 30, $X.(35), 35, -1
gkd2,gi2 FLbutton "2", 1, 0, 2, 40, 30, $X.(138), 35, -1
gkd3,gi3 FLbutton "3", 1, 0, 2, 40, 30, $X.(241), 35, -1
gkd4,gi4 FLbutton "4", 1, 0, 2, 40, 30, $X.(344), 35, -1
gknu1,i1a FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(6), 75, -1
FLsetVal_i 1, i1a
gknu2,i2a FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(109), 75, -1
FLsetVal_i 3, i2a
gknu3,i3a FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(212), 75, -1
FLsetVal_i 2, i3a
gknu4,i4a FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(315), 75, -1
FLsetVal_i 2, i4a
gkde1,i1b FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(6), 105, -1
FLsetVal_i 1, i1b
gkde2,i2b FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(109), 105, -1
FLsetVal_i 2, i2b
gkde3,i3b FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(212), 105, -1
FLsetVal_i 1, i3b
gkde4,i4b FLcount " ", 1, 1500, 1, 10, 1, 98, 25, $X.(315), 105, -1
FLsetVal_i 1, i4b
gkoc1,i1c FLcount " ", -7, 7, 1, 1, 1, 98, 25, $X.(6), 150, -1
FLsetVal_i 1, i1c
gkoc2,i2c FLcount " ", -7, 7, 1, 1, 1, 98, 25, $X.(109), 150, -1
FLsetVal_i 1, i2c
gkoc3,i3c FLcount " ", -7, 7, 1, 1, 1, 98, 25, $X.(212), 150, -1
FLsetVal_i 1, i3c
gkoc4,i4c FLcount " ", -7, 7, 1, 1, 1, 98, 25, $X.(315), 150, -1
FLsetVal_i 1, i4c
gkx1,gi1a FLbutton " mute", 1, 0, 3, 40, 40, $X.(35), 190, -1
gkx2,gi2b FLbutton " mute", 1, 0, 3, 40, 40, $X.(138), 190, -1
gkx3,gi3c FLbutton " mute", 1, 0, 3, 40, 40, $X.(241), 190, -1
gkx4,gi4d FLbutton " mute", 1, 0, 3, 40, 40, $X.(344), 190, -1
; global settings and controls
gkroot,iroot FLcount "Root (Hz)", 0.00, 440.00, .05, 5, 1,\
124, 30, $X.(145), 235, -1
FLsetVal_i 60.00, iroot
il12 FLbox "Waveforms", 1, 1, 14, 70, 25, $X.(12), 295
gktbl,itbl FLbutBank 1, 9, 1, 300, 25, $X.(90), 295, -1
FLsetVal_i 0, itbl
FLsetText "0=Sine 1,2=Sawtooth 3,4=Square 5,6=Prime 7,8=Fibonacci", itbl
gkdall,giAll FLbutton "Play", 1, 0, 2, 60, 30, $X.(30), 355, -1
gkdoff,giOff FLbutton "Stop", 1, 0, 2, 60, 30, $X.(93), 355, -1
gkOfs,iR FLbutton "Harmonic arpeggio", 1, 0, 3,\
140, 30, $X.(170), 355, -1
FLpanelEnd
FLrun
;---------------------------------------------------------------------------------------
; drone scheduler (thanks to Art Hunkins)
;---------------------------------------------------------------------------------------
instr 3
gkdoff1 trigger gkdoff, .5, 0
schedkwhen gkdoff1, 0, 0, 5, 0, 1
gkdall1 trigger gkdall, .5, 0
schedkwhen gkdall1, 0, 0, 6, 0, 1
DRONE1:
if gkx1 == 1 kgoto DRONE2
kd1 trigger gkd1, .5, 0
schedkwhen kd1, 0, 0, 4.1, 0, -1, 1300, gktbl+1, 2, $BOCT.(gkoc1), gknu1, gkde1, giofs
kd1a trigger gkd1, .5, 1
schedkwhen kd1a, 0, 0, -4.1, 0, 0
DRONE2:
if gkx2 == 1 kgoto DRONE3
kd2 trigger gkd2, .5, 0
schedkwhen kd2, 0, 0, 4.2, 0, -1, 1300, gktbl+1, 3, $BOCT.(gkoc2), gknu2, gkde2, giofs
kd2a trigger gkd2, .5, 1
schedkwhen kd2a, 0, 0, -4.2, 0, 0
DRONE3:
if gkx3 == 1 kgoto DRONE4
kd3 trigger gkd3, .5, 0
schedkwhen kd3, 0, 0, 4.3, 0, -1, 1300, gktbl+1, 4, $BOCT.(gkoc3), gknu3, gkde3, giofs
