அம்மா என்றழைக்காத உயிர் இல்லையா?

Tuesday, March 16, 2010

கொஞ்சியது போதும் வா படிக்கலாம்.
ஒரு படத்தில் பூனை மற்றொன்றில் பறவை.
பூனை எங்கே காண்பி.
பிரமாதம்.
வீடு, கரடி, சிறுமி, வண்டி,....?
வெற்றி புன்னகைதான். சரி சரி இதோ கை தட்டுகிறேன்.

தலையைத் தொடு.
சரி.
மூக்கு?
என் மூக்கை இல்லை. உன் மூக்கு எங்கே?
கண், காது, பல், கால், வயிறு, முதுகு?
எல்லாமே சரி.
முடி?
கண்ணே, அக்காள் சடையை இழுக்காதே விடு.

செருப்பை எடுத்து வா.
இதை குப்பையில் போடு.
என் தங்கம் சொல்வதை எல்லாம் செய்கிறாயே.

பாட்டு பாடணுமா? சரி என்று சைகை செய்,அப்போதுதான் பாடுவேன்.
வண்டி சக்கரம் வட்டமிடும் வட்டமிடும் ...
...
வண்டியில் பாப்பா கத்துக் கத்தும் வே - வே - வே.
வே ஏஏஏஏஏ.
சரி சிரித்தது போதும், நிறுத்து. இதற்குத்தானே என்னைப் பாடச் சொன்னாய்.

இது கேட்கும் எழுத்துக்களைத் தொடு.
”Can you find the letter B? ... D, G ..”
”Can you find the shape Circle? ... Square, triangle ..”
”Can you find the number 9? ... 3, 7 ..”

எல்லாவற்றுக்கும் வெற்றி மணி அடிக்கிறதே. நான் தவறாக புரிந்துகொண்ட எழுத்துக்களைக்கூட நீ சரியாக கேட்டுக்கொண்டாயே.
”Can you find the letter L?”
க்ர்ர்ர்
சரி சரி சிங்கம் போல கர்ச்சித்தது போதும். அடுத்த எழுத்துக்குப் போகலாம்.

எங்கே சொல். அம்மா.
அப்பா.
..ம்கூம். ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ.
அப்பா.

அக்கா.
ங்கா.

முறைக்காதே அம்மா. இவன் எழுந்து நடப்பான் என்று நினைத்தோமா? இப்போது ஓடி விளையாடுகிறானே. மெதுவாக பேசட்டும் போதும்.

2 மறுமொழிகள்:

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

குலவுசனப்பிரியன் said...

நன்றி மேகருன்னிஷா. தனி மடல் அனுப்பியுள்ளேன். உங்கள் மின்னஞ்சல் முகவரியை இணைய தளங்களில் வருவதைத் தவிருங்கள். பின்னூட்டத்தை எப்படி திருத்தம் செய்வது என்று தெரியவிலை. தெரிந்துக்கொண்டதும் உங்கள் முகவரியை மறைத்து வைக்கிறேன்.

Post a Comment