2007 பொங்கல்விழா கவிதைப்போட்டி

Sunday, January 21, 2007

தமிழ்மன்றத்தின்சார்பாக நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் என்னுடையப்பங்களிப்பாக கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஒன்றுவீதம் இக்கவிதைகளை அனுப்பினேன்.


கதிரவன்
------------
எங்கள் வாழ்வின் ஆதாரம்,
நம்பிக்கையின் அடையாளம்.
எங்களுக்கு உணர்வூட்டும் அமுதாய்,
இருள் போர்த்தும் எம்தாய்.

விதைப்பது எம் வயலில்,
விளைவது உன் செயலில்.
மறந்து மக்கள்,
துவள்வது கடும் வெயிலில்.
மரம் பறித்து
உளல்வது பனிப் புயலில்.

உன் இளஞ்சூடே எங்கள் உயிர்
உன் ஒளிக்கீற்றே எங்கள் உணவு.
உன் திறமே பொறியுணர்வு
உன் வரமே சுய அறிவு.

சுமைதாங்கி
----------------
பெற்றோர்சுமை, பெற்ற மக்களும் சுமை.
உடல்சுமை, உடமையும் சுமை.
செய்தன சுமை, செய்யாதனவும் சுமை.
இவற்றோடு என்னையும் சுமப்பவன் இறைவன்.


இல்லறம்
------------
நீருள்ளும் விளக்கெரித்தோம்
குளிர் நிலவும் கண்டு வந்தோம்.
ஆனால் உள்ளத்துள் ஒளியூட்டும்
இல்லறம் இழந்துவிட்டோம்.

0 மறுமொழிகள்:

Post a Comment