kd3a trigger gkd3, .5, 1
schedkwhen kd3a, 0, 0, -4.3, 0, 0
DRONE4:
if gkx4 == 1 kgoto DONE
kd4 trigger gkd4, .5, 0
schedkwhen kd4, 0, 0, 4.4, 0, -1, 1300, gktbl+1, 5, $BOCT.(gkoc4), gknu4, gkde4, giofs
kd4a trigger gkd4, .5, 1
schedkwhen kd4a, 0, 0, -4.4, 0, 0
DONE:
endin
; turn off drone buttons when Stop button is pressed
instr 5
FLsetVal_i 0, giAll
FLsetVal_i 0, gi1
FLsetVal_i 0, gi2
FLsetVal_i 0, gi3
FLsetVal_i 0, gi4
endin
; turn on drone buttons when All button is pressed
instr 6
gkdoff1 = 0
gkd1 = 1
gkd2 = 1
gkd3 = 1
gkd4 = 1
FLsetVal_i 0, giOff
FLsetVal_i 1, gi1
FLsetVal_i 1, gi2
FLsetVal_i 1, gi3
FLsetVal_i 1, gi4
endin
;---------------------------------------------------------------------------
; Risset harmonic arpeggio instrument, adapted from:
; ACCCI: 02_43_1.ORC
; timbre: tibetan chant
; synthesis: additive same units(02)
; basic instrument with minimal differences in frequency(43)
; arpeggio instrument by Risset
; source: Phase6, Lorrain(1980); Boulanger(1990): risset1.orc
; coded: jpg 9/93
;---------------------------------------------------------------------------
instr 4
idur = p3 ; duration
iamp = p4/9 ; amplitude
ifn = p5 ; function table number (waveform)
izch = p6 ; zak output channel
inum = p8
iden = p9
ifrac = inum/iden
ibase = p7
ifreq = ibase*ifrac ; pitch (base * (n/m))
print inum, iden, ifrac, ibase, ifreq
iflag = i(gkOfs)
if iflag == 1 igoto USE_OFS
ioff = 0
iamp2 = .75 ; scale down output if no offsets
igoto SET_OFS
USE_OFS:
iamp2 = 1
;ioff = p10 ; same offset for all
;ioff = ifrac*p10 ; proportional to interval
ioff = ((iden*2)/inum)*p10 ; inversely proportional to ratio
print ioff
SET_OFS:
ioff1 = ioff ; oscillator offset for arpeggio
ioff2 = 2*ioff ; .
ioff3 = 3*ioff ; .
ioff4 = 4*ioff ; .
if gkdoff1 == 0 goto skip
turnoff
skip:
FLsetVal_i 0, giOff
ae linenr iamp, 1, 3, .03 ; simple envelope
a1 oscil ae, ifreq, ifn
a2 oscil ae, ifreq+ioff1, ifn ; nine oscillators with the same envelope
a3 oscil ae, ifreq+ioff2, ifn ; and waveform, but slightly different
a4 oscil ae, ifreq+ioff3, ifn ; frequencies, create harmonic arpeggio
a5 oscil ae, ifreq+ioff4, ifn
a6 oscil ae, ifreq-ioff1, ifn
a7 oscil ae, ifreq-ioff2, ifn
a8 oscil ae, ifreq-ioff3, ifn
a9 oscil ae, ifreq-ioff4, ifn
zaw (a1+a2+a3+a4+a5+a6+a7+a8+a9)*iamp2, izch
endin
;---------------------------------------------------------------------------
; mixer (adapted from Mikelson, "Modelling a Multieffects Processor")
; added 4 more channels and a simple reverb at the end
;---------------------------------------------------------------------------
instr 3099
asig1 zar p4
igl1 init p5*p6
igr1 init p5*(1-p6)
asig2 zar p7
igl2 init p8*p9
igr2 init p8*(1-p9)
asig3 zar p10
igl3 init p11*p12
igr3 init p11*(1-p12)
asig4 zar p13
igl4 init p14*p15
igr4 init p14*(1-p15)
asig5 zar p16
igl5 init p17*p17
igr5 init p17*(1-p18)
asig6 zar p19
igl6 init p20*p21
igr6 init p20*(1-p21)
asig7 zar p22
igl7 init p23*p24
igr7 init p23*(1-p24)
asig8 zar p25
