உனக்கும் எனக்கும்

Tuesday, April 17, 2007

என் தோழியின் தம்பிக்கு சரியாக காது கேட்காது. ஒருத்தருக்கு ஒருத்தர் நன்கு அன்பு செலுத்துவார்கள். இணை பிரியாத நண்பர்கள் போல கிண்டலும் கேலியுமாக பேசிக் கொள்வார்கள்.

ஒருமுறை நாங்கள் எல்லோரும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஏதோ கோளாறினால் ஒலிபெருக்கியில் தடையேற்பட்டது. அதை சரி செய்தபின், தடைபட்ட இடத்திலிருந்து படத்தை மீண்டும் திரையிட்டார்கள்.

தம்பிக்குப் புரியவில்லை. அக்காவிடம் ஏன் படத்தை மீண்டும் போடுகிறர்கள் என்று கேட்டதற்கு அக்காள் சொன்னபதில், "முதலில் போட்டது உனக்கு, இரண்டாவது போட்டது எங்களுக்கு".

இது என் நண்பன் சொல்லக் கேட்டது.

இப்படி பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து உச்சுக் கொட்டுவதைவிட அவர்களோடு இயல்பாக பழகுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

0 மறுமொழிகள்:

Post a Comment