ஊதுவத்திப் பேய்

Monday, April 16, 2007

கோவை விடுதியில் தங்கி பட்டயப் படிப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அரசினர் கல்லூரி விடுதியாதலால், மிதமிஞ்சியக் கட்டுப்பாடுகள் இருக்காது. எப்போதும் ஆரவாரமாயிருக்கும் இடத்தில் தேர்வுக் காலங்களில் மயான அமைதி நிலவும். சில மாணவர்கள் சரியாக சாப்பிடாமல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, இரவில் மோகினிப் பிசாசு அமுக்குவதாக எண்ணி அலறிக்கொண்டு ஓடுவது அடிக்கடி நடக்கும். மற்ற மாணவர்களும் அதைப் பார்த்து பயந்துபோய் இருப்பார்கள்.

அதில் வீரம் பேசிய ஒரு அறை நண்பனை அச்சுருத்த வந்ததுதான் ஊதுவத்திப் பேய். நள்ளிரவு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை, இரும்புக் கட்டிலின் கிடுகிடு ஆட்டமும், சத்தமும் திடுக்கிட்டு எழ வைத்தன. கண்ணெதிரே பயங்கர நிழல் உருவம் அகோரப் பற்களுடன் வாயில் அனல் கக்கிக் கொண்டிருந்தது. ஆ.. ஆ.. என்று கத்தி அப்படியே உறைந்து போய்விட்டான். சந்திரமுகியில் நம்ம தலெக்கி, கோவாலுவைத் தேடிப்போய், நேர்ந்த கதியிலும் அது கொடுமை.

கொள்ளி வாய் செய்முறை:
ஊதுவத்தி கங்கு நாக்கில் படாமல் பல்லால் கடித்துக் கொண்டு, வாய் மட்டும் தெரியும்படி கருப்புப் போர்வையால் போர்த்திக் கொள்ளவும். அதிகப்படியான தாக்குதலுக்கு, பல்லைக் கடித்தபடியே ஊதவும்.

இதில் ஊதுபத்தி உபயம் மட்டும்தான் அடியேன்.
வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டிக்காக.

2 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

HajasreeN said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி..

Post a Comment