igl8 init p26*p27
igr8 init p26*(1-p27)
asigl = asig1*igl1 + asig2*igl2 + asig3*igl3 + asig4*igl4 + asig5*igl5 + asig6*igl6 + asig7*igl7 + asig8*igl8
asigr = asig1*igr1 + asig2*igr2 + asig3*igr3 + asig4*igr4 + asig5*igr5 + asig6*igr6 + asig7*igr7 + asig8*igr8
irvtime = p28
irvfqc = p29
irvlev = p30
aoutl nreverb asigl, irvtime, irvfqc
aoutr nreverb asigr, irvtime, irvfqc
; outs asigl+(aoutl/irvlev), asigr+(aoutr/irvlev)
out asigl+(aoutl/irvlev) + asigr+(aoutr/irvlev)
zacl 0, 16
endin
</CsInstruments>
<csscore>
;---------------------------------------------------------------------------
; score
;---------------------------------------------------------------------------
; mixer
;
; channel 1: unused
; channel 2-5: drones
; channel 6-8: unused
;
;i 3099 0 3600 \
; 1 4 .5 \
; 2 1.5 .80 \
; 3 1.5 .20 \
; 4 1.5 .75 \
; 5 1.5 .40 \
; 6 0 .5 \
; 7 0 .5 \
; 8 0 .5 \
; 5 .3 6
i 3099 0 3600 \
1 4 .5 \
2 1.5 .5 \
3 1.5 .5 \
4 1.5 .5 \
5 1.5 .5 \
6 0 .5 \
7 0 .5 \
8 0 .5 \
5 .3 6
i 3 0 3600
e
</CsScore>
</CsoundSynthesizer>
</pre><br />
உசாத்துணைகள்:<br />
<a href="http://www.csounds.com">சி-சௌன்’ட்</a><br />
<a href="http://www.csounds.com/tutorials">பாடங்கள்</a><br />
<a href="http://www.freaknet.org/~martin/audio/csound/index.en.html">சில உதாரணங்கள்</a><br />
<a href="http://abcnotation.com/">abc இசைக் குறியீடு</a><br />
<a href="http://kneuro.net/abcsound/index.php?file=home.html">ABC-CSound பைத்தான் உதவியுடன் ABC to CSound</a><br />
<a href="http://carnatic2000.tripod.com/">கணினியில் கருநாடக இசை</a>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-29145729.post-74507583682118642010-03-16T22:20:00.003-04:002010-03-16T22:28:06.429-04:00அம்மா என்றழைக்காத உயிர் இல்லையா?கொஞ்சியது போதும் வா படிக்கலாம்.<br />
ஒரு படத்தில் பூனை மற்றொன்றில் பறவை.<br />
பூனை எங்கே காண்பி.<br />
பிரமாதம்.<br />
வீடு, கரடி, சிறுமி, வண்டி,....?<br />
வெற்றி புன்னகைதான். சரி சரி இதோ கை தட்டுகிறேன்.<br />
<br />
தலையைத் தொடு.<br />
சரி.<br />
மூக்கு?<br />
என் மூக்கை இல்லை. உன் மூக்கு எங்கே?<br />
கண், காது, பல், கால், வயிறு, முதுகு?<br />
எல்லாமே சரி.<br />
முடி?<br />
கண்ணே, அக்காள் சடையை இழுக்காதே விடு.<br />
<br />
செருப்பை எடுத்து வா.<br />
இதை குப்பையில் போடு.<br />
என் தங்கம் சொல்வதை எல்லாம் செய்கிறாயே. <br />
<br />
பாட்டு பாடணுமா? சரி என்று சைகை செய்,அப்போதுதான் பாடுவேன்.<br />
வண்டி சக்கரம் வட்டமிடும் வட்டமிடும் ...<br />
...<br />
வண்டியில் பாப்பா கத்துக் கத்தும் வே - வே - வே.<br />
<b><i>வே ஏஏஏஏஏ.</i></b><br />
சரி சிரித்தது போதும், நிறுத்து. இதற்குத்தானே என்னைப் பாடச் சொன்னாய்.<br />
<br />
இது கேட்கும் எழுத்துக்களைத் தொடு.<br />
”Can you find the letter B? ... D, G ..”<br />
”Can you find the shape Circle? ... Square, triangle ..”<br />
”Can you find the number 9? ... 3, 7 ..”<br />
<br />
எல்லாவற்றுக்கும் வெற்றி மணி அடிக்கிறதே. நான் தவறாக புரிந்துகொண்ட எழுத்துக்களைக்கூட நீ சரியாக கேட்டுக்கொண்டாயே.<br />
”Can you find the letter L?”<br />
<b><i>க்ர்ர்ர்</i></b><br />
சரி சரி சிங்கம் போல கர்ச்சித்தது போதும். அடுத்த எழுத்துக்குப் போகலாம்.<br />
