பொடி நடையாப் போறவரே

Tuesday, April 17, 2007

எப்பவும் அமைதியை விரும்பும் நம்ம தல, எந்த வம்புக்கும் போகலைன்னாலும் அதுவே அவரைத் தேடி வருது இல்லையா? அந்த ராசிக்கு என் மேலேயும் ரொம்ப பாசம். அவ்...

ஒருவாட்டி, சென்னையில, அண்ணா சாலைக்கிப் பக்கமா சிவனேண்ணு நடைபாதயில போய்கிட்டு இருக்கேன். திடீர்னு பொம்பளப் பசங்க எல்லாம் எதிர்ல ஓட்டமா ஓடியாராங்க. பின்னாடி ஒரு பய, காலு ரெண்டும் முடமா இருக்கான், அவன் பலகயில உக்காந்து ரொம்ப வேகமா உருட்டிக்கிட்டுத் துரத்திக்கிட்டு வற்றான்.

ரவுடிப் பய, நம்மூரா இருந்தா விட்டுருவமா? புது இடம். கூட்டாளிங்களும் ஒருத்தனும் கூட இல்ல. சரி நம்ம வீரத்த இவங்கிட்ட காட்டுனா நமக்குத்தான் அசிங்கம். நமக்கெதுக்குப்பா வம்புன்னு அவசரமா கீழ எறங்கி சாலையோரமா நடக்கிறேன். ரெண்டடிதான் வச்சிருப்பேன். எதிர்ல அலங்கோலமா ஒரு பொண்ணு. கை ரெண்டையும் விரிச்சிக்கிட்டு "பொடி நடையாப் போறவரே" ன்னு, பாடிக்கிடே கட்டிப்பிடிக்க வந்துட்டாயா. நான் சட்டுன்னு குனிஞ்சி கையில சிக்காம தப்பிச்சேன். அதெ நெனச்சா இன்னும் குலெ நடுங்குதுடா ஆத்தி. இவ துரத்தித்தான் அந்தப் பய ஓடியிருக்கான்.

பாவம் இப்பிடியா பொம்பளப் புள்ளெய தனியா விடுவாங்க? நம்ம தலதான் ஏதும் நிதி ஒதுக்கி, சட்டம் போடணும்.

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

0 மறுமொழிகள்:

Post a Comment