ஜப்பானின் தாழ்த்தப்பட்ட மக்கள்

Sunday, June 04, 2006

ஜப்பானிய இனமான புரக்கு (Buraku) என்ற தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி நோபல் பரிசு பெற்ற மூலக்கருவியல் விஞ்ஞானி ஜேம்ஸ் டி. வாட்சன்-இன் டி-என்-ஏ (James D. Watson - D N A the Secret of Life) புத்தகத்தில் படித்தேன். அவர் எப்படி புத்திகூர்மைக்கு மரபணுக்கள் சிறிதளவே காரணமாகின்றன, சமூகச்சூழல்தான் ஒருவரின் உயர்வுக்கு பெரும்காரணமாகிறது என்பதை விளக்க புரக்கு இனத்தவரை உதாரணம் காட்டுகிறார்.

என்னால் இயன்ற மொழிபெயர்ப்பில் புத்தகத்தின் 380ம் பக்கத்திலிருந்து தொகுக்கப்பட்ட விபரங்களை கீழே காண்க.

இச்சந்ததியினர் சமூகத்தின் "அசுத்தமான", மிருகங்களை வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய விதிக்கப்பட்டனர். ஜப்பானியர்கள் நவீனமடைந்தாலும்கூட, இப்போதும் புரக்கு இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதாலும் முன்னேரவிடாததாலும், அறிவுத்திறன் அளவீடுகளில் சராசரியாக 10லிருந்து 15ந்து புள்ளிகள் நாட்டின் சராசரி அளவீட்டைக்காட்டிலும் குறைவாகவே பெறுகின்றனர்.

அவர்கள் மரபணுரீதியில் குறைபாடுடையவர்களா அல்லது அவர்களின் அறிவுத்திறன் அளவீடு என்பது வெறும் தாழ்த்தப்பட்ட நிலையின் பிரதிபலிப்பா என்ற கேள்விக்கு பிந்தையதுதான் காரணம் என்று புலப்படுகிறது: அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த புராக்கு இனத்தவர், எனைய ஜப்பானிய அமெரிக்கர்கள் போலவே பாகுபாடின்றி நடத்தப்படுவதால் தாய்நாட்டில் இருக்கும் அவர்களின் அறிவுத்திறன் குறைபடு அமெரிக்காவில் காணப்படுவதில்லை என்கிறார்.

0 மறுமொழிகள்:

Post a Comment