<br />
எங்கே சொல். அம்மா.<br />
<b><i>அப்பா.</i></b><br />
..ம்கூம். ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ.<br />
<b><i>அப்பா.</i></b><br />
<br />
அக்கா.<br />
<b><i>ங்கா.</i></b><br />
<br />
முறைக்காதே அம்மா. இவன் எழுந்து நடப்பான் என்று நினைத்தோமா? இப்போது ஓடி விளையாடுகிறானே. மெதுவாக பேசட்டும் போதும்.குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-29145729.post-17001797373568849812010-03-14T19:46:00.038-04:002010-03-16T09:16:45.733-04:00மின் சுரிப்பறனை - ஒரு நுட்பியல் அற்புதம்குறிப்பு நேரம் இல்லாதவர்கள் கடைசியில் இருக்கும் படத்தை மட்டும் பார்த்தால் போதும்.<br /><br />நண்பரின் வீட்டில் கையடக்க சுரிப்பறனை (helicopter) ஒன்றை பார்த்ததிலிருந்து அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் பற்றிக்கொண்டது.<br /><br />அவர் வைத்திருந்தது, பெல்ஜியம் நாட்டு பொறியாளர் அலெக்ஸான்டர் வான் ட ரொஸ்டைன் வடிவமைத்த மாதிரி பிகூ-சி (Picoo-Z). இந்த வடிவமைப்பு 2006ல் உலகிலேயே சிறிய மாதிரி சுரிப்பறனை என்று கின்னஸில் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 10 கிராம் எடை, 170mm (நுல்லி மாத்திரி) நீளம் கொண்ட பறனை, கட்டுக்கோல் என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து விலை 20 லிருந்து 40 வெள்ளி (US$)வரை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnXEAWw6qziT2LX9jeZBjXPQL0DUcC0jzz_AIR1M66kUm5A4E46izGzuGGEX46xelVzNVa4zU7ded6-t9dF_ejLsEdublW8IKkilf6W6uCsbqxCY8eBc1Oer6NTrkRJFmzACpp/s1600-h/picooz.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnXEAWw6qziT2LX9jeZBjXPQL0DUcC0jzz_AIR1M66kUm5A4E46izGzuGGEX46xelVzNVa4zU7ded6-t9dF_ejLsEdublW8IKkilf6W6uCsbqxCY8eBc1Oer6NTrkRJFmzACpp/s320/picooz.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448653564116428290" /></a><br /><br />இந்த மாதிரியில் சில அசௌகரியங்கள் இருந்தன. மின்கலம் தீர்ந்து போனால் மீண்டும் நிரப்பிக்கொள்ள 10 - 15 நிமிடங்கள் வரை ஆயிற்று. மற்றும் தொலைக்கட்டு இரண்டு அலைவரிசைகள் மட்டுமே கொண்டதால், ஊர்தியின் நகர்வை முழுமையாக கட்டுப்படுத்த இயலாது. ஒரு அலை வரிசையில் மேல்கீழாக செலுத்தும் கட்டளைகளும், மற்றொன்றில் இடவலமாக திருப்பும் கட்டளைகளையும் மட்டுமே அனுப்ப முடியும். முன் பின்னாக போக வைக்க முடியாது. அதற்கான மோதுஅலை உண்டாக்கும் பாகங்களும் (swashplate assembly) பறனையில் இல்லை.<br /><br />எனவே வேறு நல்ல மாதிரிகள் உள்ளனவா என்று தேடினேன். பல நிறுவனங்கள் நூற்றுக் கணக்கான மாதிரிகளை விற்பனைக்கு வைத்துள்ளதைக் கண்டேன். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, அலென் என்ற தைவான் நிறுவனத்தின் டி-ரெக்ஸ் 250 (T-Rex 250) மாதிரிதான் ஆகச் சிறந்ததாக பட்டது. இதுபோன்ற முப்பரிமான வகைகள் தலைகீழாகக்கூட பறக்கும். இணைய குழுமங்களில் எல்லோரும் எதை எடுத்தாலும், இந்த நிறுவனத்தின் மாதிரிகளோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். முப்பரிமான மாதிரிகளைக் கட்டுப்படுத்த மற்ற எளிய மாதிரிகளைப் சில ஆண்டுகள் பயன்படுத்திய முன் அனுபவம் வேண்டும் என்பதை நான் நம்பவில்லை. அது என் பெரும் தவறு.<br /><br />டி-ரெக்ஸ் வெறும் உதிரி பாகங்களாகத்தான் கிடைக்கிறது. ஒரு பறனைக்கு வேண்டிய பாகங்களுக்கு விலை US$299.99 மட்டும். இதில் மின்னணுவியல் பாகங்கள் சேர்த்தி இல்லை. அதற்கு மேலும் 150 வெள்ளி ஆகலாம். ரேடியோ அலைபரப்பி (radio transmitter)க்கு மேலும் நூற்றுக்கணக்கான வெள்ளிகள். திருப்புளி, இதர உபகரணங்கள் தனி.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhey52J_0ajyZ4ogMYldktUXYyk-cu_G0WnxODMQic3KraM4AOxXLUzedCm6Srg_qwYTgGaTwEjTcxURexLw1feESFrYXxme-j8hvSa4yDYoqMhOL8ph06Ml9MbO_Oa3bE9qich/s1600-h/trex250.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 144px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhey52J_0ajyZ4ogMYldktUXYyk-cu_G0WnxODMQic3KraM4AOxXLUzedCm6Srg_qwYTgGaTwEjTcxURexLw1feESFrYXxme-j8hvSa4yDYoqMhOL8ph06Ml9MbO_Oa3bE9qich/s320/trex250.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448704457069389586" /></a><br /><br />நாமேதான் பாகங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பொருத்தமான மின்னோடி (motor), நகர்த்திகள் (servos), வானலை ஏற்பிடம் (radio receiver), மின்கலம் ஆகியவற்றை தேடி வாங்கிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் படித்து விட்டு இது நமக்கு கட்டுபடியாகாது என்று ஒதுங்கிக்கொண்டேன். சில முக்கியமான பாகங்களைக் கீழே காண்க.<br /><table><br /><tr><td>அலை பரப்பி - பொருத்தான்களின் நகர்வுக்கேற்றபடி சமிக்சைகளை அனுப்புகிறது</td><td><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqVp8LMg2OfMag6nUhPQavf3oXDHTI0ASUgQNyh0-_HExPU_MFEnuJet7SGu_cJ68XQSnhEBPV9InYVrbpCX6xskULW4iOPjHwYMmT7bZTfB2K0BnW8VTxNo4098MdVOsr-KqR/s1600-h/dx7.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 299px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqVp8LMg2OfMag6nUhPQavf3oXDHTI0ASUgQNyh0-_HExPU_MFEnuJet7SGu_cJ68XQSnhEBPV9InYVrbpCX6xskULW4iOPjHwYMmT7bZTfB2K0BnW8VTxNo4098MdVOsr-KqR/s320/dx7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449044174321267266" /></a></td></tr><br /><tr><td>அலை ஏற்பி - சமிக்சைகளை வாங்கி தன்னோடு இணைந்துள்ள நகர்த்திகளையும் மின்னோடியையும் கட்டுப்படுத்துகிறது</td><td><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfy9rLGnXsruFMzdwzxEr2Vv57Fkesfs4mEWaC9HTy_KILRYasMniNXRMOgd_ebZqEf7YGiZKRp2ZMU3vbPQGrO7ca8Ddev_hrhwItp6ufik-6NwqSiCD0w9Z1y91KUkOgoDD1/s1600-h/receiver.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 168px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfy9rLGnXsruFMzdwzxEr2Vv57Fkesfs4mEWaC9HTy_KILRYasMniNXRMOgd_ebZqEf7YGiZKRp2ZMU3vbPQGrO7ca8Ddev_hrhwItp6ufik-6NwqSiCD0w9Z1y91KUkOgoDD1/s320/receiver.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449045776524690930" /></a></td></tr><br /><tr><td>நகர்த்திகள் - மோதுஅலை தட்டோடு இணைக்கப்படுகின்றன</td><td><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7OXnebaAyGnzt8kv4n-zgvClwp1h1kqvR7ZQbhEgLbWpjYYivIsHq6vguxrLbu4LO4cmgobxRpuUX85Bw5H8TzkfObPUFsxrzmc5nJcHlDC5HexxvRyGcZVSQuS7-cGo7L6e6/s1600-h/servos.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 179px; height: 145px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7OXnebaAyGnzt8kv4n-zgvClwp1h1kqvR7ZQbhEgLbWpjYYivIsHq6vguxrLbu4LO4cmgobxRpuUX85Bw5H8TzkfObPUFsxrzmc5nJcHlDC5HexxvRyGcZVSQuS7-cGo7L6e6/s320/servos.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449046239248442082" /></a></td></tr><br /><tr><td>மின்னோடியும், மின்னணு வேகக் கட்டுப்பாட்டகமும்</td><td><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi87rHhMV5DJrrNgGLW3BfsJmHDjrY50PK8fl6zxwLRowJOPYJKbHc-ZWxtligRaiLH8Te8r-rHoO80o0DQEmotj3lC7xqdI8ClsEp2slh8BsDuFbLAgWylBB2H93nnbEzqOwQo/s1600-h/motor.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 132px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi87rHhMV5DJrrNgGLW3BfsJmHDjrY50PK8fl6zxwLRowJOPYJKbHc-ZWxtligRaiLH8Te8r-rHoO80o0DQEmotj3lC7xqdI8ClsEp2slh8BsDuFbLAgWylBB2H93nnbEzqOwQo/s320/motor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449046579802939426" /></a></td></tr><br /><tr><td>மோதுஅலை தட்டு</td><td><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFvX2UK-f2sc_1uc9alxxtXwnh1N0OYikW6jcLD4K73twqInak494aBoIBtBDjtOEnl8-OGvW2Z4zaAMIVN4o3Ib69k8dsx2HmRw6iBYaVhqImgqEGwTwnv9xbisi7OJj_927L/s1600-h/f33.gif"><img style="cursor:pointer; cursor:hand;width: 315px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFvX2UK-f2sc_1uc9alxxtXwnh1N0OYikW6jcLD4K73twqInak494aBoIBtBDjtOEnl8-OGvW2Z4zaAMIVN4o3Ib69k8dsx2HmRw6iBYaVhqImgqEGwTwnv9xbisi7OJj_927L/s320/f33.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449057712960724082" /></a></td></tr><br /></table><br /><br />இவ்வளவு சிரமப்பட்டு செய்துவிட்டு செலுத்தத் தெரியாமல் மோதி நொறுங்கிவிட்டால் காசுக்கும் நேரத்திற்கும் கேடல்லவா? இடையில், குறைந்த செலவில் நுரைஅட்டைகளில் நாமே பறனை செய்து கொள்ள உதவி செய்யும் இணைய தளங்களைப் பார்த்து ஆசைத் துளிர்விட மேலும் கொஞ்சம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். இந்தப் பறனைகளை செய்ய பட்டம் செய்வதை விடக் கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதிகப்படியாக மின்னணு சாதனங்கள் பொருத்த வேண்டும் அவ்வளவே. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.<br /><br /><object width="640" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/qz7aLsigvxw&hl=en_GB&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/qz7aLsigvxw&hl=en_GB&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"></embed></object><br /><br />ஆனால், விமானங்களுக்கு பறக்க பெரிய வெட்டவெளி வேண்டும். (எங்கள் ஊரில் இதற்கென்றே இரண்டு ஓடுதளங்கள் இருக்கின்றன) மேலும் சரியாக செலுத்த பழகவேண்டும். இல்லை என்றால் நம்மை விட்டு எங்கோ கண்காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு காடுமேடெல்லாம் போகவும் முடியாது. எனவே அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. வீட்டிற்குள்ளேயே கற்றுக்கொள்ள வேண்டுமானால் சுரிப்பறனைதான் சரி என்று தீர்மானம் ஆகியது.<br /><br />அப்போதுதான் முப்பரிமான மாதிரி ஒன்று பறக்க தயார் நிலையில் கட்டுக்கோலுடன் விலை US$ 170க்கு என்ற விளம்பரத்தைப் பிரபலமான ஒரு இணைய தளத்தில் பார்த்ததும் அவக்கர கதியில் வாங்க ஆணை அனுப்பிவிட்டேன். அது ஒரு குப்பை என்று அடுத்த நாள்தான் தெரிந்தது. அந்த நிறுவனம், கொடுத்த ஆணையைத் திரும்பப் பெற அனேக கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. வேலைப் பழுவில், அதை திரும்பப் பெற இயலவில்லை.<br /><br />சுரிப்பறனை எதிர்பார்த்ததைப் போலவே தரக்குறைவாக செய்யப்பட்டிருந்தது. நான் நினைத்ததை விட பெரிய அளவு. ஒரு அடி நீளம் இருந்தது. வீட்டிற்குள்ளே ஓட்ட முடியாது. என்ன குறை சொல்லி திருப்பித் அனுப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். வார இறுதிநாள் ஒன்றில் சகல முன்னேற்பாடுகளுடன் வெறுமனே சோதிக்க ஆரம்பித்தேன். பறனை எழும்பிவிடாமல் இருக்க தரையோடு சேர்த்து பற்றுக்குறடு இன்னும் சிலவற்றை பாரமாக அதன் கால்பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டேன். முதலில் மின்கலத்தை இணைத்தேன். கட்டுக்கோலில் ஒரு குச்சியை நகர்த்த, மோது அலைத்தட்டு அதே திசையில் சரியாக நகர்ந்தது.<br /><br />சுரிப்பறனை என்பது அடிப்படையில் காற்றாடி பொருத்தப்பட்ட கல் போன்றதுதான். கல்லைப் பறக்கச் செய்யும் சூட்சுமங்கள் யாவும் காற்றாடியின் தகடுகள் சுற்றும்போது அவற்றின் பரிமானத்தை திருகுவதில் உள்ளன. கீழே உள்ள படம் மோதுதட்டு அதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காட்டுகிறது.<br /><br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/xUmmnSvzG1o&hl=en_GB&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/xUmmnSvzG1o&hl=en_GB&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br />என் மகனும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான். காரிக்கிழமையில் மனையாளும், மகளும் வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தார்கள். என் மகன் இமைப்பொழுதில் மற்றொரு குச்சியை தட்டிவிட, பறனையின் மின்னோடி அசுரவேகத்தில் சுழலத் தொடங்கியது. என்ன ஏதென்று எத்தனிப்பதற்குள் என் இடக்கையில் பலத்த அடி. இறக்கைகள் உடைந்து தூரேபோய் விழுந்தன. கையில் நல்ல சிறாய்பு, இரண்டு விரல்களில் நகக்கண்கள் கொஞ்சம் பெயர்ந்துபோய் இருந்தது. அதிட்டவசமாக என் மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை.<br /><br />அப்படியும் என் முயற்சியில் சற்றும் தளரவில்லை. வீட்டிற்குள்ளே உபயோகிக்கும்படி எது சரியான மாதிரி என்று ஆராய்ந்து நான் அறிந்தது இ-ஃபிளைட் நிறுவனத்தின் Blade mCX (micro co-axial என்பதின் சுருக்கம்). இந்த மாதிரியை ஒரு நுட்பியல் அற்புதம் எனலாம். பறக்க தயார் நிலையில், கட்டுக்கோலுடன் US$120 க்கு கிடைக்கிறது. உதிரி பாகங்கள் உள்ளூர்க் கடைகளிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன. ஆரம்பகாலப் பயிற்சியாளர்களுக்கு மிகவும் பொருத்தமான மாதிரி. கட்டுக்கோல் நான்கு அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது. மேல்/கீழ், இட/வல திருப்பம், முன்/பின், இட/வல சாய்மானம் என்று நான்கு தளங்களில் கட்டுப்படுத்தலாம். கட்டுப்பாட்டை விட்டு கைகளை எடுத்துவிட்டால் நின்ற இடத்திலேயே பறக்கும். மின்கலங்களுக்கு தனி நிரப்பி இருக்கிறது. 5 மின்னணுவியல் பகுதிகள் மற்றும் நகர்த்திகளை ஒன்றாக சேர்த்ததால் பாகங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. நாமே எளிதாக செப்பனிட்டுக் கொள்ளலாம். தேவையான ஒரே ஒரு திருப்புளியும் சேர்த்தே தருகிறார்கள். <br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0tVL3YC7_DfqQFt6haWT3rh8T0r3O7xQnV2gF1CXYvV-PhAqj5tL3f-madtTGziDHgbYHGPSSId7kLxKBs_747O6iSM7y3E0asZJrhJM_wzm4iMe6qyrMSdeaI-Egx8H7b8p-/s1600-h/mcx.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0tVL3YC7_DfqQFt6haWT3rh8T0r3O7xQnV2gF1CXYvV-PhAqj5tL3f-madtTGziDHgbYHGPSSId7kLxKBs_747O6iSM7y3E0asZJrhJM_wzm4iMe6qyrMSdeaI-Egx8H7b8p-/s320/mcx.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448704144317857986" /></a><br /><br />ஆனாலும் மீண்டும் பணத்தை விரயமாக்காமல், இம்முறை குழுமத்தில் பயன்படுத்திய சுரிப்பறனையை குறைந்த விலையில் (அஞ்சல் செலவு, கூடுதலாக இரண்டு மின்கலங்களும் சேர்ந்து US$68) வாங்கினேன்.<br /><br />இந்த மாதிரியில் ஒரே குறை ஒரு பாகம் (inner shaft - $6.00) மட்டும் எளிதாக உடைந்து போகிறது. இரண்டுமுறை மாற்றி விட்டேன். அதை பலப்படுத்த பார்த்துக் கொண்டிண்டிருக்கிறேன். எங்கேயும் மோதாமல் ஓட்டிப் பழகிக் கொள்ள வேண்டும். <br /><br />இது நீங்களோ உங்கள் குழந்தைகளோ தொலைக்காட்சிக்கு நேரம் செலவழிப்பதை கணிசமாகக் குறைக்கும் என்று உறுதி கூறுவேன். வரும் கோடை விடுமுறையில் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுப்பூர்வமான பொழுதுபோக்காக அமையலாம். E-Flite வேறு புது சுரிப்பறனை மாதிரிகளை (mSR) அறிமுகப்படுத்தி உள்ளது. எனக்கு அதைப்பற்றி நேரடி அனுபவம் இல்லை. ஆனால் நான் கேள்விப்பட்ட வரையில் அது முதல்முறையாக பயில்பவர்களுக்கு ஏற்றதல்ல என்று அறிகிறேன்.<br /><br /><object width="640" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/ImFsecQw4Bk&hl=en_GB&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ImFsecQw4Bk&hl=en_GB&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"></embed></object><br /><br />உசாத்துணைகள்:<br /><br />நுரை அட்டை மாதிரிகள்: <a href="http://www.rcgroups.com/foamies-scratchbuilt-428/">Foamies (Scratchbuilt)</a><br /><br />விற்பனைக்கு: <a href="http://www.rcgroups.com/aircraft-electric-helis-fs-w-44/">Aircraft - Electric - Helis (FS/W)</a><br /><br />மின் பறனைகள் பற்றிய இணையக் குழுமம்: http://www.rcgroups.com/forums/index.php<br /><br />புதிய Blade mCX கிடைக்கும் இடம்: http://www.horizonhobby.com/<br /><br />மறுத்தல்:<br />எனக்கும் இங்கே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-29145729.post-85638919465331021442010-03-13T16:40:00.002-05:002010-03-13T16:49:36.785-05:00சங்கத்தைக் கலைச்சுட்டாங்களா?வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ன ஆச்சு, யாருக்காவது தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன் என் பதிவில் கொடுத்திருந்த <a href="http://vavaasangam.blogspot.com/">இணைப்பில்</a> புது <a href=""http://www.vvsangam.com/>இடத்திற்கு www.vvsangam.com</a> போய்விட்டதாக அறிவிப்பு இருக்கிறது. அந்த இணைப்போ <a href="">போங்கப்பா (godaddy.com)</a> கடைக்கு போகிறது.குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-29145729.post-81106469257343273242010-03-13T15:59:00.006-05:002010-03-29T09:08:06.687-04:00பதில் இடுகை; ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்புபித்தனின் வாக்கு பதிவில் படித்த <a href="http://imsaiilavarasan.blogspot.com/2010/03/blog-post_12.html">ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பும், பச்சடியும்</a> சமையல் குறிப்பின் அடிப்படையில் தங்கமணி செய்த புளிக்குழம்பு.<br />
<br />
சாப்பிட நன்றாக இருந்தது. <br />
<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPSLBDQi9euH5IMsS5i8GCBlSbQOnlgT78hHxqEmhc9EKCe-DuaPMeJyKhgiR0IkQWnRikQKSgMUaQSPu2fu0HKTso6KE5xgpTEknF3DwYtu3vy-w3ZStIOkAePW3yb39Ybz0u/s1600-h/orange-kulambu.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPSLBDQi9euH5IMsS5i8GCBlSbQOnlgT78hHxqEmhc9EKCe-DuaPMeJyKhgiR0IkQWnRikQKSgMUaQSPu2fu0HKTso6KE5xgpTEknF3DwYtu3vy-w3ZStIOkAePW3yb39Ybz0u/s320/orange-kulambu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448228069663429490" /></a>குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.com6